Skip to main content

பெண்ணின் வயிற்றில் ஊசியை தவறவிட்ட மருத்துவர்கள்... 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக்குறைவாக ஊசியை தன் வயிற்றினுள் வைத்ததாகக் கூறி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இழப்பீடு வழங்கச் சொல்லி நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெங்களூரு, ஜெயநகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (52). இவர் 2004-ம் ஆண்டு, தனது 32 வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

stomach pain (Representational image)

இதற்காக சிகிச்சை பெற சென்ற தனியார் மருத்துவமனையில், இவருக்குக் குடல் இறக்கப் பிரச்னை இருப்பதாகக்கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போதே, குடல் வால் (அப்பெண்டிக்ஸ்) பகுதியையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வயிற்று வலி நீடித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகான அசௌகர்யம் என மருத்துவர்கள் அதனை அலட்சியம் செய்துள்னர். அப்பெண், தனக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் மீண்டும் மீண்டும் மருத்துவமனையை அணுகியபோதும், அவருக்கு வலி நிவாரண மாத்திரைகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Surgical needle

அறுவைசிகிச்சை முடிந்தும் பல ஆண்டுகளாக வயிற்று வலி நீடித்ததால், வேறொரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்துள்ளார் பத்மாவதி. அவர் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒரு வேற்றுப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. வயிற்றுவலிக்கு காரணம் அதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு அவருக்கு அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோது, 3.2 செ.மீ அளவுள்ள, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஊசி (Surgical Needle) அவர் வயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது. குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போது இந்த ஊசி தவறுதலாக அவர் வயிற்றினுள்ளே வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து தனக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்களுக்கும் எதிராக கர்நாடக நுகர்வோர் நீதிமன்றத்தில் பத்மாவதி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

judgement

இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ’பத்மாவதிக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வழக்குச் செலவுக்காக ரூ.50,000 இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். மேலும், அவர் காப்பீடு செய்திருந்த நிறுவனம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...