Skip to main content

Iron Man கைகளைப் பெறும் 5 வயது சிறுவன்... மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை!

நியூயார்க்கின் லாங் ஐலேண்டை சேர்ந்த 5 வயது சிறுவன் ஜோர்டன் மரோட்டா. இந்தச் சிறுவன் பிறக்கும்போதே இடது கையின்றி பிறந்திருக்கிறார். 

இந்தநிலையில் சிறுவனுக்கு மூளையின் கட்டளைக்கு இணங்கி இயற்கையாகச் செயல்படும் வகையில் அயன் மேன் தீமில் (bionic Hero Arm) மருத்துவர்கள் கையைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் உலகில் சிறிய வயதில் `பயோனிக் ஹீரோ ஆர்ம்' பெறும் நபர் என்ற பெருமையை ஜோர்டன் பெற்றுள்ளார்.

Jordan - Bionic Hero Arm

சிறுவனுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அயர்ன் மேன் என்பதால், இந்தக் கையை அப்படியே அச்சு அசலாக அயர்ன் மேன் திரைப்படத்தில் வரும் கைகளைப் போலவே சிவப்பு மற்றும் கோல்டன் நிறத்தில் வடிவமைத்துள்ளனர்.

சிறுவனின் இடது கை முடியும் இடத்திலிருந்து இந்தக் கை பொருத்தப்படுகிறது. கை தசைச் சுருக்கங்களைக் கண்டறிய மின்முனைகள் மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எளிதாக இந்தக் கையை இணைந்து பிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கையை `நப்பி’ என்று குடும்பத்தினர் செல்லமாக அழைக்கின்றனர்.

இது பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் வரை செயல்படும் என்று கூறுகின்றனர். பொதுவாகவே இந்த அட்வான்ஸ்டு செயற்கை கைகள் ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

இருந்தாலும், ஓபன் பயோனிக்ஸ் நிறுவனத்தில் சான்றளிக்கப்பட்ட செயற்கை மற்றும் எலும்பு முறிவு நிபுணரான டேனியல் கிரீன், சிறுவனின் உடல் வளர்ச்சியும், உணர்வு ரீதியான வளர்ச்சியும் சிறப்பாக இருந்ததால் இந்தக் கைகள் அவருக்கு அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்தக் கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சிறுவனுக்கு கற்றுக் கொடுப்பது எளிதாக இருந்தது என்றார். 

இதன் மூலம் உலகிலேயே மிகச் சிறிய வயதில் பயோனிக் ஹீரோ ஆர்ம் பெறும் சிறப்பினை ஜோர்டன் பெற்றார். இதற்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹீரோ ஆர்ம் பயன்படுத்தினார்.  

ஜோர்டானின் தாய் ஆஷ்லே மரோட்டா, தன் மகன் இரு கைகளையும் பயன்படுத்தி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்த ஹீரோ ஆர்ம் தன் மகனுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...