Skip to main content

Doctor Vikatan: மாதத்தில் சில நாள்கள் தூக்கமின்மை பாதிப்பு... காரணமென்ன.. எப்படிச் சமாளிப்பது?

Doctor Vikatan: நான் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கிறேன். பொதுவாக இரவில் படுத்த உடனே தூங்கிவிடுவேன். ஆனால், மாதத்தில் சில நாள்கள் மட்டும் இரவில் முழுவதும் தூக்கம் வராமல் தவிக்கிறேன். அடுத்தநாள் பகலில் தூங்கி ஓய்வெடுக்கவும் என் வேலைச்சூழல் இடம் தராது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்.... தூக்கமின்மையை எப்படிச் சமாளிப்பது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

பிறர் பொறாமைப்படும் அளவுக்கு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நபருக்கு, திடீரென தூக்கம் பாதிக்கலாம். மாதத்தில் சில நாள்கள் இப்படி தூக்கமே இல்லாமல் போகலாம். காரணம் தெரியாவிட்டாலும் இந்தப் பிரச்னையைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

முதல்நாள் இரவு முழுவதும் தூக்கமில்லை என்பதற்காக அடுத்தநாள் பகல் முழுவதும் தூங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருநாள் இரவு தூக்கமில்லாதது ஒன்றும் அவ்வளவு சீரியஸான பிரச்னை அல்ல. பைலட்டுகள், ஓட்டுநர்கள், மருத்துவர்கள் என எத்தனையோ பேர் அப்படி தூக்கமில்லாமல் இருக்கிறார்கள். ஒருநாள் தொடங்கி, நான்கைந்து நாள்கள்வரை தூக்கமில்லாதது என்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. தூக்கமின்மை குறித்து பதற்றமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை.

முதல்நாள் இரவு தூக்கமில்லாத பட்சத்தில், அடுத்த நாள் பகலில் குட்டித்தூக்கம் போடலாமே தவிர, அது இரவு அளவுக்கு நீண்ட தூக்கமாக இருக்கக்கூடாது. காலையில் சூரியன் உதயமாகும்போது எழுந்திருக்கவும், இரவில் சரியான நேரத்துக்குத் தூங்கவும் பழக வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு முன் வெளிச்சமான விளக்குகளை, திரைகளைப் பார்ப்பதைத் தவிருங்கள். த்ரில்லர் படங்கள், காட்சிகளைப் பார்க்காதீர்கள். அடுத்தநாள் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு, விசேஷம் போன்றவை இருந்தால், அது குறித்த சிந்தனை காரணமாக முந்தைய இரவு தூக்கம் தடைப்படலாம். அதுவும் இயல்பானதே.

இரவு தூக்கம்

மனதை அமைதிப்படுத்தினால் தூக்கம் தானாக வரும். அதற்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி பெரிதும் உதவும். புதிய இடம், புதிய சூழல் போன்றவையும் தூக்கமின்மைக்கு காரணமாகலாம். மெனோபாஸ், ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸ், தைராய்டு பாதிப்பு, வைரஸ் தொற்று, மனப்பதற்றம் என தூக்கமின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் தசைகளைத் தளர்த்தும் பயிற்சிகளைப் பழக வேண்டும். சிலருக்கு படுத்த உடனேயே கால்களில் ஒருவித குடைச்சல், அசௌகர்யம் தோன்றும். புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே இருப்பார்களே தவிர, தூங்க மாட்டார்கள். இந்தப் பிரச்னைக்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless legs syndrome) என்று பெயர். மக்னீசியம் சத்து இந்தப் பிரச்னைக்கான தீர்வாக இருக்கும் என சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். எப்சம் சால்ட் கலந்த நீரில் சில நிமிடங்கள் கால்களை வைத்திருப்பதன் மூலம், சருமத்தின் வழியே மக்னீசியம் சத்து உள்ளிறங்கி, நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, இரவு நல்ல உறக்கத்துக்கு உதவும். மருத்துவரின் ஆலோசனையோடு மெக்னீசியம் மற்றும் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...