Skip to main content

Apollo: அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் ரோபோட்டிக் ஸ்டீரியோடாக்டி கதிரியக்க அறுவைச் சிகிச்சை திட்டம்!

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), கதிரியக்க சிகிச்சை சாதனங்களை வழங்கும் ஒரு உலகளாவிய நிறுவனமான அக்யூரே – ன் ஒத்துழைப்போடு, ரோபோட்டிக்  & சீரியோடாட்டிக் அறுவைசிகிச்சை செயல்திட்டத்திற்காக இந்திய துணைக்கண்டத்தில் முதல் 'ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் சிகிச்சை கல்வி மையம்' தொடங்கப்படுவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.  சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் இயங்கி வரும் அப்போலோ கேன்சர் சென்டர் வளாகங்களில் இக்கல்வி மையங்கள் நிறுவப்படும். மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை மருத்துவர்கள், இயற்பியலாளர்கள், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மேம்பட்ட கதிரியக்க அறுவைசிகிச்சை கல்வி சார்ந்த பயிற்சியினை இம்மையங்கள் வழங்கும். 

Apollo Cancer Centre

ரோபோட்டிக் மற்றும் ஸ்டீரியோடாட்டிக் கதிரியக்க அறுவைசிகிச்சை மீது சிறப்பு கவனம் செலுத்தும் இக்கல்வித்திட்டத்தில் விரிவான விவாதங்கள், கலந்துரையாடல்கள், செய்முறை விளக்கங்கள் மற்றும் நேரடி பயிற்சி ஆகியவை உள்ளடங்கும்.  உலகத்தரம் வாய்ந்த பயிற்சியானது, உள்நாட்டிலேயே கிடைப்பதை உறுதிசெய்வதால், இந்தியாவின் மருத்துவக் கல்வி சேர்வதற்கு இந்த முன்னெடுப்பு நடவடிக்கையானது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக கருதப்படுகிறது.  வலுவான மற்றும் நடைமுறை யதார்த்தம் சார்ந்த கற்றல் அனுபவம், பயிற்சி திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆழமான விவாதங்களிலும் மற்றும் செய்முறை பயிற்சிகளிலும் இதன் பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள்.

புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் சங்கர் வங்கிபுரம் இது தொடர்பாக கூறியதாவது: “அப்போலோ கேன்சர் சென்டரின் சைபர்நைஃப் அகாடமியா தொடங்கப்பட்டிருப்பது, ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் கதிரியக்க அறுவைசிகிச்சையில் மருத்துவப் பணியாளர்களின் திறன்களையும், அறிவையும் மேம்படுத்துவதற்கு ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும்.  இந்தியாவில் சைபர்நைஃப் ரோபோட்டிக் அறுவைசிகிசிச்சை அமைப்பை முன்னோடித்துவமாக அறிமுகம் செய்து செயல்படுத்தி வருவதன் மூலம் நமது நாட்டில் புற்றுநோய் சிகிச்சை என்பது, மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது; எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த பயிற்சி செயல்திட்டத்தின்போது மதிப்புமிக்க நிபுணத்துவ திறனையும், உள்நோக்குகளையும் பங்கேற்பாளர்களோடு பகிர்ந்துகொள்ளும் நிகழ்வை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்; எமது நோயாளிகளுக்கு இன்னும் சிறப்பாக நாங்கள் சேவையாற்றவும் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய உலகளாவிய தரநிலைகளை நிறுவவும் இது எங்களை ஏதுவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” 

Apollo Cancer Centre

புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் மகாதேவ் போத்தராஜு இது தொடர்பாக பேசுகையில், “இந்த மிக நவீன கல்வி மையத்தை நிறுவி தொடங்குவது, உலகத்தரத்தில் மிக உயர்ந்த புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கான எமது குறிக்கோளோடும், செயல்திட்டத்தோடும் மிக நேர்த்தியாகப் பொருந்துகிறது.  எமது புற்றுநோயியல் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களின் நிபுணத்துவத்தையும் மற்றும் செயல்திறன்களையும் இந்த சைபர்நைஃப் பயிற்சி இன்னும் சிறப்பாக மேம்படுத்தும்; இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான நமது அணுகுமுறையிலேயே விரிவான மாற்றத்தை கொண்டு வரும்.” என்று குறிப்பிட்டார். 

அப்போலோ ஆஸ்பிட்டல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியல் இன்டர்நேஷனல் துறையின் பிரசிடென்ட் திரு. தினேஷ் மாதவன் பேசுகையில், “புற்றுநோய் சிகிச்சை காலத்தில் புதிதாக வந்திருக்கும் புரட்சிகர தொழில்நுட்பங்கள் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட, பிரத்யேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.  அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அக்யூரே ஆகியவை இணைந்து தொடங்கியிருக்கும் ரோபோட்டிக் மற்றும் ஸ்டீரியேடேட்டிக் கதிரியக்க சிகிச்சை செயல்திட்டம், ஏஷியன் பிராந்தியத்தில் இது தொடர்பான பயிற்சி வசதிகளை பெரிய அளவில் முன்னேற்றும்.  சைபர்நைஃப் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்து பயன்படுத்துவதற்கு தேவைப்படும் இன்றியமையாத அறிவு மற்றும் திறன்களை புற்றுநோயியல் மருத்துவர்களும், இயற்பியலாளர்களும் மற்றும் சிகிச்சை வழங்கும் தொழில்நுட்ப பணியாளர்களும்  பெற்று பயனடைவதற்கு இது உதவும்.” என்று கூறினார். 

Apollo Cancer Centre

அக்யூரே நிறுவனத்தின் பிரசிடென்ட் மற்றும் தலைமை செயல் அலுவலர் Ms. சூஸன் வின்டர் கூறியதாவது: “சைபர்நைஃப்® S7™  சிஸ்டம், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அப்போலோ கேன்சர் சென்டர்களில் விரிவாக்கம் செய்யப்படுவதை அக்யூரே மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.  இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த மருத்துவமனைகளுடன் நாங்கள் மேற்கொள்ளும் உறுதியான ஒத்துழைப்பு நடவடிக்கைக்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.  இதன் நிகரற்ற துல்லியத்தினால் சிகிச்சை தரநிலைகளை சைபர்நைஃப் S7 சிஸ்டம் மறுவரையறை செய்கிறது; சிகிச்சையின் விளைவுகளை மிகச் சிறப்பானதாக ஆக்குவதற்கு மருத்துவர்களுக்கு திறனதிகாரத்தை வழங்குகிறது.  கூடுதலாக, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக வழக்கமாக 1 முதல் 5 அமர்வுகளில் வேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைகளுக்காக அதிக உயர் அளவிலான கதிர்வீச்சு வழங்கப்படுவதை இது ஏதுவாக்குகிறது.” 

சைபர்நைஃப் சிஸ்டம் என்பது, ஊடுருவல் அல்லாத, ரோபோட்டிக் முறையிலான கதிர்வீச்சு சிகிச்சை சாதனமாகும்.  புற்றுக்கட்டியைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், உயர் துல்லியத்துடன் புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  மிக சிக்கலான மற்றும் எட்டுவதற்கு கடினமான இடத்திலுள்ள புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க இச்சாதனம் வகை செய்கிறது.  உயர் கூர்நோக்கத்துடன் கதிர்வீச்சு அலைக்கற்றைகளை வழங்குவதற்கு மேம்பட்ட இமேஜிங் மற்றும் கணினி மயமாக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை இது பயன்படுத்துகிறது.

Apollo Cancer Centre

உலகத்தரம் வாய்ந்த விரிவான பயிற்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் இக்கல்வி செயல்திட்டம், இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் சைபர்நைஃப் சிகிச்சை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். 

இந்தியாவிற்கு சிறப்பு திறன் வாய்ந்த கல்வி முன்னெடுப்பு திட்டத்தை கொண்டு வந்திருப்பதன் வழியாக மருத்துவ புத்தாக்கத்தில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பிறருக்கு வழிகாட்டுவதில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.  உடல்நல பராமரிப்பு பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நாடெங்கிலும் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பலன்களை முன்னேற்றம் காணச்செய்வது என்ற குறிக்கோளுடன் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...