Skip to main content

Crypto Scam: ஒரே போன் காலில் ரூ. 3 கோடி அபேஸ்... அமெரிக்க பெண்ணை டெல்லி நபர் ஏமாற்றியதெப்படி?

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்க பெண்ணிடம் ஒரே போன் காலில் மூன்று கோடி ரூபாயைச் சுருட்டிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி மைக்ரோசாஃப்ட் ஏஜென்ட் என்று ஒருவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்ற அமெரிக்க பெண்ணிடம், `தங்களது வங்கிக் கணக்கு பாதுகாப்பானதாக இல்லை. உடனடியாக க்ரிப்டோகரன்சி வாலட்டுக்கு (cryptocurrency wallet) மாற்றுங்கள்' என்று அந்த நபர் கூறியிருக்கிறார்.க்ரிப்டோகரன்சி

அதோடு, அந்தப் பெண்ணின் கணினியில் அங்கீகரிக்கப்படாத அக்செஸைப் பெற்று, அவரின் பெயரில் ஒரு கிரிப்டோகரன்சி கணக்கை உருவாக்கி அவரின் பெயரில் இருந்த 4,00,000 டாலரை (ரூ.3.3 கோடி) அதற்கு மாற்றுமாறு அந்த நபர் கட்டாயப்படுத்தினார். இதுவொரு மோசடி என்று அறியாத அந்தப் பெண், பின்னர் அந்தக் கணக்கை செக் செய்தபோது தன்னுடைய பணம் மொத்தமும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிபிஐ இதில் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. அதோடு, அமலாக்கத்துறையும் ஒருபக்கம் இதில் விசாரணை மேற்கொள்ள அடுத்தடுத்து முடிச்சுகள் அவிழ்ந்தன.

அந்த விசாரணையில், `அமெரிக்க பெண்ணிடமிருந்து மோசடி செய்யப்பட்ட அந்த க்ரிப்டோகரன்சி , பிரபுல் குப்தா மற்றும் அவரது தாயார் சரிதா குப்தா ஆகியோரின் வாலட்டுகளுக்குச் சென்றிருக்கிறது. பின்னர், கரன் சுக் என்பவர் பிரபுல் குப்தாவிடமிருந்து அந்த க்ரிப்டோகரன்சியைப் பெற்று, வேறு பல வாலட்டுகளில் டெபாசிட் செய்திருக்கிறார். அதையடுத்து, இந்த க்ரிப்டோகரன்சி விற்று பணமாக்கப்பட்டு கரன் சுக் மற்றும் லக்ஷ்ய விஜ் ஆகியோரின் பேரில் வேறு பல வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இந்தப் பணத்தை அவர்கள் ஆன்லைன் சூதாட்ட செயலிகளிலும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.லக்ஷ்ய விஜ்

இந்தத் தகவல்களையெல்லாம் விசாரணை அதிகாரிகள் சேகரிக்க, கடந்த மாதம் பல இடங்களில் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்கள் மீட்கப்பட்டதோடு, மோசடியில் பயன்படுத்தப்பட்ட க்ரிப்டோகரன்சி வாலட்டுகளை வைத்திருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டது. இறுதியில், லக்ஷ்ய விஜ் தான் இந்த மோசடியில் மூளையாகச் செயல்பட்டவர் எனத் தெரியவந்தது.கைது

பின்னர், கைது நடவடிக்கையில் இறங்கிய அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 22-ம் தேதி அவரைக் கைதுசெய்தது. கிழக்கு டெல்லியின் தில்ஷாத் கார்டனில் வசிக்கும் இந்த லக்ஷ்ய விஜ், கடந்த ஆண்டு மார்ச்சில் ஒருமுறை குஜராத் போலீஸாரால் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் டெல்லி போலீஸின் அதிகாரியொருவர் அவரை விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி!


http://dlvr.it/TB2vd0

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...