Skip to main content

Doctor Vikatan: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா நாவல் பழமும், நாவல் பழக் கொட்டைகளும்?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் பழம் நல்லது என்பது உண்மையா? எத்தனை பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்? நாவல் பழக் கொட்டையைப் பொடித்து தண்ணீரில் கலக்கிக் குடித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

பொதுவாக நீரிழிவு நோயாளிகளை எல்லாப் பழங்களையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்த மாட்டோம். அவர்கள் சாப்பிட அனுமதிக்கப்படுகிற பழங்களில் முக்கியமான ஒன்று நாவல்பழம், நாவல் பழம் கிடைக்கும் சீசனில், ஒரு நாளைக்கு 3 முதல் 4 பழங்கள் வரை சாப்பிடலாம்.

முடிந்த அளவுக்கு அந்தக் காலத்தில் அதிகம் கிடைத்த நாட்டு நாவல் பழமாகப் பார்த்துச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஒருவேளை அது கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் தற்போது சந்தையில் கிடைக்கிற நாவல்பழத்தையும் சாப்பிடலாம்.  நாவல்பழத்தில் 'ஜம்போலின்' (Jambolin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் உப பாதிப்புகளைத் தடுக்கும் தன்மை கொண்டது இந்த வேதிப்பொருள்.

பளிச்சென்ற நிறத்தில் இருக்கும் காய்கறி, பழங்கள் எல்லாவற்றிலுமே பாலிபினால் (Polyphenol ) அதிகமிருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி தன்மைகள் கொண்ட அவை, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. நீரிழிவால் ஏற்படும் பாலிடிப்சியா (Polydipsia) எனப்படும்  நீர்வேட்கையைத்  தடுக்கும் தன்மை நாவல் பழத்துக்கு உண்டு என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அந்த வகையில்,  நாவல்பழத்தின் துவர்ப்புச் சுவைக்கு  தாகத்தைத் தணிக்கும் தன்மை உண்டு.

நீரிழிவு

இதே தன்மை நாவல்பழக் கொட்டைக்கும் உண்டு. நாவல்பழக் கொட்டைகளைக் காயவைத்துப் பொடித்ததை அரை டீஸ்பூன் அளவுக்கு தண்ணீரில் கரைத்து அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். நாவல்பழம் நீரிழிவுக்கு நல்லது என்பதால் இதை மட்டுமே சாப்பிடுவதால் நீரிழிவு குணமாகிவிடும் என நினைக்க வேண்டாம். நீரிழிவாளர்கள் எடுக்கக்கூடிய மருந்து மற்றும் சிகிச்சைகளோடு வாய்ப்பு கிடைக்கும்போது நாவல் பழத்தையும் சாப்பிடலாம். எனவே, பிற சிகிச்சைகள், உணவுக்கட்டுப்பாடு, வாழ்வியல் மாற்றங்கள் போன்றவற்றோடு நாவல் பழம் சாப்பிடுவதையும் சேர்த்துச் செய்யும்போது நிச்சயம் கூடுதல் பலன் கிடைக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...