Skip to main content

இந்தப் படங்கள் பார்த்தா இத்தனை பிரச்னைகள் வருமா.? | காமத்துக்கு மரியாதை - 187

விருப்பப்பட்டோ, தேடிப்போய் பார்க்க வேண்டிய தொலைவிலோ இன்றைக்கு ஆபாசப்படங்கள் இல்லை. அவை நம் கைகளில் இருக்கின்றன. நம் குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போனாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால், என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்பதுபற்றி பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

``ஆபாசப்படங்கள் பார்ப்பதை பாலியல் பிறழ்வுகளில் ஒன்று என்றுதான் 1990-களில் சொல்லிக் கொண்டிருந்தோம். அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிகிச்சையும் அளித்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்றைக்கு ஆபாசப்படங்கள் பார்க்காதவர்கள் கிட்டத்தட்ட யாருமே கிடையாது என்பதால், இதைத் தவறு என்று சொல்வதையும், பாலியல் பிறழ்வு என்று சொல்வதையும் நிறுத்திவிட்டோம். ஆனால், தொடர்ந்து ஆபாசப்படங்கள் பார்ப்பது, அவற்றைப் பார்க்காமல் இருக்க முடியாதது, அந்தப் படங்களுக்கு அடிமையாவது போன்றவற்றால் ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளும், இந்த ஆண்களால் பெண்கள் சந்திக்கின்ற பிரச்னைகளும் ஏராளம்.

porn movies

டீன் ஏஜின் ஆரம்பத்திலேயே இந்தக் கால குழந்தைகளுக்கு, ஆபாசப்படங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு சுலபமாகி விட்டது. பள்ளிக்கூடத்தில் ஒரு சிறுவன் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால், கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுமே ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஸ்மார்ட்போன் வருவதற்கு முன்பு வரை பெரும்பாலும் வளர்ந்த ஆண்கள் மட்டுமே ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. சிறுவர்களும் பார்த்தார்கள் என்றாலும், அவர்கள் வெகுசிலர் மட்டுமே!

கொஞ்சம் உற்று கவனித்தால், நிர்பயா பாலியல் வன்கொடுமையிலும், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையிலும் டீன் ஏஜ் பிள்ளைகளும் ஈடுபட்டிருப்பதும், அதற்குக் காரணம் அவர்களால் சுலபமாகப் பார்க்க முடிந்த ஆபாசப்படங்களும்தான் காரணம் என்பது புரியும்.

உண்மையில் ஆபாசப்படங்கள் பார்ப்பதென்பது, போதை மாத்திரைகள் சாப்பிடுவதைப் போன்றே ஆபத்தானது. ஆரம்பத்தில் ஒரு மாத்திரையில் போதையை எட்டுபவர்கள், நாள்பட நாள்பட ஒரு மாத்திரையில் போதையை அடைய முடியாமல் மாத்திரையின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவார்கள்.

Dr. Kamaraj

மது, கஞ்சா போன்றவற்றிலும் இதே நிலைமைதான். இந்த நிலைமை ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களுக்கும் பொருந்தும். தவிர, ஆபாசப்படங்களும் விதவிதமான கதைகளுடன் எடுக்கப்படுவதால், அதில் கிடைக்கும் த்ரில்லுக்காக இப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பதற்கு ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். விளைவு, கணவன், மனைவிக்கிடையே நிகழும் தாம்பத்திய உறவின்மீது ஆர்வம் குறையும் அல்லது சுத்தமாக ஆர்வமே இல்லாமலும் போகலாம்.

இவற்றையெல்லாம்விட மிக மோசமான விளைவுகளும் இருக்கின்றன. வேலைக்குக்கூடச் செல்லாமல் ஆபாசப்படங்கள் பார்ப்பது, பெண்களை சமமாக நடத்தாதது, அவர்களை செக்ஸுவல் பொருளாகப் பார்ப்பது, குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்வது என அவற்றின் பட்டியல் நீளமானது. ஆபாசப்படங்களைத் தவிர்ப்பதே நல்லது'' என முடிக்கிறார் டாக்டர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...