Skip to main content

கரண் ஜோஹர், இலியானா... பிரலங்களிடம் காணப்படும் body dysmorphia பிரச்னை.. தீர்வு என்ன?

அழகாக இருந்தாலும், கண்ணாடியில் மீண்டும் மீண்டும் முகத்தைப் பார்த்துவிட்டு, 'மூக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கலாம்', 'பிம்பிள்ஸ் அதிகமாக இருக்கு', 'இதை விட அழகாக இருந்திருக்கலாம்' என தன்னை உடனிருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தங்களது உடல் அமைப்பின் மீது திருப்தி இல்லாமல் ஏதோ ஒரு குறையை பற்றியே நினைத்துக்கொண்டு சிலர் இருப்பாரகள். இந்த நிலையை, மருத்துவ மொழியில் `பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder) என்கிறார்கள்.

கரண் ஜோஹர்

இந்தப் பிரச்னை வயது வித்தியாசம், ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் இருக்கிறது. 'காபி வித் கரண்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக 'Kill' படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய அவர், "எனக்கு எட்டு வயதிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கிறது. இதற்காக நிறைய மருத்துவர்களைச் சந்தித்து மருந்து, மாத்திரைகளை எடுத்திருக்கிறேன். இதனால் எனக்கு மனநலப் பிரச்னைகளும் ஏற்பட்டன. அதிலிருந்து மீள மிகவும் கடினமாக முயற்சி செய்தேன். எனது உடலை யாரிடமும் காண்பிக்கக் கூடாது என்பதற்காகவே எப்போதும் பெரிதாக இருக்கும் ஆடைகளை அணிவேன்.

`பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder)

நான் உடல் எடையைக் குறைத்து என் தோற்றத்தை நன்றாக வைத்துக்கொண்டாலும், இந்தப் பிரச்னையுடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று தெரிவித்தார். டெல்லியில் நடந்த 21-வது உலக மனநல மாநாட்டில் நடிகை இலியானாவும் தனக்கு பாடி டிஸ்மார்பியா இருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

`பாடி டிஸ்மார்பிக் டிஸாடர்’ என்றால் என்ன என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. "உடலமைப்பு சார்ந்த இந்த உளவியல் சிக்கலைப் பெரும்பாலும் பெண்களுக்கான பிரச்னையாகவும், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரச்னையாகவுமே நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், ஆண் பெண் இருவரையும் சமஅளவில் இது பாதிக்கிறது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள், முடி வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள், சரும பாதிப்பு உள்ளவர்கள், வளரிளம் பருவத்தினர், கண் பிரச்னை உள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

மனநல மருத்துவர் குறிஞ்சி

சமூகத்தைக் கண்டு பயப்படும் ‘சோஷியல் போபியா’ (Social phobia) வகையைச் சார்ந்த இப்பிரச்னை, சம்பந்தப்பட்ட நபரை வெளி உலகுக்கு வந்து, மக்களோடு மக்களாகப் பழகவிடாது. ஓர் இடத்துக்குச் சென்றால், ‘நம்மை எப்படியெல்லாம் கிண்டலடிப்பார்கள்’ என்று கற்பனை செய்துகொண்டு, தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளும் மனோபாவம் இவர்களுக்கு நிறையவே இருக்கும்.

மூளையின் செயல்பாடுகளுக்கு உதவிசெய்யும் 'செரட்டோடினின்' (Serotonin) என்ற ஹார்மோனில் குறைபாடுகள் ஏற்படும்போது மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு பிரச்னையைத் தீவிரப்படுத்தும். தகுந்த மனநல ஆலோசனை பெறுவதன் மூலம் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

`பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder)

மேலும், சமூகத்தைப் பொறுத்தவரை இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் விமர்சனங்களைத் தவிர்ப்பது, அவர்களின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது, அவர்களை நம்புவது போன்ற செயல்களின் மூலம், அவர்களுக்கு இந்தப் பிரச்னையிலிருந்து தீர்வு காண உதவ முடியும்" என்று அறிவுறுத்துகிறார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...