Skip to main content

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்கள் வீட்டிற்குள்ளும் செருப்பு அணிந்துதான் நடமாட வேண்டுமா?

Doctor Vikatan: என் மனைவிக்கு 55 வயது. அவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது.  அவரை வீட்டுக்குள்ளும் செருப்பு அணிந்து நடக்கும்படி சிலர் அறிவுறுத்துகிறார்கள். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் செருப்புடன்தான் நடமாட வேண்டுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.  

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

சர்க்கரைநோய் என்பது நரம்புகளை பாதிக்கக்கூடியது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். சர்க்கரைநோயால் ஏற்படும் எந்த பாதிப்பையும் முன்கூட்டியே தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். பாதித்துவிட்டால் சரிசெய்வதற்கு வாய்ப்பே இல்லை. பாதித்த பிறகு அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்கலாம், அவ்வளவுதான்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இலையை பூச்சி அரிப்பதுபோல நரம்புகளை பாதிக்கும். அதனால் எரிச்சல் உண்டாகும். அந்த எரிச்சல் உணர்வு, உங்கள் நரம்புகள் பலவீனமாகின்றன என்பதற்கான அறிகுறி. நரம்புகள் வேலையே செய்யவில்லை என்பதன் அறிகுறியாக மரத்துப்போகிற உணர்வு ஏற்படும். 

இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள், செருப்பு அணியாமல் வெறும் கால்களுடன் நடக்கும்போது, கொதிக்கும் தரையில் நடந்தால்கூட, பாதி சூட்டையே உணர்வார்கள். அவ்வளவாக சூடு இல்லையே என நடந்துவிடுவார்கள். மறுநாள் காலை, கால் முழுவதும் கொப்புளங்கள் வந்திருக்கும். பாத யாத்திரை என்ற பெயரில் பலரும் இப்படித்தான் வெறுங்கால்களுடன் நடந்து கால்களைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். பக்கத்தில்தானே செல்கிறோம் என்ற அலட்சியத்தில் செருப்பு அணியாமல் நடப்பார்கள். உடனே பாதங்களில் கொப்புளம் வரும். கல்லோ, முள்ளோ குத்தினால்கூட வலி தெரியாது.

பாதங்களில் கொப்புளம்

சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நரம்புகள் பாதிக்கப்படாமல் காக்க முடியும். அலட்சியமாக இருந்ததன் விளைவாக, நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையிலும், கால்களில் புண்கள் வராமலாவது தடுக்க முடியும். முதல் விஷயமாக வெறும் கால்களுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.  குறிப்பாக, வெயில் அதிகமுள்ள  இடங்களுக்குச்  செல்ல வேண்டாம்.

கோயில் போன்ற இடங்களுக்குச் செல்லும்போதும் வெயில் தணிந்த மாலை நேரத்தில், சாக்ஸ் அணிந்தபடி நடக்கலாம்.  வீட்டுக்குள் நடப்பதற்கென்று தனியே ஒரு ஜோடி செருப்பு வைத்துக்கொள்வது அவசியம். அடுத்தது, தினமும் இரவில் கால்களைப் பரிசோதிக்க வேண்டும். கால்களைச் சுத்தமாகக் கழுவி, ஏதேனும் புண்களோ, வெட்டுக்காயமோ, நிற மாற்றமோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். விரல் இடுக்குகளைப் பரிசோதிக்க வேண்டும். நகங்களை வெட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சதையோடு சேர்த்து வெட்டிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நீரிழிவு பாதித்தவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டியவை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...