Skip to main content

Doctor Vikatan: இரவு நேரத்தில் நாவறட்சி, பாதிக்கப்படும் தூக்கம்... என்ன காரணம், தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 50. இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போவதாக உணர்கிறேன். அதற்காக தண்ணீர் குடித்தால் இரண்டு மணி நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. தூக்கம் கெட்டுப் போகிறது. இதற்கான தீர்வு என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

இரவு நேரத்தில் ஏற்படும் தொண்டை வறட்சிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஜலதோஷம், சைனஸ் தொற்று, அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தால் இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போகிற மாதிரி இருக்கும். உடனே சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும். 

சிலருக்கு வாயைத் திறந்துகொண்டு தூங்கும் பழக்கம் இருக்கும். அந்தப் பழக்கத்தாலும் இரவில் தொண்டை வறட்சி ஏற்படலாம். சைனஸ், குறட்டை, 'அப்ஸ்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) பாதிப்பு என  வாயைத் திறந்துகொண்டே தூங்கும் பழக்கத்துக்கும் பல காரணங்கள் இருக்கலாம்.  ஒருவேளை நாவறட்சி ஏற்படுகிறது என்றால், அது உடலில் நீர்ச்சத்து குறைவதன் அறிகுறியாகவும் இருக்கலாம். அதற்கு நாள் முழுவதும் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் மட்டும் தண்ணீர் குடிப்பது சரியானதல்ல. அப்படிக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் உந்துதல் நிச்சயம் வரும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல தூக்கமும் பாதிக்கப்படும். 

குறட்டை

எனவே, பகல் வேளை முழுவதும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் 7 அல்லது 8 மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுவது நல்லது. அதன் பிறகு தாகம் எடுத்தால் சிறிதளவு மட்டுமே தண்ணீர் குடிக்கலாம். எனவே, இந்தப் பழக்கத்தை சில நாள்கள் பின்பற்றிப் பாருங்கள். உடலில் நீர்வறட்சி ஏற்படாது என்பதால் இரவில் நாக்கும் வறண்டு போகாது. தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதனால் தூக்கம் பாதிப்பது போன்ற பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு ஏற்படும் தொண்டை வறட்சிக்கு சைனஸ், குறட்டை, வாயைத் திறந்து தூங்கும் பழக்கம் என மேற்குறிப்பிட்ட வேறு காரணங்கள் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றுக்கான தீர்வுகளைப் பெறவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...