Skip to main content

Doctor Vikatan: PCOD பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: PCOD பிரச்னை உள்ளவர்கள்  ஜூஸ் குடிக்கக்கூடாது என்பது உண்மையா...?  இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கான  உணவுப்பட்டியல் எப்படி இருக்க வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

பிசிஓடி (PCOD) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ள பெண்களுக்கு காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை பிரதானமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவோம். சிம்பிள் கார்போஹைட்ரேட்டாக எடுக்கும் போது சீக்கிரமே பசி எடுத்து விடும். உடனே ஏதாவது சாப்பிடத் தோன்றும். அதன் விளைவாக கலோரி அதிகரிக்கும், எடையும் கூடும்.

கார்போஹைட்ரேட்டில் சிம்பிள் கார்போஹைட்ரேட், காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் என இருவகை உண்டு. இவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட் உணவுகள், மிக விரைவாக செரிமானமாகி, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பவை. அதுவே,  காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்  உணவுகள் சற்று தாமதமாக செரிமானமாகக்கூடியவை. 

சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் அரிசி மற்றும் கோதுமை உணவுகளுடன் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவை தவிர உங்கள் உணவில் புரதச்சத்து போதுமான அளவு இருக்க வேண்டும். இதற்கு நிறைய பருப்பு, சன்னா, பயறு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

Juice (Representational Image)

பிசிஓடி உள்ளவர்கள் ஸ்பிலிட் மீல் பிளான் (split meal plan) என்பதைப் பின்பற்ற வேண்டும் அதாவது மூன்று வேளைகள் சாப்பிடுவதற்கு பதிலாக அதையே ஆறு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடுவது தான் ஸ்பிலிட் மீல் பிளான். வழக்கமாக நீங்கள் சாப்பிடும் அளவை பாதியாகக் குறைத்து அதையே இன்னொரு வேளைக்குச் சாப்பிடும்படி பேலன்ஸ் செய்து கொள்ளலாம்.

பிசிஓடி உள்ளவர்கள் பழங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. எல்லா பழங்களையும் அளவோடு சாப்பிடலாம். ஆனால், பழங்களை ஜூஸாக மாற்றி எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஜூஸாக மாற்றும்போது அதில் சர்க்கரை, பால் போன்றவற்றைச் சேர்ப்போம். அது கலோரி அளவை அதிகரிக்கும். தவிர, ரத்தச் சர்க்கரை அளவையும் அதிகப்படுத்தும். அதற்கு பதிலாக பழங்களாக எடுத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமானது.

Protein

கொழுப்பில்லாத புரதச்சத்து (லீன் புரோட்டீன்) இவர்களுக்கு மிகவும் முக்கியம். டோஃபு, மீன் போன்றவை இந்த வகை கொழுப்பில் அடங்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை இவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், சாட் உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள், ஜூஸ் போன்றவற்றையும் இவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...