Skip to main content

``இதைச் செய்தாலே உலகளவில் 4 - 5 பில்லியன் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்திவிடலாம்!" - WHO இயக்குநர்

இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வயதானவர்கள் உடலளவில் சுறுசுறுப்புடன் செயல்படவில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

சமீபத்தில் தி லான்செட் குளோபல் ஹெல்த் மருத்துவ இதழில் ஆய்வு தரவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, உலகில் 2-ல் ஒரு முதியோர் உடல் சார்ந்த எந்தச் செயல்பாடுகளையும் செய்வதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

உடல் சார்ந்த செயல்பாடுகள் குறைவு!

உலக சுகாதார நிறுவன மருத்துவ நிபுணர்கள் குழு, "வயதானவர்கள் குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியும், 70 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறது. ஆனால், ஆய்வில், உலகளவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 31 சதவிகிதம் பேரும், இந்தியளவில் 49.9 சதவிகிதம் பேரும் அதிகளவு உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், இந்தியாவில் ஆண்களை விட (57 சதவிகிதம்) பெண்கள் (42 சதவிகிதம்) குறைவாகவே உடல் சார்ந்த செயல்பாடுகள் செய்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

2000-ம் ஆண்டில், வயதானவர்களில் 22 சதவிகிதம் பேர், உடல் சார்ந்த செயல்பாடுகள் இல்லாமல் இருந்திருக்கின்றனர். 2010-ம் ஆண்டு அது 34 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2030-ல் 60 சதவிகிதமாக உயர்ந்துவிடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பெட்ரோஸ் அதானோம், "வயதானவர்களிடையே உடல் சார்ந்த செயல்பாடுகள் எந்த அளவிற்கு மோசம் அடைந்து வருகின்றன என்பதை இந்த ஆய்வுத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. முந்தைய ஆய்வுகளைக் காட்டிலும் தற்போதைய ஆய்வு முடிவுகளின் சதவிகிதம் அதிகரித்து உள்ளது.

WHO இயக்குனர் கூறுவதாவது...

பொருளாதார வளர்ச்சி குறைந்த நாடுகளை விட வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இந்த நிலை அதிகரித்திருக்கிறது. உடல் சார்ந்த செயல்பாடுகள் அதிகம் இல்லாததால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு நோய், டிமென்ஷியா, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

அன்றாட உடல் செயல்முறைகளை குறிப்பிட்ட அளவு கடைப்பிடித்து வந்தாலே வருடத்திற்கு 4 முதல் 5 பில்லியன் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்" என்று கூறியிருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...