Skip to main content

Doctor Vikatan: மதியம் ஆரம்பித்து இரவில் உச்சம் தொடும் தலைவலி... காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: எனக்கு மதிய நேரத்தில் லேசாக தலைவலி ஆரம்பித்து மாலை நேரத்தில் அதிகரித்து இரவு ஒன்பது மணிக்கு உச்சத்தை அடைகிறது. வாந்தி எடுத்து  குடல் சுத்தமான  பிறகு தான் குறைகிறது. தலைவலி ஆரம்பிக்கும்போதே நான் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வேன். அப்படி எடுத்துக் கொண்டால் அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகி விடுகிறது. மாதம் ஒருமுறை இதுபோல் தலைவலி வருகிறது. இதற்கு என்ன காரணம்.. தீர்வு என்ன?

-kjprakash123, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும்  நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.

நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா

தலைவலியில் பல வகைகள் உள்ளன. டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டாலும் தலைவலி வரலாம். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் அதன் அறிகுறியாக தலைவலி வரலாம். பவர் அதிகமானாலோ, குறைந்தாலோ, பார்வை மங்கினாலோ தலைவலிக்கலாம். பார்வையில் பிரச்னை இருப்பதை அலட்சியப்படுத்திவிட்டோ, அறியாமலோ, கண்ணாடி அணியாமல் இருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைவலி ஏற்படலாம்.

சிலருக்கு ஒரு பக்கம் வலிக்கிற ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) ஏற்படலாம். இந்த வகை தலைவலியில் வாந்தி வரும். வாந்தி எடுத்து முடிக்கிறவரை தலைவலி தொடரும். டென்ஷன் தலைவலி என சிலருக்கு வரும். ஸ்ட்ரெஸ் காரணமாக ஏற்படுகிற இந்தத் தலைவலி, மதியம் தொடங்கி, மாலை, இரவு நெருங்க, நெருங்க அதிகமாகும். மூளையில் ஏதேனும் பிரச்னை இருப்பதன் அறிகுறியாகவும் தலைவலி உணரப்படலாம்.

வெயிலில், வெளியில் நீண்ட நேரம் அலைந்து, வியர்வை அதிகம் வெளியேறி, தண்ணீரே குடிக்காதவர்களுக்கு உடலில் நீர் வறட்சி ஏற்பட்டிருக்கும். எனவே, இவர்கள் தலைவலி ஏற்படும்போது அதை நீர்வறட்சியின் அறிகுறியாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் தலைவலியை உணர்பவர்கள், நரம்பியல் மருத்துவரை அணுகி, அது ஒற்றைத் தலைவலியா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள், செரட்டோனின் இன்ஹிபிட்டர்ஸ் (serotonin inhibitors) என்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.  அதுதான் முதல் சிகிச்சையாக இருக்கும். அந்த மருந்தில் தலைவலி குணமாவது தெரிந்தாலே, அது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்  தலைவலி என உறுதியாகும்.

Vomiting (Representational Image)

குறிப்பிட்ட இடைவெளிகளில் கண் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பார்வைக் குறைபாடுகள் இருந்தால் சிகிச்சை எடுப்பது, கண்ணாடி அணிவது போன்றவற்றைப் பின்பற்றினாலே தலைவலி சரியாவதை உணரலாம்.  காரணம் அறியாத தலைவலியாக இருந்தால், நரம்பியல் மருத்துவரின் பரிந்துரையோடு எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்ன பிரச்னை என்பதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

தலைவலி வரும்போது ஒவ்வொரு முறையும் நீங்களாக பாராசிட்டமால் (Paracetamol ) மாத்திரை எடுப்பது மிகவும் தவறு. உங்கள் தலைவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்வதுதான் சரியானது. நீங்களாக சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. நீண்டகாலமாக பாராசிட்டமால் எடுப்பது கல்லீரல், கிட்னி உள்ளிட்ட உறுப்புகளுக்கு நல்லதல்ல என்பதால் அதன் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...