Skip to main content

Doctor Vikatan: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாகவே இருப்பது ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு வழக்கத்தைவிட சற்று அதிகம் சாப்பிட்டாலே உடல் எடை ஏறிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் எடை ஏறாமல், ஒல்லியாகவே இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது...  இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.  

ஷைனி சுரேந்திரன்

உங்களுக்குத் தெரிந்தவர்களில் சிலர்  ஓரிடத்தில் நிற்காமல், உட்காராமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவர்களின் இந்தச் செயலை   'நான் -ஆக்டிவிட்டி எக்சர்சைஸ் தெர்மோஜெனசிஸ் ' (non activity exercise thermogenesis ) என்று சொல்கிறோம். இவர்களுக்கு வளர்சிதை மாற்றம் அதிகமாகவே இருக்கும். இவர்கள்  ஒல்லியாகவே  இருப்பார்கள்.

அடுத்து மரபியல் ரீதியாகவும் சிலர் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பார்கள். குடும்பத்தில்  அத்தனை பேரும் ஒல்லியாகவே இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு  தசைகளின் அடர்த்தி ( Muscle mass) அதிகமிருக்கும். தசை என்பது உடல் முழுக்க இருக்கும். அது சும்மாவே இருக்காது. எந்த நேரமும் எனர்ஜி கேட்டுக்கொண்டே இருக்கும்.  ஒருவரது உடலில் தசை அடர்த்தி அதிகமாக, ஆக, கொழுப்பின் அளவு குறையும். உடலளவில் பலமாகவும் உணர்வோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களின் நடையும், தோரணையும் கம்பீரமாகவே இருக்கும். தசை அடர்த்தி அதிகமிருப்பவர்கள், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு கொழுப்பும் கம்மியாகவே இருக்கும். 

muscle mass

தைராய்டு ஹார்மோன்  அதிகம் சுரக்கும் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்புள்ளவர்களும் ஒல்லியாக இருப்பார்கள்.  இன்னும் ஒரு பிரிவினர், என்னதான் விருப்பமான உணவு கொடுத்தாலும் அளவோடுதான் சாப்பிடுவார்கள்.  அதனாலேயே ஒல்லியாக இருப்பார்கள்.  ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோரும் ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தமில்லை. ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் தெரியவரலாம். 'ஃபங்ஷனல் ஃபிட்னெஸ்' (Functional fitness) என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது கனமான ஒரு பொருளைத் தூக்க முடிகிறதா, முதுகுவலியின்றி மாடிப்படிகளில் ஏறி, இறங்க முடிகிறதா என்றெல்லாம் பார்ப்பது ஃபங்ஷனல் ஃபிட்னெஸ்ஸின் அளவுகோல்.

சிலருக்கு தினமும் இரவில் குறிப்பிட்ட மணிக்கு தூங்கியே ஆக வேண்டும். என்ன வேலை இருந்தாலும், யார் உடனிருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். எனக்கு என் தூக்கம் முக்கியம் என தூங்கிவிடுவார்கள். அவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் வராது. உடலில் கொழுப்பு சேராது. அதனால் அவர்களும் ஒல்லியாக இருப்பார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...