Skip to main content

Doctor Vikatan: இரட்டைப் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதில் வித்தியாசம் இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர்.  16 வயதாகிறது. ஒருத்தி ஒரு வருடத்துக்கு முன்பே வயதுக்கு வந்துவிட்டாள். இன்னொரு மகள் இன்னும் வயதுக்கு வரவில்லை. இரட்டையர்களாகப் பிறந்த இவர்களுக்கு பூப்பெய்தும் இந்த விஷயத்தில் ஏன் இந்த வித்தியாசம்....? வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு சிகிச்சை அவசியமா... இதனால் அவள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். என்ன செய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

நித்யா ராமச்சந்திரன்

சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் வயது மாறியிருக்கிறது.  பருவமடைதலும், அதன் தொடர்ச்சியாக மாதவிடாய் வருவதும் பெண் குழந்தையின் உடல் ஹார்மோன்கள், சூழலியல் காரணங்கள் மற்றும் பரம்பரைத் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தவை.

ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி என்பது பெரும்பாலும் கிட்டத்தட்ட ஒன்றுபோலத்தான் இருக்கும். உயரம், உடல் பருமன், மார்பக வளர்ச்சி போன்றவை ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஒரே நேரத்தில்தான் மாதவிடாய் வரும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை நம்மிடம் இல்லை. எனவே, அந்த அடிப்படையில் பார்க்கும்போது ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கு மேலான பெண் குழந்தைகள் ஒரே நேரத்தில்தான் பூப்பெய்துவார்கள் என்பது தவறான நம்பிக்கையே.

இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள், ஒரு குழந்தைக்கு பீரியட்ஸ் வந்து, இன்னொரு குழந்தைக்கு வராமலிருக்கும்போது, அது இயல்பான உடலியல் நிகழ்வுதான் என்பதையும், இன்னொரு குழந்தைக்கும் அது இயல்பாக நடக்கும் என்பதையும் விளக்கிச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். 

மாதவிடாய் (Representational Image)

அதே நேரம், 16 வயதுக்குப் பிறகும் பீரியட்ஸ் வராவிட்டால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.  உங்கள் மகளை தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.  பருவமடைதலின் அறிகுறிகளாக பிறப்புறுப்பிலும் அக்குளிலும் ரோம வளர்ச்சி, மார்பகங்கள் பெரிதாவது போன்ற 'செகண்டரி செக்ஸுவல் கேரக்டரிஸ்டிக்ஸ்' (Secondary sexual characteristics) எல்லாம் இயல்பாக இருக்கின்றனவா என பார்க்க வேண்டும்.  பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு 16 வயதுக்குள் மாதவிடாய் வந்துவிடும். அரிதாக சிலருக்கு அதன் பிறகும் வராமலிருக்கும்போது அதற்கான காரணம் தெரிந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.

ஹார்மோன் சமநிலையின்மை இருக்கிறதா, மூளையிலிருந்து வரவேண்டிய சிக்னல் வராததற்கு என்ன காரணம், கர்ப்பப்பையிலோ, சினைப்பையிலோ பிரச்னை இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கப்படும். கூடவே நாளமில்லா சுரப்பியல் மருத்துவரின் ஆலோசனையோடு சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். சில பெண்களுக்கு மாதந்தோறும் பீரியட்ஸின்போது உணர்கிற வயிற்றுவலி வரும்.ஆனால் ரத்தம் மட்டும் வெளியேறாது. இதை 'க்ரிப்டோமெனோரியா' (Cryptomenorrhea ) என்கிறோம். அதாவது வெஜைனாவின் வெளிப்புறத்தில் உள்ள ஹைமன் என்ற பகுதி  சற்று தடித்திருக்கலாம்.

pixabay

அதனால் மாதவிடாயின்போது வெளியேற வேண்டிய ரத்தம் வெளியே வராமல் உள்ளுக்குள்ளேயே தங்கிவிடும்.  சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் இந்தப் பிரச்னையை சரிசெய்துவிட முடியும். அதன் பிறகு மாதவிடாய் ரத்தம் வெளியே வரும்.

இரட்டையர்களாகப் பிறந்ததால் ஒருவர் மட்டும் பூப்பெய்திய நிலையில், இன்னொருவருக்கு அந்த நிகழ்வு வராமலிருப்பது உளவியல்ரீதியான அழுத்தமாக மாற வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை மன அழுத்தம் தரும் அளவுக்குப் பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளாதபடி மகளுக்கு அறிவியல்ரீதியாக விளக்கிச் சொல்லுங்கள். தேவைப்பட்டால் கவுன்சலிங் அழைத்துச் செல்வதும் பலன் தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...