Skip to main content

Doctor Vikatan: இரவு நேரத்தில் நாவறட்சி, பாதிக்கப்படும் தூக்கம்... என்ன காரணம், தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 50. இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போவதாக உணர்கிறேன். அதற்காக தண்ணீர் குடித்தால் இரண்டு மணி நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. தூக்கம் கெட்டுப் போகிறது. இதற்கான தீர்வு என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

இரவு நேரத்தில் ஏற்படும் தொண்டை வறட்சிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஜலதோஷம், சைனஸ் தொற்று, அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தால் இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போகிற மாதிரி இருக்கும். உடனே சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும். 

சிலருக்கு வாயைத் திறந்துகொண்டு தூங்கும் பழக்கம் இருக்கும். அந்தப் பழக்கத்தாலும் இரவில் தொண்டை வறட்சி ஏற்படலாம். சைனஸ், குறட்டை, 'அப்ஸ்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) பாதிப்பு என  வாயைத் திறந்துகொண்டே தூங்கும் பழக்கத்துக்கும் பல காரணங்கள் இருக்கலாம்.  ஒருவேளை நாவறட்சி ஏற்படுகிறது என்றால், அது உடலில் நீர்ச்சத்து குறைவதன் அறிகுறியாகவும் இருக்கலாம். அதற்கு நாள் முழுவதும் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் மட்டும் தண்ணீர் குடிப்பது சரியானதல்ல. அப்படிக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் உந்துதல் நிச்சயம் வரும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல தூக்கமும் பாதிக்கப்படும். 

குறட்டை

எனவே, பகல் வேளை முழுவதும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் 7 அல்லது 8 மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுவது நல்லது. அதன் பிறகு தாகம் எடுத்தால் சிறிதளவு மட்டுமே தண்ணீர் குடிக்கலாம். எனவே, இந்தப் பழக்கத்தை சில நாள்கள் பின்பற்றிப் பாருங்கள். உடலில் நீர்வறட்சி ஏற்படாது என்பதால் இரவில் நாக்கும் வறண்டு போகாது. தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதனால் தூக்கம் பாதிப்பது போன்ற பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு ஏற்படும் தொண்டை வறட்சிக்கு சைனஸ், குறட்டை, வாயைத் திறந்து தூங்கும் பழக்கம் என மேற்குறிப்பிட்ட வேறு காரணங்கள் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றுக்கான தீர்வுகளைப் பெறவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...