Skip to main content

Happy Teeth: உடையும் பற்கள், வெள்ளை நிறப் புள்ளிகள்... Fluorosis பிரச்னையாக இருக்கலாம்..!

அனைத்துப் பற்களும் சீராக ஒரே நிறத்தில் இல்லாமல், அங்கங்கே கறை பிடித்தது போலவும், வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது போல பல் அமைப்பு இருப்பதைப் பார்த்திருப்போம். குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தப் பிரச்னை பொதுவாகக் காணப்படுகிறது. இதனை மருத்துவ சொற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) என்கின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா.

ஃப்ளூரோசிஸ் (Fluorosis)

ஃப்ளூரைடு (Fluoride) என்பது இயற்கையாக உருவாகும் ஒருவகை தாதுப்பொருள் (mineral). இது நிலத்தடி நீரில் காணப்படலாம். நாம் சாப்பிடும் பால், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுகளிலும் குறைந்த அளவில் காணப்படும். இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது ஃப்ளூரைடு உடலின் உள்ளே செல்கிறது. நம் உடல் அளவுக்கு அதிகமாக ஃப்ளூரைடை கிரகிக்கும்போது ஏற்படும் பிரச்னைதான் ஃப்ளூரோசிஸ். இந்தப் பிரச்னை பற்களிலும் (Dental Fluorosis) அல்லது எலும்பிலும் (Skeletal Fluorosis) ஏற்படலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

பற்களில் வெள்ளை நிற புள்ளிகள், பழுப்பு நிறமாக மாறுவது, பற்களின் மேலே உள்ள லேயரான எனாமல் நீங்கி உடைவது (Chipping) போன்றவை இதற்கான அறிகுறிகள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். பற்களில் ஏற்படும் ஃப்ளுரோசிஸ் பிரச்னையை லேசான, மிதமான, தீவிர பாதிப்பு என்று மூன்றாகப் பிரிக்கலாம்.

பற்களில் ஏற்படும் ஃப்ளுரோசிஸ் பிரச்னையை லேசான, மிதமான, தீவிர பாதிப்பு என்று மூன்றாகப் பிரிக்கலாம்.

லேசான பாதிப்பு எனும்போது பற்களில் வெள்ளை நிறப்புள்ளிகள் மட்டுமே காணப்படும். சிலருக்கு ஒரே ஒரு பல்லில் ஓரிடத்தில் மட்டுமே காணப்படலாம். மற்ற பற்களைவிட அந்தப் பல் சற்று அடர் நிறத்திலும் காணப்படலாம். மீதமுள்ள பற்கள் இயல்பான நிறத்தில் இறக்கும். மிதமான பாதிப்பு எனும்போது பற்கள் பழுப்பு நிறமாக மாறும். சில பற்களில் மேடு பள்ளங்கள் போல தோன்றும் சீரற்ற மேற்பரப்பு காணப்படும். சீரற்ற மேற்பரப்பு இருப்பதால் பற்களின் மேல் பாறை படிந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தீவிரநிலையில் பாதிக்கப்பட்ட பல்லின் வலிமை குறைந்து அது உடைய ஆரம்பிக்கும்.

பற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) பிரச்னை ஏற்படுவதில் ஒரே ஒரு நன்மை உண்டு. லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதாக பற்சொத்தை ஏற்படாது. இதுபோன்ற பாதிப்புள்ளவர்கள் முறையாக பிரஷ் செய்து வாய் சுகாதாரத்தைப் பேணினால் பற்சொத்தை எளிதில் தாக்காது. ஆனால், ஈறு சார்ந்த நோய்கள், பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) பிரச்னை ஏற்படுவதில் ஒரே ஒரு நன்மை உண்டு. லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதாக பற்சொத்தை ஏற்படாது.

பற்களின் நிறம், தோற்றத்தை சரி செய்வதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆனால், உடலின் உள்ளே இருக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. பற்கள் உடைந்த, உடையும் நிலையில் இருந்தால் அதற்கு மேல் ஒரு கவர் போல பொருத்தி (Crowning) சிகிச்சை அளிக்கப்படும். இது பல் மேலும் சேதமடையாமல் தடுக்கும்.

ஃப்ளூரோசிஸ் பிரச்னை இருக்கும் குழந்தைகள் ஃப்ளூரைடு சேர்க்கப்படாத டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னை இல்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் குறிப்பிட்ட அளவு ஃப்ளூரைடு இருக்க வேண்டும். காரணம், ஃப்ளூரைடு என்ற தாது, பல்லின் மேலே படிந்து பல் சொத்தையாவதைத் தடுக்கும்.

பல் மருத்துவர் ஏக்தா

தருமபுரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருக்கும் நிலத்தடி நீரில் இயற்கையாகவே அதிகமாக ஃப்ளூரைடு காணப்படும். ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் இந்தப் பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்தால்கூட ஃப்ளூரைடு நீங்காது. வீடுகளில் இருக்கும் தண்ணீரில் சிறிது படிகாரம் போட்டு சிறிது நேரம் வைக்கும்போது அடியில் ஒரு லேயர் போல படியும். அதற்குப் பிறகு அந்த நீரை வடிகட்டி (மட்டுமே) பயன்படு்த்தலாம்.

இந்த முறையில் சுத்தம் செய்யும்போதும் தண்ணீரில் இருக்கும் ஃப்ளூரைடு முழுவதுமாக நீங்காது. குறிப்பிட்ட அளவு ஃப்ளூரைடு தண்ணீரில் காணப்படும். ஆனால், அது பற்களை பாதிக்கும் அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்தாது என்பதால் இதைப் பின்பற்றலாம்" என்றார்.  

Happy Teeth

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...