Skip to main content

’மன்னார்குடியின் மகள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் ஆவார்’- எதிர்பார்ப்பில் சொந்த ஊர் மக்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இருவரும் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்து ஃப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அத்துடன் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக வேண்டும் என கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த அரசாங்கத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார். அகதிகளை கணக்கெடுப்பதற்காக ஆங்கிலேய அரசு, பி.வி. கோபாலனை ஜாம்பியா நாட்டுக்கு அனுப்பியது. குடும்பத்துடன் ஜாம்பியா நாட்டுக்குச் சென்றவர் பணி முடிந்ததும் அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

பி.வி.கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா. இவருடைய மகள் தான் கமலா ஹாரிஸ். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்தார் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தது இவருக்கான சிறப்பு. படிப்படியாக அரசியலில் வளர்ந்தவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. துணை அதிபராக திறம்பட செயல்பட்டதாக கமலா ஹாரிஸ் குறித்து அமெரிக்கர்கள் பேசி வருகின்றனர்.மன்னார்குடி, துளசேந்திரபுரம்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில காரணங்களால் தற்போதைய அதிரபான ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக அக்கட்சி யாரை அறிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களிடம் நிலவியது. இந்தச் சூழலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கபட்டார். இது கண்டங்கள் கடந்து மன்னார்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து துளசேந்திரபுரம் கிராமத்தினர் தரப்பில் பேசினோம், ``இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் பூர்வீக ஊரான துளசேந்திரபுரத்தை மறக்காதவர். எப்போதும் ஊருடன் தொடர்பில் இருப்பவர். அவரது குடும்பத்தினர்களான உறவினர்கள், சென்னை மற்றும் துளசேந்திரபுரத்தில் வசிக்கின்றனர். அவர்கள் மூலமாக ஊர் குறித்த நிகழ்வுகளை கேட்டு தெரிந்து கொள்வார். அவரது குலத்தெய்வமான தர்மசாஸ்தா கோயில் எங்கள் ஊரில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது இதற்கு கமலா ஹாரிஸ் நன்கொடை வழங்கினார். நன்கொடை வழங்கியவர்களின் பெயர் பட்டியலில் கமலா ஹாரிஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.கோயில் கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயர்

எங்க மண்ணோட தவப்புதல்வி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்திருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளோம். மேலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறோம். மன்னார்குடியின் மகள் அமெரிக்க அதிபராவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்கள் எண்ணத்தையும், வேண்டுதலையும் உறவினர்கள் மூலமாக அவருக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். கமலா ஹாரிஸ் அதிபராக வெற்றி பெற்ற பிறகு துளசேந்திரபுரத்திற்கு வந்து மக்களை, உறவுகளை சந்திக்க வேண்டும். உலகமே நிமிர்ந்து பார்க்கும் விருட்சமாக வளர்ந்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுவே எங்களின் ஆசை, விருப்பம்!'' என்றனர் சந்தோஷப் பெருக்கில்.


http://dlvr.it/TB3Gy4

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...