Skip to main content

`5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு' - மத்திய அமைச்சர் `அதிர்ச்சி' தகவல்!

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு, கொலை போன்ற செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வந்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், கடந்த வெள்ளியன்று மக்களவையில் கேரள எம்.பி கே.சுரேஷ், 2019 முதல் வெளிநாடுகளில் உயர் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு பற்றி கேள்வியெழுப்பினார்.உயிரிழப்புகள்

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் அளித்த பதில் விவரங்களில், `41 நாடுகளில் விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக கனடாவில் 172 மாணவர்களும், அமெரிக்காவில் 108 மாணவர்களும் உயிரிழந்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, இங்கிலாந்தில் 58 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 57 மாணவர்களும், ரஷ்யாவில் 37 மாணவர்களும், ஜெர்மனியில் 24 மாணவர்களும் என அதிகபட்சமாக உயிரிழந்திருக்கின்றனர். அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது.

மொத்தமாக இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில், கனடாவில் 9 கொலைகளும், அமெரிக்காவில் 6 கொலைகளும், ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, கிர்கிஸ்தானில் தலா ஒரு கொலையும் நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாது, கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்கள் அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரபூர்வமாகப் பகிரப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங்

பின்னர், வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்த கீர்த்திவர்தன் சிங், ``வெளிநாடுகளிலுள்ள இந்திய மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. மேலும், வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுடன் வழக்கமான தொடர்பைக் கொள்கின்றன" என்று தெரிவித்தார்.``தாமரை வியூகமும் `6' பேரும்... A1, A2 - அதானி, அம்பானி"- காட்டமான ராகுல் காந்தி | Speech Highlights


http://dlvr.it/TBD7VY

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...