Skip to main content

தைவானைச் சுற்றி வட்டமடிக்கும் சீன ராணுவம்... உச்சக்கட்ட பரபரப்பின் பின்னணி!

கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு தைவான். சீனாவின் தென் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 110 மைல் தொலைவில் தைவான் அமைந்திருக்கிறது. தைவானை தன்னிடமிருந்து பிரிந்துசென்ற ஒரு மாகாணமாகவே சீனா பார்த்துவருகிறது. எனவே, தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சீனா நினைக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்

சமீபத்தில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, தைவானைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தது. இது, அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தைவான் தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்று சீனா உரிமை கோருவதற்கு நீண்ட வரலாற்று பின்னணி இருக்கிறது. ஜப்பானின் பிடியில் இருந்த தைவான், இரண்டாம் உலகப் போரில் சீனாவால் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தைவானிலிருந்து ஜப்பான் வெளியேறியது. சீனக் கொடியும், தைவான் கொடியும்

அதன் பிறகு, சீனக் குடியரசின் அதிகாரப்பூர்வ பகுதியாக தைவான் மாறியது. அடுத்த சில ஆண்டுகளில், சீனாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போது சீனாவின் ராணுவத் தளபதியான சாங் காய் ஷேக்கின் ராணுவம், புரட்சியாளர் மா சே துங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பிறகு, சாங் காய் ஷேக்கும், அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 15 லட்சம் பேரும் சீனாவை விட்டு வெளியேறி தைவானில் குடியேறினர். அங்கு, சர்வாதிகார ஆட்சியை சாங் காய் ஷேக் நடத்தினார். அவரது மறைவுக்குப் பிறகு, தைவானில் ஜனநாயகம் திரும்பியது. அங்கு முதன் முறையாக 1996-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.மாசேதுங்

தற்போது தைவானை 12 நாடுகள் மட்டுமே அங்கீகரித்திருக்கின்றன. தைவானை அங்கீகரிக்கக் கூடாது என்று சீனா உள்ளிட்ட நாடுகள் ராஜாங்க ரீதியில் அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றன. ஆனாலும், தைவானுக்கென்று தனி அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. தைவானுக்கு சொந்த ராணுவம் இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்ற சூழலில், அங்கு ராணுவ நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டிருக்கிறது. மே 23-ம் தேதி நடைபெற்ற அந்த ராணுவ நடவடிக்கைகள் ஒரு தாக்குதல் போன்ற சூழலை உருவாக்கியிருக்கிறது என்று தைவான் ராணுவத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். போர்க் கப்பல்

போர் விமானங்களையும், கப்பல்களையும் சீனா அனுப்பியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தைவானிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திறன் குறித்த சோதனையாகவே இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக சீன ராணுவம் கூறியிருக்கிறது. மேலும், ’பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கான தண்டனைதான் இது’ என்று சீனா கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பிரசாந்த் கிஷோரை கேள்விகளால் தண்ணீர் குடிக்க வைத்த கரண் தாப்பர்?! - பேட்டியும் பின்புலமும்!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவு சமீபகாலமாக மிகவும் மோசமாகியிருக்கிறது. தற்போது, தைவான், அதன் அருகில் இருக்கும் சில தீவுப்பகுதிகளில் சீனாவின் ராணுவம், விமானப்படை, கப்பற்படை, ராக்கெட் படை ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபடுத்தியதால், நிலைமை மேலும் மோசடைந்திருக்கிறது. போர் கப்பல்

சீனாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்க தைவானும் தனது ராணுவப்படைகளை இறக்கிவிட்டதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்திருக்கிறது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சீனா செயல்படுவதாகவும் தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது. ‘வில்லியம் லாய் ஒரு பிரிவினைவாதி’ என்று விமர்சிக்கும் சீனா, அவர் தைவானின் அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டதை விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடு தான் இந்த போர் ஒத்திகை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/T7Mq3F

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...