Skip to main content

Biden Vs Trump: `ட்ரம்ப் குற்றவாளி’ ; `உங்கள் மகன் தான் குற்றவாளி’ - 90 நிமிடங்கள் அனல்பறந்த விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், CNN செய்தி நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கும் இடையே நேரடி விவாதம் நடக்க ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில், பார்வையாளர்கள் இல்லாத அரங்கில், இரு தலைவர்கள் மட்டுமே சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தில் ஒருவர் பேசும்போது மற்றவருடைய மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வாய்ப்பு வரும்போதுதான் பேச முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

மேலும், இந்த விவாதம் அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து தளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. இரு தலைவர்களும் பொருளாதார பிரச்னைகள், வெளியுறவுக் கொள்கை, சர்வதேச நெருக்கடிகள், நாட்டின் குடியேற்ற நெருக்கடி, அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை என மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். உலக நாடுகளே கூர்ந்து நோக்கிய அந்த விவாதத்தின் முக்கிய அம்சங்கள்...

ஜோ பைடன்: ``2021-ல் அதிபராக பதவியேற்றபோது, ​​பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் இருந்தது. அந்த குழப்பத்திலிருந்து பொருளாதாரத்தைக் காப்பாற்றி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மருந்து விலைகள் குறைக்கப்பட்டது. நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து வந்தேன்.”டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

ட்ரம்ப்: ``என் ஆட்சி காலத்தில் பொருளாதார நிலை சீராகதான் இருந்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வுக்கு யார் காரணம்... பணவீக்கம் நம் நாட்டைக் கொன்று கொண்டிருக்கிறது. பைடன் ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது உண்மை தான், ஆனால் அது முறைகேடாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.”

ஜோ பைடன்: ``கருக்கலைப்பு அணுகலைத் தடுப்பதில் ட்ரம்பின் பங்குதான் அதிகம்”

ட்ரம்ப்: ``கருக்கலைப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டேன். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கருக்கலைப்பு மருந்து விநியோகங்களை தடுக்க மாட்டேன். பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து நமது ராணுவ வீரர்களை திரும்பப் பெற்றது நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் சங்கடமான நாள். உறுதியான தலைவர் இருந்திருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது.”டொனால்ட் ட்ரம்ப்

பைடன்: ``ட்ரம்ப் ஒரு குற்றவாளி அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலை தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை. தலைநகரைத் தாக்கியவர்களைக் கண்டிப்பீர்களா?”

ட்ரம்ப்: ``உங்கள் மகனே ஒரு குற்றவாளி. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அது அனைத்தும் எனக்கு எதிராக மோசடியான அமைப்பால் செய்யப்பட்டது. நான் யாருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. என் மீதான வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படும். என் நற்பெயரை சேதப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால் மக்கள் உண்மையைப் பார்க்கிறார்கள்.”

ஆப்கானிஸ்தான் , உக்ரைன், காசா போர் என இரு தரப்பும் மாறி மாறி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம் இந்த விவாதத்தில் ட்ரம்ப் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் பகுதியில் டிரம்ப் சுமார் 23 நிமிடங்கள் பேசினார். அதேநேரம் பைடன் 18 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பைடன் பேசும் போது பல இடங்களில் திக்கித் திணறினார். பலமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவரால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Hunter Biden: `25 ஆண்டுகள் வரை சிறை'- பைடன் மகனைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்! - பின்னணி என்ன?


http://dlvr.it/T8tN9X

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...