Skip to main content

’மன்னார்குடியின் மகள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் ஆவார்’- எதிர்பார்ப்பில் சொந்த ஊர் மக்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இருவரும் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்து ஃப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அத்துடன் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக வேண்டும் என கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த அரசாங்கத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார். அகதிகளை கணக்கெடுப்பதற்காக ஆங்கிலேய அரசு, பி.வி. கோபாலனை ஜாம்பியா நாட்டுக்கு அனுப்பியது. குடும்பத்துடன் ஜாம்பியா நாட்டுக்குச் சென்றவர் பணி முடிந்ததும் அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

பி.வி.கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா. இவருடைய மகள் தான் கமலா ஹாரிஸ். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்தார் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தது இவருக்கான சிறப்பு. படிப்படியாக அரசியலில் வளர்ந்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. துணை அதிபராக திறம்பட செயல்பட்டதாக கமலா ஹாரிஸ் குறித்து அமெரிக்கர்கள் பேசி வருகின்றனர்.மன்னார்குடி, துளசேந்திரபுரம்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில காரணங்களால் தற்போதைய அதிரபான ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக அக்கட்சி யாரை அறிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களிடம் நிலவியது. இந்தச் சூழலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கபட்டார். இது கண்டங்கள் கடந்து மன்னார்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து துளசேந்திரபுரம் கிராமத்தினர் தரப்பில் பேசினோம், ``இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் பூர்வீக ஊரான துளசேந்திரபுரத்தை மறக்காதவர். எப்போதும் ஊருடன் தொடர்பில் இருப்பவர். அவரது குடும்பத்தினர்களான உறவினர்கள், சென்னை மற்றும் துளசேந்திரபுரத்தில் வசிக்கின்றனர். அவர்கள் மூலமாக ஊர் குறித்த நிகழ்வுகளை கேட்டு தெரிந்து கொள்வார். அவரது குலத்தெய்வமான தர்மசாஸ்தா கோயில் எங்கள் ஊரில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது இதற்கு கமலா ஹாரிஸ் நன்கொடை வழங்கினார். நன்கொடை வழங்கியவர்களின் பெயர் பட்டியலில் கமலா ஹாரிஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.கோயில் கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயர்

எங்க மண்ணோட தவப்புதல்வி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்திருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளோம். மேலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறோம். மன்னார்குடியின் மகள் அமெரிக்க அதிபராவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்கள் எண்ணத்தையும், வேண்டுதலையும் உறவினர்கள் மூலமாக அவருக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். கமலா ஹாரிஸ் அதிபராக வெற்றி பெற்ற பிறகு துளசேந்திரபுரத்திற்கு வந்து மக்களை, உறவுகளை சந்திக்க வேண்டும். உலகமே நிமிர்ந்து பார்க்கும் விருட்சமாக வளர்ந்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுவே எங்களின் ஆசை, விருப்பம்!'' என்றனர் சந்தோஷப் பெருக்கில்.


http://dlvr.it/TB3Gy4

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...