Skip to main content

`திருமணம் செய்வதாக கூறி பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டார்' - வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் புகார்

திருமணம் செய்துகொள்வதாக பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, ராஜஸ்தான் வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும், குற்றம்சாட்டப்படும் ராஜஸ்தான் வழக்கறிஞர் மனவ் சிங் ரத்தோருக்கும் முதலில் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.பாலியல் வன்கொடுமை

அதன்பின்னர், ரத்தோரின் அழைப்பின் பேரில் இந்தியா வந்த அமெரிக்க பெண்ணிடம், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்த அவர் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரிலுள்ள ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டார். பிறகுதான், ரத்தோருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குடும்பம் இருப்பது அமெரிக்க பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பூண்டி (Bundi) நகர காவல் கண்காணிப்பாளரை அணுகி, ரத்தோர் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருப்பதை மறைத்து, திருமணத்தின் பேரில் தன்னிடம் உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, அவர்மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். புகாரின்படி, ரத்தோர் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர்.காவல்துறை

இதுகுறித்து ஊத்திடம் பேசிய பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் அமர் சிங், ``புகாரளித்த பெண் ஏப்ரல் முதல் ஜூலைக்குள் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ரத்தோர் திருமணம் செய்துகொள்வதாக தன்னிடம் பொய் வாக்குறுதியளித்து அஜ்மீர், ஜெய்ப்பூர் ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டதாகவும், பிறகுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அஜ்மீரில் குடும்பத்துடன் வசித்துவருவது தெரிந்ததாகவும் அந்தப் பெண் புகாரளித்திருக்கிறார். இடையில், அஜ்மீரில் ஒரு கோயிலில் அந்தப் பெண்ணுடன் அவர் திருமண நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனாலும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வதை அவர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.கோவை டு காஷ்மீர்... காதலிப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவை இளைஞர் கைது!


http://dlvr.it/TB761X

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...