Skip to main content

Doctor Vikatan: எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?

Doctor Vikatan: என் நண்பர் ஒருவர் தினமும் காலையில் இளநீர் குடிப்பதை பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறார். வெயில் காலத்தில் மட்டுமன்றி, மழை, குளிர்காலங்களிலும் குடிப்பார்.   இப்படி தினமும் இளநீர் குடிப்பது சரியானதா... அதனால் ஆரோக்கியம் மேம்படுமா... எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

இளநீரில் பொட்டாசியம் சத்து மிக அதிகம். பொட்டாசியம் சத்தானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானது.  வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது நீரிழப்பை ஈடுசெய்ய இளநீர் பெரிதும் உதவும். இதயநலன் காப்பதிலும் இளநீருக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆன்டிஏஜிங் தன்மைகள் கொண்டது என்பதால், அடிக்கடி இளநீர் சாப்பிடுவோருக்கு முதுமைத்தோற்றம் தள்ளிப்போகும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். 'என்னுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது' என்று சொல்பவர்கள்,  மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிடும் ஹெச்பிஏ1சி (HbA1c ) பரிசோதனையில், ரத்தச் சர்க்கரையின் அளவானது 7-க்குள் இருக்கும் நிலையில்,  வாரம் இருமுறை இளநீர் குடிக்கலாம்.  அது இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்கும். அதுவே, ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இல்லை என்பவர்கள் நிச்சயம் இளநீர் குடிக்கவே கூடாது.

HbA1c

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டிருக்கும்.  இவர்கள் இளநீர் குடிக்கும்போது பொட்டாசியம் அளவு சட்டென அதிகரித்துவிடும் என்பதால் இளநீர் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இளநீரைப் போலவே அதன் உள்ளே உள்ள வழுக்கைப் பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. உதாரணத்துக்கு வயிற்றின் உள்பகுதியை ஆற்றும் தன்மை  கொண்டது என்பதால் செரிமான பிரச்னைகள் நீங்கும்.

டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீர்வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு இல்லாத நிலையில் தினமும் 2 இளநீர் கூட குடிக்கலாம்.  உடற்பயிற்சி செய்வோர், காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். மற்றபடி உடல்ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் தினமும் ஒரு இளநீர் குடிக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...