Skip to main content

`5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு' - மத்திய அமைச்சர் `அதிர்ச்சி' தகவல்!

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு, கொலை போன்ற செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வந்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், கடந்த வெள்ளியன்று மக்களவையில் கேரள எம்.பி கே.சுரேஷ், 2019 முதல் வெளிநாடுகளில் உயர் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு பற்றி கேள்வியெழுப்பினார்.உயிரிழப்புகள்

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் அளித்த பதில் விவரங்களில், `41 நாடுகளில் விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக கனடாவில் 172 மாணவர்களும், அமெரிக்காவில் 108 மாணவர்களும் உயிரிழந்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, இங்கிலாந்தில் 58 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 57 மாணவர்களும், ரஷ்யாவில் 37 மாணவர்களும், ஜெர்மனியில் 24 மாணவர்களும் என அதிகபட்சமாக உயிரிழந்திருக்கின்றனர். அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது.

மொத்தமாக இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில், கனடாவில் 9 கொலைகளும், அமெரிக்காவில் 6 கொலைகளும், ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, கிர்கிஸ்தானில் தலா ஒரு கொலையும் நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாது, கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்கள் அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரபூர்வமாகப் பகிரப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங்

பின்னர், வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்த கீர்த்திவர்தன் சிங், ``வெளிநாடுகளிலுள்ள இந்திய மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது இந்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. மேலும், வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுடன் வழக்கமான தொடர்பைக் கொள்கின்றன" என்று தெரிவித்தார்.``தாமரை வியூகமும் `6' பேரும்... A1, A2 - அதானி, அம்பானி"- காட்டமான ராகுல் காந்தி | Speech Highlights


http://dlvr.it/TBD7VY

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...