Skip to main content

’மன்னார்குடியின் மகள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் ஆவார்’- எதிர்பார்ப்பில் சொந்த ஊர் மக்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இருவரும் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்து ஃப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அத்துடன் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக வேண்டும் என கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த அரசாங்கத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார். அகதிகளை கணக்கெடுப்பதற்காக ஆங்கிலேய அரசு, பி.வி. கோபாலனை ஜாம்பியா நாட்டுக்கு அனுப்பியது. குடும்பத்துடன் ஜாம்பியா நாட்டுக்குச் சென்றவர் பணி முடிந்ததும் அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

பி.வி.கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா. இவருடைய மகள் தான் கமலா ஹாரிஸ். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்தார் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தது இவருக்கான சிறப்பு. படிப்படியாக அரசியலில் வளர்ந்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. துணை அதிபராக திறம்பட செயல்பட்டதாக கமலா ஹாரிஸ் குறித்து அமெரிக்கர்கள் பேசி வருகின்றனர்.மன்னார்குடி, துளசேந்திரபுரம்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில காரணங்களால் தற்போதைய அதிரபான ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக அக்கட்சி யாரை அறிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களிடம் நிலவியது. இந்தச் சூழலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கபட்டார். இது கண்டங்கள் கடந்து மன்னார்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து துளசேந்திரபுரம் கிராமத்தினர் தரப்பில் பேசினோம், ``இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் பூர்வீக ஊரான துளசேந்திரபுரத்தை மறக்காதவர். எப்போதும் ஊருடன் தொடர்பில் இருப்பவர். அவரது குடும்பத்தினர்களான உறவினர்கள், சென்னை மற்றும் துளசேந்திரபுரத்தில் வசிக்கின்றனர். அவர்கள் மூலமாக ஊர் குறித்த நிகழ்வுகளை கேட்டு தெரிந்து கொள்வார். அவரது குலத்தெய்வமான தர்மசாஸ்தா கோயில் எங்கள் ஊரில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது இதற்கு கமலா ஹாரிஸ் நன்கொடை வழங்கினார். நன்கொடை வழங்கியவர்களின் பெயர் பட்டியலில் கமலா ஹாரிஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.கோயில் கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயர்

எங்க மண்ணோட தவப்புதல்வி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்திருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளோம். மேலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறோம். மன்னார்குடியின் மகள் அமெரிக்க அதிபராவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்கள் எண்ணத்தையும், வேண்டுதலையும் உறவினர்கள் மூலமாக அவருக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். கமலா ஹாரிஸ் அதிபராக வெற்றி பெற்ற பிறகு துளசேந்திரபுரத்திற்கு வந்து மக்களை, உறவுகளை சந்திக்க வேண்டும். உலகமே நிமிர்ந்து பார்க்கும் விருட்சமாக வளர்ந்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுவே எங்களின் ஆசை, விருப்பம்!'' என்றனர் சந்தோஷப் பெருக்கில்.


http://dlvr.it/TB3Gy4

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...