Skip to main content

Smoking: டீன் ஏஜ் பெண்களின் புகைப்பழக்கம் இருமடங்கு அதிகரிப்பு... மோசமான பிரச்னைகள் வரலாம்?!

`புகைபிடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்’… `புற்றுநோயை உருவாக்கும்’… எனக் கூறினாலும் `என் உடல், என் சுதந்திரம்’ எனப் புகைபிடிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். 

ஒருபுறம் இந்தியாவில் புகையிலையின் நுகர்வு குறைந்திருக்கிறது. இருந்தாலும், டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிப்பது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்திய புகையிலை கட்டுப்பாட்டு அறிக்கையில் கூறியுள்ளது.

சிகரெட் smoking

இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் வயதான பெண்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் குறைந்துவிட்டாலும், இளம் பருவத்தினரிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இது குறித்து அறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலில், 2009 மற்றும் 2019-க்கு இடையில் பதின்ம வயது பெண்களில் புகைபிடித்தல் 3.8 சதவிகித புள்ளிகள் உயர்ந்து 6.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது பெண்களில் அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதைக் காட்டுகிறது.

அதுவே பதின்ம வயது ஆண்களில் புகைபிடிக்கும் பழக்கம் 2.3 சதவிகித புள்ளிகள் அதிகரித்துள்ளது. பெரியவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம், ஆண்களில் 2.2 சதவிகித புள்ளிகளும், பெண்களில் 0.4 சதவிகிதமும் குறைந்துள்ளது.

*பதின்ம வயது பெண்கள் புகைபிடிக்க காரணம் என்ன? வேகமான முதிர்ச்சி, பதின்ம வயது ஆண்களைப் போலவே தங்கள் கோபத்திலிருந்து விடுபடவும், கூலாக தோன்றவும் பதின்ம வயது பெண்கள் அதிகமாக புகைபிடிப்பதாக கூறப்படுகிறது. தங்களின் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு சிலர் பசியின் வேதனையிலிருந்து விடுபடும் வழியாகவும் புகைபிடிக்கின்றனர். 

அதுமட்டுமல்லாமல் இளம் பருவத்தினரிடையே பாலின இடைவெளி குறைந்து வருகிறது. 2019-ல் 7.4 சதவிகித பதின்ம பெண்கள் மற்றும் 9.4 சதவிகித பதின்ம ஆண்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர். இளைஞர்களை புகைபிடிப்பதிலிருந்து வெளியேற்றுவதற்கான தலையீடுகள் செய்யப்படாவிட்டால், எதிர்காலத்தில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Pregnant woman

*என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

பொதுவாகவே புகைபிடிப்பதால் சுவாச நோய்கள், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயங்கள் அதிகரிக்கின்றன. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது கருவுறுதலை (Fertility) பாதிக்கும்.

பெண்களில் கூடுதல் பாதிப்பாக சேதமடைந்த நுரையீரல் மற்றும் பிறவிக் குறைபாடுகளுடன் கூடிய குறைமாத குழந்தை பிறப்புகள் (premature births) ஏற்படுகின்றன. புகைபிடிக்கும் பழக்கத்தால் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.

புகைபிடிக்கும் பெண்களுக்கு 50 வயதிற்கு முன்பே மாதவிடாய் நின்று போகும் அபாயம் 43 சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...