Skip to main content

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்கள் வீட்டிற்குள்ளும் செருப்பு அணிந்துதான் நடமாட வேண்டுமா?

Doctor Vikatan: என் மனைவிக்கு 55 வயது. அவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது.  அவரை வீட்டுக்குள்ளும் செருப்பு அணிந்து நடக்கும்படி சிலர் அறிவுறுத்துகிறார்கள். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் செருப்புடன்தான் நடமாட வேண்டுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.  

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

சர்க்கரைநோய் என்பது நரம்புகளை பாதிக்கக்கூடியது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். சர்க்கரைநோயால் ஏற்படும் எந்த பாதிப்பையும் முன்கூட்டியே தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். பாதித்துவிட்டால் சரிசெய்வதற்கு வாய்ப்பே இல்லை. பாதித்த பிறகு அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்கலாம், அவ்வளவுதான்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இலையை பூச்சி அரிப்பதுபோல நரம்புகளை பாதிக்கும். அதனால் எரிச்சல் உண்டாகும். அந்த எரிச்சல் உணர்வு, உங்கள் நரம்புகள் பலவீனமாகின்றன என்பதற்கான அறிகுறி. நரம்புகள் வேலையே செய்யவில்லை என்பதன் அறிகுறியாக மரத்துப்போகிற உணர்வு ஏற்படும். 

இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள், செருப்பு அணியாமல் வெறும் கால்களுடன் நடக்கும்போது, கொதிக்கும் தரையில் நடந்தால்கூட, பாதி சூட்டையே உணர்வார்கள். அவ்வளவாக சூடு இல்லையே என நடந்துவிடுவார்கள். மறுநாள் காலை, கால் முழுவதும் கொப்புளங்கள் வந்திருக்கும். பாத யாத்திரை என்ற பெயரில் பலரும் இப்படித்தான் வெறுங்கால்களுடன் நடந்து கால்களைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். பக்கத்தில்தானே செல்கிறோம் என்ற அலட்சியத்தில் செருப்பு அணியாமல் நடப்பார்கள். உடனே பாதங்களில் கொப்புளம் வரும். கல்லோ, முள்ளோ குத்தினால்கூட வலி தெரியாது.

பாதங்களில் கொப்புளம்

சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நரம்புகள் பாதிக்கப்படாமல் காக்க முடியும். அலட்சியமாக இருந்ததன் விளைவாக, நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையிலும், கால்களில் புண்கள் வராமலாவது தடுக்க முடியும். முதல் விஷயமாக வெறும் கால்களுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.  குறிப்பாக, வெயில் அதிகமுள்ள  இடங்களுக்குச்  செல்ல வேண்டாம்.

கோயில் போன்ற இடங்களுக்குச் செல்லும்போதும் வெயில் தணிந்த மாலை நேரத்தில், சாக்ஸ் அணிந்தபடி நடக்கலாம்.  வீட்டுக்குள் நடப்பதற்கென்று தனியே ஒரு ஜோடி செருப்பு வைத்துக்கொள்வது அவசியம். அடுத்தது, தினமும் இரவில் கால்களைப் பரிசோதிக்க வேண்டும். கால்களைச் சுத்தமாகக் கழுவி, ஏதேனும் புண்களோ, வெட்டுக்காயமோ, நிற மாற்றமோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். விரல் இடுக்குகளைப் பரிசோதிக்க வேண்டும். நகங்களை வெட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சதையோடு சேர்த்து வெட்டிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நீரிழிவு பாதித்தவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டியவை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...