Skip to main content

இந்தி பாடல்கள் பாடி வயல்களில் நடவு பணி... உற்சாகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள்..!

டெல்டா மாவட்டங்களில் நெல் வயலில் நாற்றுகளை பறித்து நடுவதற்கு முன் ஒரு கட்டு நாற்றை எடுத்து சாலையில் வைத்து வணங்குவது தமிழக விவசாயிகள் வழக்கம். சாலை வழியாக செல்பவர்கள் நாற்று கட்டை வணங்கி காசு போட்டுவிட்டு செல்வார்கள். இதே போல் நாற்றாங்காலில் நாற்றை பறித்து கட்டு கட்டும் ஆண்களும், நடவு பணியில் ஈடுபடும் பெண்களும் களைப்பு ஏற்படாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடுவார்கள். குறிப்பாக தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை பாடலாக்கி நட்டுப்புறப் பாடலாக பாடுவார்கள். சினிமா மற்றும் நையாண்டி பாடல்களையும் பாடுவார்கள்.

பாடல் பாடி விவசாயப் பணியில் ஈடுப்பட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள்

அப்படி பாடும் விவசாய கூலித்தொழிலாளர்களின் குரல் வளம் அற்புதமாக இருக்கும். இவை தமிழக விவசாயிகள் பின்பற்றும் பழக்கவழக்கங்களில் ஒன்று. மேலும் அவர்களது வாழ்க்கையிலும் பின்னி பிணைந்துள்ளது. கடிமான வேலையை கூட ரசித்து செய்யக்கூடியவர்கள் தமிழக விவசாயிகள். இந்நிலையில் பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை தமிழகத்தில் நிலவி வருகிறது .குறிப்பாக டெல்டாவில்ஒரு புறம் நடவு தொடங்கி அறுவடை வரை அனைத்திற்கும் இயந்திரங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் வட மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து விவசாய பணிகள் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்கின்ற விவசாயிகள், விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து குழுவாக வந்த தொழிலாளர்கள் வயல்களில் நடவு செய்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்தில் 12 வட மாநிலத் தொழிலாளர்கள் இந்தியில் பாடல் பாடி நடவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

விவசாயப்பணி

இதன் மூலம் தமிழக விவசாயத் தொழிலாளர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றத் தொடங்கியிருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம், “மயிலாடுதுறை பகுதியில் போர்வெல் மூலம் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தொடங்கியுள்ளன. நம்மூரில் விவசாய பணிகளுக்கான ஆட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் இருக்கிறது. இதனால் நினைத்த நேரத்திற்கு விவ்சாய பணிகள் செய்ய முடியாமல் நடவு தள்ளிப்போகும் நிலையும் ஏற்படுகிறது.

இதை தவிர்ப்பதற்காக வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் ஏக்கர் ஒன்றுக்கு களைபறிக் கூலி ரூ.4,000, நடவுக்கூலி ரூ.4,000 என மொத்தம் ரூ.8,000 கேட்கின்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் ஒரு ஏக்கருக்கு இரண்டுக்கும் சேர்த்து ரூ.4,500 பெற்றுக் கொள்கின்றனர். கூடுதலாக வேலை தந்தாலும் செய்து தருகின்றனர். குறித்த நேரத்தில் வேலை நடக்கிறது, செலவும் குறைகிறது என்பதால் பலரும் வடமாநிலத் தொழிலாளர்கள் வைத்து விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நம்மூர் ஆள்களை விவசாய பணிகளை நேர்த்தியாக செய்வதற்கு பழகிவிட்ட அவர்கள் பாடல் பாடிக்கொண்டே நடவுப்பணிகளை செய்கின்றனர்கள்” என தெரிவித்தனர்.

டெல்டா விவசாயம்

இது குறித்து வட மாநிலத் தொழிலாளர்களில் ஒருவர், “தமிழ் பேசத் தெரிந்த எங்க ஊரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் மூலமாக விவசாய பணிகள் செய்வதற்கு இங்கு வந்துள்ளோம். கடந்த ஆண்டும் இதே போல் வந்தோம். தமிழர்களின் துல்லியமான பணிகளை அறிந்து அதற்கேற்றார் போல் நாங்கள் விவசாய பணிகளை செய்கிறோம். இந்தி சினிமாவில் உள்ள பக்தி மற்றும் விவசாயம் சார்ந்த பாடல்களை பாடியபடி வேலை செய்கிறோம். இதனால் எங்களுக்கு களைப்பு தெரியவில்லை “என்றார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...