Skip to main content

தைவானைச் சுற்றி வட்டமடிக்கும் சீன ராணுவம்... உச்சக்கட்ட பரபரப்பின் பின்னணி!

கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு தைவான். சீனாவின் தென் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 110 மைல் தொலைவில் தைவான் அமைந்திருக்கிறது. தைவானை தன்னிடமிருந்து பிரிந்துசென்ற ஒரு மாகாணமாகவே சீனா பார்த்துவருகிறது. எனவே, தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சீனா நினைக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்

சமீபத்தில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, தைவானைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தது. இது, அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தைவான் தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்று சீனா உரிமை கோருவதற்கு நீண்ட வரலாற்று பின்னணி இருக்கிறது. ஜப்பானின் பிடியில் இருந்த தைவான், இரண்டாம் உலகப் போரில் சீனாவால் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தைவானிலிருந்து ஜப்பான் வெளியேறியது. சீனக் கொடியும், தைவான் கொடியும்

அதன் பிறகு, சீனக் குடியரசின் அதிகாரப்பூர்வ பகுதியாக தைவான் மாறியது. அடுத்த சில ஆண்டுகளில், சீனாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போது சீனாவின் ராணுவத் தளபதியான சாங் காய் ஷேக்கின் ராணுவம், புரட்சியாளர் மா சே துங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பிறகு, சாங் காய் ஷேக்கும், அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 15 லட்சம் பேரும் சீனாவை விட்டு வெளியேறி தைவானில் குடியேறினர். அங்கு, சர்வாதிகார ஆட்சியை சாங் காய் ஷேக் நடத்தினார். அவரது மறைவுக்குப் பிறகு, தைவானில் ஜனநாயகம் திரும்பியது. அங்கு முதன் முறையாக 1996-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.மாசேதுங்

தற்போது தைவானை 12 நாடுகள் மட்டுமே அங்கீகரித்திருக்கின்றன. தைவானை அங்கீகரிக்கக் கூடாது என்று சீனா உள்ளிட்ட நாடுகள் ராஜாங்க ரீதியில் அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றன. ஆனாலும், தைவானுக்கென்று தனி அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. தைவானுக்கு சொந்த ராணுவம் இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்ற சூழலில், அங்கு ராணுவ நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டிருக்கிறது. மே 23-ம் தேதி நடைபெற்ற அந்த ராணுவ நடவடிக்கைகள் ஒரு தாக்குதல் போன்ற சூழலை உருவாக்கியிருக்கிறது என்று தைவான் ராணுவத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். போர்க் கப்பல்

போர் விமானங்களையும், கப்பல்களையும் சீனா அனுப்பியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தைவானிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திறன் குறித்த சோதனையாகவே இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக சீன ராணுவம் கூறியிருக்கிறது. மேலும், ’பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கான தண்டனைதான் இது’ என்று சீனா கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பிரசாந்த் கிஷோரை கேள்விகளால் தண்ணீர் குடிக்க வைத்த கரண் தாப்பர்?! - பேட்டியும் பின்புலமும்!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவு சமீபகாலமாக மிகவும் மோசமாகியிருக்கிறது. தற்போது, தைவான், அதன் அருகில் இருக்கும் சில தீவுப்பகுதிகளில் சீனாவின் ராணுவம், விமானப்படை, கப்பற்படை, ராக்கெட் படை ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபடுத்தியதால், நிலைமை மேலும் மோசடைந்திருக்கிறது. போர் கப்பல்

சீனாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்க தைவானும் தனது ராணுவப்படைகளை இறக்கிவிட்டதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்திருக்கிறது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சீனா செயல்படுவதாகவும் தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது. ‘வில்லியம் லாய் ஒரு பிரிவினைவாதி’ என்று விமர்சிக்கும் சீனா, அவர் தைவானின் அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டதை விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடு தான் இந்த போர் ஒத்திகை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88">
https://tinyurl.com/crf99e88 />

http://dlvr.it/T7Mq3F

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...