Skip to main content

Biden Vs Trump: `ட்ரம்ப் குற்றவாளி’ ; `உங்கள் மகன் தான் குற்றவாளி’ - 90 நிமிடங்கள் அனல்பறந்த விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், CNN செய்தி நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கும் இடையே நேரடி விவாதம் நடக்க ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில், பார்வையாளர்கள் இல்லாத அரங்கில், இரு தலைவர்கள் மட்டுமே சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தில் ஒருவர் பேசும்போது மற்றவருடைய மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வாய்ப்பு வரும்போதுதான் பேச முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

மேலும், இந்த விவாதம் அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து தளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. இரு தலைவர்களும் பொருளாதார பிரச்னைகள், வெளியுறவுக் கொள்கை, சர்வதேச நெருக்கடிகள், நாட்டின் குடியேற்ற நெருக்கடி, அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை என மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். உலக நாடுகளே கூர்ந்து நோக்கிய அந்த விவாதத்தின் முக்கிய அம்சங்கள்...

ஜோ பைடன்: ``2021-ல் அதிபராக பதவியேற்றபோது, ​​பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் இருந்தது. அந்த குழப்பத்திலிருந்து பொருளாதாரத்தைக் காப்பாற்றி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மருந்து விலைகள் குறைக்கப்பட்டது. நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து வந்தேன்.”டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

ட்ரம்ப்: ``என் ஆட்சி காலத்தில் பொருளாதார நிலை சீராகதான் இருந்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வுக்கு யார் காரணம்... பணவீக்கம் நம் நாட்டைக் கொன்று கொண்டிருக்கிறது. பைடன் ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது உண்மை தான், ஆனால் அது முறைகேடாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.”

ஜோ பைடன்: ``கருக்கலைப்பு அணுகலைத் தடுப்பதில் ட்ரம்பின் பங்குதான் அதிகம்”

ட்ரம்ப்: ``கருக்கலைப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டேன். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கருக்கலைப்பு மருந்து விநியோகங்களை தடுக்க மாட்டேன். பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து நமது ராணுவ வீரர்களை திரும்பப் பெற்றது நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் சங்கடமான நாள். உறுதியான தலைவர் இருந்திருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது.”டொனால்ட் ட்ரம்ப்

பைடன்: ``ட்ரம்ப் ஒரு குற்றவாளி அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலை தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை. தலைநகரைத் தாக்கியவர்களைக் கண்டிப்பீர்களா?”

ட்ரம்ப்: ``உங்கள் மகனே ஒரு குற்றவாளி. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அது அனைத்தும் எனக்கு எதிராக மோசடியான அமைப்பால் செய்யப்பட்டது. நான் யாருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. என் மீதான வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படும். என் நற்பெயரை சேதப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால் மக்கள் உண்மையைப் பார்க்கிறார்கள்.”

ஆப்கானிஸ்தான் , உக்ரைன், காசா போர் என இரு தரப்பும் மாறி மாறி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம் இந்த விவாதத்தில் ட்ரம்ப் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் பகுதியில் டிரம்ப் சுமார் 23 நிமிடங்கள் பேசினார். அதேநேரம் பைடன் 18 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பைடன் பேசும் போது பல இடங்களில் திக்கித் திணறினார். பலமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவரால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Hunter Biden: `25 ஆண்டுகள் வரை சிறை'- பைடன் மகனைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்! - பின்னணி என்ன?


http://dlvr.it/T8tN9X

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...