Skip to main content

Doctor Vikatan: கழுத்து வலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் உறங்க வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான கழுத்து வலி இருக்கிறது. ஜெல், ஆயின்மென்ட், வலி நிவாரணி எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்த பிறகும் வலி குறையவில்லை. தலையணை இல்லாமல் படுத்து உறங்கினால் கழுத்து வலி குறையும் என்று சிலர் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார்  சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

முதலில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்துவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எலும்பு, மூட்டு மருத்துவரையோ, வலி நிர்வாக மருத்துவரையோ அணுகினால், அவர் 'ஸ்பைனல் மவுஸ்' (Spinal Mouse) என்ற பிரத்யேக கருவியின் உதவியோடு கழுத்துப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கலாம். அதன் பிறகு சிகிச்சையை மருத்துவர் முடிவுசெய்வார்.

பொதுவாக  நூறு பேரில் 80 பேருக்கு கழுத்து பின்பக்கமாக வளையும் தன்மை இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தக் காரணத்தால் கழுத்துவலி வந்திருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள், சாதாரண தலையணை உபயோகிப்பதைவிடவும், செர்வைகல் பில்லோ (Cervical Pillow ) எனப்படும் கழுத்துக்கான பிரத்யேக தலையணையைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும்.  நம் கழுத்துப் பகுதியானது ஆங்கில எழுத்து  C  போன்று வளையும். பின்பக்கம் வளையாத தன்மையால், இந்த  C  வடிவ வளைவும் மாறிப் போய், நம் கழுத்தானது ஸ்ட்ரெயிட்டாக மாறிவிடுகிறது. 

Cervical Pillow | செர்வைகல் பில்லோ

இப்படி ஸ்ட்ரெயிட்டாக மாறிய கழுத்தை, மீண்டும் பழைய வளைவுக்குத் திருப்ப செர்வைகல் பில்லோ உதவியாக இருக்கும். உங்கள் தோள்பட்டை முடியும் இடத்தில் ஒரு ஸ்கேலை தலையை நோக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து அதே பக்கத்தின் காது மடலுக்கும், ஸ்கேலுக்குமான இடைவெளியை அளந்து கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கான தலையணையின் அகலமாக இருக்க வேண்டும்.  அதைவிட அகலமான தலையணை பயன்படுத்தினாலும் கழுத்துப் பகுதி பாதிக்கப்பட்டு, வலி அதிகரிக்கும்.  எனவே, சரியான அகலம் கொண்ட செர்வைகல் தலையணையின் மூலம் கழுத்தின் இயல்பான வளைவை நம்மால் தக்கவைக்க முடியும்.

செர்வைகல் பில்லோ வாங்க இயலாதவர்கள் சாதாரண டர்கி டவலையோ அல்லது சாஃப்ட்டான பெட்ஷீட்டையோ ரோல் செய்து, மேற்குறிப்பிட்ட அகலத்தைக் கணக்கிட்டு மடித்து கழுத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு படுப்பது மிகவும் சிறந்தது.   இந்த ஸ்பெஷல் தலையணை உபயோகிப்பது மட்டுமன்றி, மருத்துவர் சொல்லித்தரும் கழுத்துக்கான பயிற்சிகளையும் செய்யும்போது வலியிலிருந்து எளிதில் மீளலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...