Skip to main content

இந்தி பாடல்கள் பாடி வயல்களில் நடவு பணி... உற்சாகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள்..!

டெல்டா மாவட்டங்களில் நெல் வயலில் நாற்றுகளை பறித்து நடுவதற்கு முன் ஒரு கட்டு நாற்றை எடுத்து சாலையில் வைத்து வணங்குவது தமிழக விவசாயிகள் வழக்கம். சாலை வழியாக செல்பவர்கள் நாற்று கட்டை வணங்கி காசு போட்டுவிட்டு செல்வார்கள். இதே போல் நாற்றாங்காலில் நாற்றை பறித்து கட்டு கட்டும் ஆண்களும், நடவு பணியில் ஈடுபடும் பெண்களும் களைப்பு ஏற்படாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடுவார்கள். குறிப்பாக தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை பாடலாக்கி நட்டுப்புறப் பாடலாக பாடுவார்கள். சினிமா மற்றும் நையாண்டி பாடல்களையும் பாடுவார்கள்.

பாடல் பாடி விவசாயப் பணியில் ஈடுப்பட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள்

அப்படி பாடும் விவசாய கூலித்தொழிலாளர்களின் குரல் வளம் அற்புதமாக இருக்கும். இவை தமிழக விவசாயிகள் பின்பற்றும் பழக்கவழக்கங்களில் ஒன்று. மேலும் அவர்களது வாழ்க்கையிலும் பின்னி பிணைந்துள்ளது. கடிமான வேலையை கூட ரசித்து செய்யக்கூடியவர்கள் தமிழக விவசாயிகள். இந்நிலையில் பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை தமிழகத்தில் நிலவி வருகிறது .குறிப்பாக டெல்டாவில்ஒரு புறம் நடவு தொடங்கி அறுவடை வரை அனைத்திற்கும் இயந்திரங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் வட மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து விவசாய பணிகள் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்கின்ற விவசாயிகள், விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து குழுவாக வந்த தொழிலாளர்கள் வயல்களில் நடவு செய்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்தில் 12 வட மாநிலத் தொழிலாளர்கள் இந்தியில் பாடல் பாடி நடவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

விவசாயப்பணி

இதன் மூலம் தமிழக விவசாயத் தொழிலாளர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றத் தொடங்கியிருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம், “மயிலாடுதுறை பகுதியில் போர்வெல் மூலம் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தொடங்கியுள்ளன. நம்மூரில் விவசாய பணிகளுக்கான ஆட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் இருக்கிறது. இதனால் நினைத்த நேரத்திற்கு விவ்சாய பணிகள் செய்ய முடியாமல் நடவு தள்ளிப்போகும் நிலையும் ஏற்படுகிறது.

இதை தவிர்ப்பதற்காக வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் ஏக்கர் ஒன்றுக்கு களைபறிக் கூலி ரூ.4,000, நடவுக்கூலி ரூ.4,000 என மொத்தம் ரூ.8,000 கேட்கின்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் ஒரு ஏக்கருக்கு இரண்டுக்கும் சேர்த்து ரூ.4,500 பெற்றுக் கொள்கின்றனர். கூடுதலாக வேலை தந்தாலும் செய்து தருகின்றனர். குறித்த நேரத்தில் வேலை நடக்கிறது, செலவும் குறைகிறது என்பதால் பலரும் வடமாநிலத் தொழிலாளர்கள் வைத்து விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நம்மூர் ஆள்களை விவசாய பணிகளை நேர்த்தியாக செய்வதற்கு பழகிவிட்ட அவர்கள் பாடல் பாடிக்கொண்டே நடவுப்பணிகளை செய்கின்றனர்கள்” என தெரிவித்தனர்.

டெல்டா விவசாயம்

இது குறித்து வட மாநிலத் தொழிலாளர்களில் ஒருவர், “தமிழ் பேசத் தெரிந்த எங்க ஊரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் மூலமாக விவசாய பணிகள் செய்வதற்கு இங்கு வந்துள்ளோம். கடந்த ஆண்டும் இதே போல் வந்தோம். தமிழர்களின் துல்லியமான பணிகளை அறிந்து அதற்கேற்றார் போல் நாங்கள் விவசாய பணிகளை செய்கிறோம். இந்தி சினிமாவில் உள்ள பக்தி மற்றும் விவசாயம் சார்ந்த பாடல்களை பாடியபடி வேலை செய்கிறோம். இதனால் எங்களுக்கு களைப்பு தெரியவில்லை “என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...