Skip to main content

Apollo: அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் ரோபோட்டிக் ஸ்டீரியோடாக்டி கதிரியக்க அறுவைச் சிகிச்சை திட்டம்!

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), கதிரியக்க சிகிச்சை சாதனங்களை வழங்கும் ஒரு உலகளாவிய நிறுவனமான அக்யூரே – ன் ஒத்துழைப்போடு, ரோபோட்டிக்  & சீரியோடாட்டிக் அறுவைசிகிச்சை செயல்திட்டத்திற்காக இந்திய துணைக்கண்டத்தில் முதல் 'ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் சிகிச்சை கல்வி மையம்' தொடங்கப்படுவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.  சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் இயங்கி வரும் அப்போலோ கேன்சர் சென்டர் வளாகங்களில் இக்கல்வி மையங்கள் நிறுவப்படும். மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை மருத்துவர்கள், இயற்பியலாளர்கள், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மேம்பட்ட கதிரியக்க அறுவைசிகிச்சை கல்வி சார்ந்த பயிற்சியினை இம்மையங்கள் வழங்கும். 

Apollo Cancer Centre

ரோபோட்டிக் மற்றும் ஸ்டீரியோடாட்டிக் கதிரியக்க அறுவைசிகிச்சை மீது சிறப்பு கவனம் செலுத்தும் இக்கல்வித்திட்டத்தில் விரிவான விவாதங்கள், கலந்துரையாடல்கள், செய்முறை விளக்கங்கள் மற்றும் நேரடி பயிற்சி ஆகியவை உள்ளடங்கும்.  உலகத்தரம் வாய்ந்த பயிற்சியானது, உள்நாட்டிலேயே கிடைப்பதை உறுதிசெய்வதால், இந்தியாவின் மருத்துவக் கல்வி சேர்வதற்கு இந்த முன்னெடுப்பு நடவடிக்கையானது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக கருதப்படுகிறது.  வலுவான மற்றும் நடைமுறை யதார்த்தம் சார்ந்த கற்றல் அனுபவம், பயிற்சி திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆழமான விவாதங்களிலும் மற்றும் செய்முறை பயிற்சிகளிலும் இதன் பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள்.

புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் சங்கர் வங்கிபுரம் இது தொடர்பாக கூறியதாவது: “அப்போலோ கேன்சர் சென்டரின் சைபர்நைஃப் அகாடமியா தொடங்கப்பட்டிருப்பது, ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் கதிரியக்க அறுவைசிகிச்சையில் மருத்துவப் பணியாளர்களின் திறன்களையும், அறிவையும் மேம்படுத்துவதற்கு ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும்.  இந்தியாவில் சைபர்நைஃப் ரோபோட்டிக் அறுவைசிகிசிச்சை அமைப்பை முன்னோடித்துவமாக அறிமுகம் செய்து செயல்படுத்தி வருவதன் மூலம் நமது நாட்டில் புற்றுநோய் சிகிச்சை என்பது, மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது; எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த பயிற்சி செயல்திட்டத்தின்போது மதிப்புமிக்க நிபுணத்துவ திறனையும், உள்நோக்குகளையும் பங்கேற்பாளர்களோடு பகிர்ந்துகொள்ளும் நிகழ்வை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்; எமது நோயாளிகளுக்கு இன்னும் சிறப்பாக நாங்கள் சேவையாற்றவும் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய உலகளாவிய தரநிலைகளை நிறுவவும் இது எங்களை ஏதுவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” 

Apollo Cancer Centre

புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் மகாதேவ் போத்தராஜு இது தொடர்பாக பேசுகையில், “இந்த மிக நவீன கல்வி மையத்தை நிறுவி தொடங்குவது, உலகத்தரத்தில் மிக உயர்ந்த புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கான எமது குறிக்கோளோடும், செயல்திட்டத்தோடும் மிக நேர்த்தியாகப் பொருந்துகிறது.  எமது புற்றுநோயியல் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களின் நிபுணத்துவத்தையும் மற்றும் செயல்திறன்களையும் இந்த சைபர்நைஃப் பயிற்சி இன்னும் சிறப்பாக மேம்படுத்தும்; இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான நமது அணுகுமுறையிலேயே விரிவான மாற்றத்தை கொண்டு வரும்.” என்று குறிப்பிட்டார். 

அப்போலோ ஆஸ்பிட்டல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியல் இன்டர்நேஷனல் துறையின் பிரசிடென்ட் திரு. தினேஷ் மாதவன் பேசுகையில், “புற்றுநோய் சிகிச்சை காலத்தில் புதிதாக வந்திருக்கும் புரட்சிகர தொழில்நுட்பங்கள் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட, பிரத்யேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.  அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அக்யூரே ஆகியவை இணைந்து தொடங்கியிருக்கும் ரோபோட்டிக் மற்றும் ஸ்டீரியேடேட்டிக் கதிரியக்க சிகிச்சை செயல்திட்டம், ஏஷியன் பிராந்தியத்தில் இது தொடர்பான பயிற்சி வசதிகளை பெரிய அளவில் முன்னேற்றும்.  சைபர்நைஃப் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்து பயன்படுத்துவதற்கு தேவைப்படும் இன்றியமையாத அறிவு மற்றும் திறன்களை புற்றுநோயியல் மருத்துவர்களும், இயற்பியலாளர்களும் மற்றும் சிகிச்சை வழங்கும் தொழில்நுட்ப பணியாளர்களும்  பெற்று பயனடைவதற்கு இது உதவும்.” என்று கூறினார். 

Apollo Cancer Centre

அக்யூரே நிறுவனத்தின் பிரசிடென்ட் மற்றும் தலைமை செயல் அலுவலர் Ms. சூஸன் வின்டர் கூறியதாவது: “சைபர்நைஃப்® S7™  சிஸ்டம், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அப்போலோ கேன்சர் சென்டர்களில் விரிவாக்கம் செய்யப்படுவதை அக்யூரே மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.  இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த மருத்துவமனைகளுடன் நாங்கள் மேற்கொள்ளும் உறுதியான ஒத்துழைப்பு நடவடிக்கைக்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.  இதன் நிகரற்ற துல்லியத்தினால் சிகிச்சை தரநிலைகளை சைபர்நைஃப் S7 சிஸ்டம் மறுவரையறை செய்கிறது; சிகிச்சையின் விளைவுகளை மிகச் சிறப்பானதாக ஆக்குவதற்கு மருத்துவர்களுக்கு திறனதிகாரத்தை வழங்குகிறது.  கூடுதலாக, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக வழக்கமாக 1 முதல் 5 அமர்வுகளில் வேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைகளுக்காக அதிக உயர் அளவிலான கதிர்வீச்சு வழங்கப்படுவதை இது ஏதுவாக்குகிறது.” 

சைபர்நைஃப் சிஸ்டம் என்பது, ஊடுருவல் அல்லாத, ரோபோட்டிக் முறையிலான கதிர்வீச்சு சிகிச்சை சாதனமாகும்.  புற்றுக்கட்டியைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், உயர் துல்லியத்துடன் புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  மிக சிக்கலான மற்றும் எட்டுவதற்கு கடினமான இடத்திலுள்ள புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க இச்சாதனம் வகை செய்கிறது.  உயர் கூர்நோக்கத்துடன் கதிர்வீச்சு அலைக்கற்றைகளை வழங்குவதற்கு மேம்பட்ட இமேஜிங் மற்றும் கணினி மயமாக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை இது பயன்படுத்துகிறது.

Apollo Cancer Centre

உலகத்தரம் வாய்ந்த விரிவான பயிற்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் இக்கல்வி செயல்திட்டம், இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் சைபர்நைஃப் சிகிச்சை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். 

இந்தியாவிற்கு சிறப்பு திறன் வாய்ந்த கல்வி முன்னெடுப்பு திட்டத்தை கொண்டு வந்திருப்பதன் வழியாக மருத்துவ புத்தாக்கத்தில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பிறருக்கு வழிகாட்டுவதில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.  உடல்நல பராமரிப்பு பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நாடெங்கிலும் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பலன்களை முன்னேற்றம் காணச்செய்வது என்ற குறிக்கோளுடன் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...