Skip to main content

Doctor Vikatan: கழுத்து வலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் உறங்க வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான கழுத்து வலி இருக்கிறது. ஜெல், ஆயின்மென்ட், வலி நிவாரணி எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்த பிறகும் வலி குறையவில்லை. தலையணை இல்லாமல் படுத்து உறங்கினால் கழுத்து வலி குறையும் என்று சிலர் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார்  சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

முதலில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கழுத்துவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எலும்பு, மூட்டு மருத்துவரையோ, வலி நிர்வாக மருத்துவரையோ அணுகினால், அவர் 'ஸ்பைனல் மவுஸ்' (Spinal Mouse) என்ற பிரத்யேக கருவியின் உதவியோடு கழுத்துப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கலாம். அதன் பிறகு சிகிச்சையை மருத்துவர் முடிவுசெய்வார்.

பொதுவாக  நூறு பேரில் 80 பேருக்கு கழுத்து பின்பக்கமாக வளையும் தன்மை இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தக் காரணத்தால் கழுத்துவலி வந்திருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள், சாதாரண தலையணை உபயோகிப்பதைவிடவும், செர்வைகல் பில்லோ (Cervical Pillow ) எனப்படும் கழுத்துக்கான பிரத்யேக தலையணையைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும்.  நம் கழுத்துப் பகுதியானது ஆங்கில எழுத்து  C  போன்று வளையும். பின்பக்கம் வளையாத தன்மையால், இந்த  C  வடிவ வளைவும் மாறிப் போய், நம் கழுத்தானது ஸ்ட்ரெயிட்டாக மாறிவிடுகிறது. 

Cervical Pillow | செர்வைகல் பில்லோ

இப்படி ஸ்ட்ரெயிட்டாக மாறிய கழுத்தை, மீண்டும் பழைய வளைவுக்குத் திருப்ப செர்வைகல் பில்லோ உதவியாக இருக்கும். உங்கள் தோள்பட்டை முடியும் இடத்தில் ஒரு ஸ்கேலை தலையை நோக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து அதே பக்கத்தின் காது மடலுக்கும், ஸ்கேலுக்குமான இடைவெளியை அளந்து கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கான தலையணையின் அகலமாக இருக்க வேண்டும்.  அதைவிட அகலமான தலையணை பயன்படுத்தினாலும் கழுத்துப் பகுதி பாதிக்கப்பட்டு, வலி அதிகரிக்கும்.  எனவே, சரியான அகலம் கொண்ட செர்வைகல் தலையணையின் மூலம் கழுத்தின் இயல்பான வளைவை நம்மால் தக்கவைக்க முடியும்.

செர்வைகல் பில்லோ வாங்க இயலாதவர்கள் சாதாரண டர்கி டவலையோ அல்லது சாஃப்ட்டான பெட்ஷீட்டையோ ரோல் செய்து, மேற்குறிப்பிட்ட அகலத்தைக் கணக்கிட்டு மடித்து கழுத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு படுப்பது மிகவும் சிறந்தது.   இந்த ஸ்பெஷல் தலையணை உபயோகிப்பது மட்டுமன்றி, மருத்துவர் சொல்லித்தரும் கழுத்துக்கான பயிற்சிகளையும் செய்யும்போது வலியிலிருந்து எளிதில் மீளலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...