Skip to main content

பெண்ணின் வயிற்றில் ஊசியை தவறவிட்ட மருத்துவர்கள்... 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக்குறைவாக ஊசியை தன் வயிற்றினுள் வைத்ததாகக் கூறி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இழப்பீடு வழங்கச் சொல்லி நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெங்களூரு, ஜெயநகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (52). இவர் 2004-ம் ஆண்டு, தனது 32 வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

stomach pain (Representational image)

இதற்காக சிகிச்சை பெற சென்ற தனியார் மருத்துவமனையில், இவருக்குக் குடல் இறக்கப் பிரச்னை இருப்பதாகக்கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போதே, குடல் வால் (அப்பெண்டிக்ஸ்) பகுதியையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வயிற்று வலி நீடித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகான அசௌகர்யம் என மருத்துவர்கள் அதனை அலட்சியம் செய்துள்னர். அப்பெண், தனக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் மீண்டும் மீண்டும் மருத்துவமனையை அணுகியபோதும், அவருக்கு வலி நிவாரண மாத்திரைகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Surgical needle

அறுவைசிகிச்சை முடிந்தும் பல ஆண்டுகளாக வயிற்று வலி நீடித்ததால், வேறொரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்துள்ளார் பத்மாவதி. அவர் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒரு வேற்றுப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. வயிற்றுவலிக்கு காரணம் அதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு அவருக்கு அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோது, 3.2 செ.மீ அளவுள்ள, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஊசி (Surgical Needle) அவர் வயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது. குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போது இந்த ஊசி தவறுதலாக அவர் வயிற்றினுள்ளே வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து தனக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்களுக்கும் எதிராக கர்நாடக நுகர்வோர் நீதிமன்றத்தில் பத்மாவதி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

judgement

இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ’பத்மாவதிக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வழக்குச் செலவுக்காக ரூ.50,000 இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். மேலும், அவர் காப்பீடு செய்திருந்த நிறுவனம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...