Skip to main content

பெண்ணின் வயிற்றில் ஊசியை தவறவிட்ட மருத்துவர்கள்... 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி!

20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக்குறைவாக ஊசியை தன் வயிற்றினுள் வைத்ததாகக் கூறி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இழப்பீடு வழங்கச் சொல்லி நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெங்களூரு, ஜெயநகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (52). இவர் 2004-ம் ஆண்டு, தனது 32 வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

stomach pain (Representational image)

இதற்காக சிகிச்சை பெற சென்ற தனியார் மருத்துவமனையில், இவருக்குக் குடல் இறக்கப் பிரச்னை இருப்பதாகக்கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போதே, குடல் வால் (அப்பெண்டிக்ஸ்) பகுதியையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வயிற்று வலி நீடித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகான அசௌகர்யம் என மருத்துவர்கள் அதனை அலட்சியம் செய்துள்னர். அப்பெண், தனக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் மீண்டும் மீண்டும் மருத்துவமனையை அணுகியபோதும், அவருக்கு வலி நிவாரண மாத்திரைகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Surgical needle

அறுவைசிகிச்சை முடிந்தும் பல ஆண்டுகளாக வயிற்று வலி நீடித்ததால், வேறொரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்துள்ளார் பத்மாவதி. அவர் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒரு வேற்றுப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. வயிற்றுவலிக்கு காரணம் அதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு அவருக்கு அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோது, 3.2 செ.மீ அளவுள்ள, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஊசி (Surgical Needle) அவர் வயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது. குடல் இறக்க அறுவை சிகிச்சையின்போது இந்த ஊசி தவறுதலாக அவர் வயிற்றினுள்ளே வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து தனக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்களுக்கும் எதிராக கர்நாடக நுகர்வோர் நீதிமன்றத்தில் பத்மாவதி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

judgement

இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ’பத்மாவதிக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் வழக்குச் செலவுக்காக ரூ.50,000 இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். மேலும், அவர் காப்பீடு செய்திருந்த நிறுவனம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...