Skip to main content

Doctor Vikatan: வேலை ஸ்ட்ரெஸ்... ஒரு நாளைக்கு 8 முதல் 9 காபி, டீ... ஏதேனும் பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 27. ஒரு நாளைக்கு 8 -9 காபி அல்லது டீ குடிக்கிறேன். அதைக் குறைக்க முடியவில்லை. வேலை ஸ்ட்ரெஸ், நைட் ஷிஃப்ட் போன்ற காரணங்களால் இதைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. ஒருநாளைக்கு எத்தனை காபி, டீ எடுத்துக்கொள்ளலாம்...?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் 

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை

பரீட்சைக்குப் படிக்க வேண்டும் என்பதற்காகவோ, முக்கியமான வேலை இருக்கிறது, அதை முடிக்க வேண்டும் என்பதற்காகவோ சிலர் நேரம்கெட்ட நேரத்தில் காபியோ, டீயோ குடிக்க விரும்புவார்கள். காபியிலும் டீயிலும் கஃபைன் (caffeine) என்ற கெமிக்கல் இருக்கிறது.

கஃபைன் என்ற கெமிக்கல் நம் மூளையில் வினைபுரியும். தூக்கத்துக்குக் காரணமான கெமிக்கல்களை  அது குறைக்கும்.  அதனால் நாம் அலெர்ட் ஆக இருப்போம். நம்முடைய செயல்பாடுகள் சற்று சுறுசுறுப்பாக இருப்பதாக உணர்வோம். ஆனால், ஒருநாளைக்கு இத்தனை காபி, டீக்கு மேல் குடிக்கக்கூடாது என்றொரு கணக்கு இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் ஒருநாளைக்கு 400 மில்லிகிராம் வரை கஃபைன் எடுத்துக்கொள்ளலாம். 

காபி, டீ

ஒரு இன்ஸ்டன்ட் காபியில் 50 முதல் 150 மில்லிகிராம் கஃபைன் இருக்கும். அதுவே ஃபில்டர் காபியில் அது 200 மில்லிகிராம் வரை இருக்கலாம். அதே மாதிரிதான் டீயிலும்.... ஒரு கப் டீயில் 100 முதல் 150 மில்லிகிராம் அளவுக்கு கஃபைன் இருக்கும். அப்படிப் பார்த்தால் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப்  காபி அல்லது டீ குடிக்கலாம். அதற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.

அப்படி அதற்கு அதிகமாக காபியோ, டீயோ குடித்தால் சிலருக்கு அது அடிக்ஷனாக மாறும். காபியோ, டீயோ குடிக்காதபோது ஒருவித படபடப்பு ஏற்படும். வயதானவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். அளவுக்கதிமாக காபி, டீ குடிப்பவர்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துகள், தாதுச்சத்துகள் உட்கிரகிக்கப்படுவதில் சிக்கல் வரலாம். கேஸ்ட்ரைட்டிஸ் என்கிற பிரச்னை வரலாம். எனவே, காபியோ, டீயோ... அளவைத் தாண்டாதவரை ஆபத்தானவை அல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...