Skip to main content

Crypto Scam: ஒரே போன் காலில் ரூ. 3 கோடி அபேஸ்... அமெரிக்க பெண்ணை டெல்லி நபர் ஏமாற்றியதெப்படி?

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்க பெண்ணிடம் ஒரே போன் காலில் மூன்று கோடி ரூபாயைச் சுருட்டிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி மைக்ரோசாஃப்ட் ஏஜென்ட் என்று ஒருவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்ற அமெரிக்க பெண்ணிடம், `தங்களது வங்கிக் கணக்கு பாதுகாப்பானதாக இல்லை. உடனடியாக க்ரிப்டோகரன்சி வாலட்டுக்கு (cryptocurrency wallet) மாற்றுங்கள்' என்று அந்த நபர் கூறியிருக்கிறார்.க்ரிப்டோகரன்சி

அதோடு, அந்தப் பெண்ணின் கணினியில் அங்கீகரிக்கப்படாத அக்செஸைப் பெற்று, அவரின் பெயரில் ஒரு கிரிப்டோகரன்சி கணக்கை உருவாக்கி அவரின் பெயரில் இருந்த 4,00,000 டாலரை (ரூ.3.3 கோடி) அதற்கு மாற்றுமாறு அந்த நபர் கட்டாயப்படுத்தினார். இதுவொரு மோசடி என்று அறியாத அந்தப் பெண், பின்னர் அந்தக் கணக்கை செக் செய்தபோது தன்னுடைய பணம் மொத்தமும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிபிஐ இதில் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. அதோடு, அமலாக்கத்துறையும் ஒருபக்கம் இதில் விசாரணை மேற்கொள்ள அடுத்தடுத்து முடிச்சுகள் அவிழ்ந்தன.

அந்த விசாரணையில், `அமெரிக்க பெண்ணிடமிருந்து மோசடி செய்யப்பட்ட அந்த க்ரிப்டோகரன்சி , பிரபுல் குப்தா மற்றும் அவரது தாயார் சரிதா குப்தா ஆகியோரின் வாலட்டுகளுக்குச் சென்றிருக்கிறது. பின்னர், கரன் சுக் என்பவர் பிரபுல் குப்தாவிடமிருந்து அந்த க்ரிப்டோகரன்சியைப் பெற்று, வேறு பல வாலட்டுகளில் டெபாசிட் செய்திருக்கிறார். அதையடுத்து, இந்த க்ரிப்டோகரன்சி விற்று பணமாக்கப்பட்டு கரன் சுக் மற்றும் லக்ஷ்ய விஜ் ஆகியோரின் பேரில் வேறு பல வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இந்தப் பணத்தை அவர்கள் ஆன்லைன் சூதாட்ட செயலிகளிலும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.லக்ஷ்ய விஜ்

இந்தத் தகவல்களையெல்லாம் விசாரணை அதிகாரிகள் சேகரிக்க, கடந்த மாதம் பல இடங்களில் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்கள் மீட்கப்பட்டதோடு, மோசடியில் பயன்படுத்தப்பட்ட க்ரிப்டோகரன்சி வாலட்டுகளை வைத்திருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டது. இறுதியில், லக்ஷ்ய விஜ் தான் இந்த மோசடியில் மூளையாகச் செயல்பட்டவர் எனத் தெரியவந்தது.கைது

பின்னர், கைது நடவடிக்கையில் இறங்கிய அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 22-ம் தேதி அவரைக் கைதுசெய்தது. கிழக்கு டெல்லியின் தில்ஷாத் கார்டனில் வசிக்கும் இந்த லக்ஷ்ய விஜ், கடந்த ஆண்டு மார்ச்சில் ஒருமுறை குஜராத் போலீஸாரால் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் டெல்லி போலீஸின் அதிகாரியொருவர் அவரை விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி!


http://dlvr.it/TB2vd0

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...