Skip to main content

மனிதர்களுக்கான மருந்தில் `விலங்கு லோகோ' அச்சடிக்கப்பட்டது ஏன்? - மருந்து நிறுவனத்தின் விளக்கம்!

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கர்நாடக மாநில மருத்துவப் பொருள்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் (KSMSCL) சில மருந்துகளை அனுப்பியுள்ளது. இந்த மருந்துகளை வாங்கிய நோயாளிகள் அதிர்ந்து போயுள்ளனர். அந்த மருந்துகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் லோகோ இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா என மக்கள் குழம்பியுள்ளனர்.

medicines

எங்கு தவறு நடந்தது?!

மருந்துகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமான புஷ்கர் பார்மா லிமிடெட் நிறுவனத்திடம் (Pushkar Pharma) இருந்து, மூக்கினுள் செலுத்தப்படுகிற மருந்துகள் (Nasal Solutions) மற்றும் கண் சொட்டு மருந்து உட்பட 62.9 லட்சம் மதிப்பிலான ஏழு வெவ்வேறு மருந்துகளை இந்தாண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி  கார்ப்பரேஷன் வாங்கி இருந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிடங்குகளுக்கும் இம்மருந்து தயாரிப்புகள் வழங்கப்பட்டன. 

மருந்துகளின் லேபிலில் சுகாதாரத் துறையின் லோகோவிற்கு பதிலாகத் தவறாக கால்நடை பராமரிப்புத் துறையின் லோகோ இருந்ததை அதிகாரிகள் பின்னர் கவனித்துள்ளனர். 

இதனை விசாரித்தபோது, `இது வெறும் அச்சுப்பிழை தான். மருந்துகள் மனித பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானவை' என்று நிறுவனம் கூறியது. 

மருந்துகளைப் பரிசோதித்த அதிகாரிகளும் `லோகோ மட்டுமே தவறாக அச்சிடப்பட்டிருக்கிறது; மருந்துகள் அனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கின்றன' என்று உறுதியளித்தனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட 70% க்கும் மேற்பட்ட தவறாக லோகோ அச்சிடப்பட்ட மருந்துகளை கேஎஸ்எம்எஸ்சிஎல் திரும்பப் பெற்றுள்ளது.

Medicine

என்ன தண்டனை?1…

தங்களது பிழையை நிறுவனம் ஒப்புக்கொண்ட போதும், முழு ஏற்றுமதியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மீதமுள்ள ஸ்டாக்கில் லோகோவை மறைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். நிறுவனத்திற்கு வெறும் 1% அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தவறுக்கு இந்தத் தண்டனையா என மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து கேஎஸ்எம்எஸ்சிஎல் நிர்வாக இயக்குநர் சித்தானந்த எஸ் வதரே கூறுகையில், `` லேபிளின் துறையை குறிப்பிடும் லோகோவின் சிறிய பகுதியில் பிழை நடந்துள்ளது. மருந்து தயாரிப்பு குறித்த தகவல்கள் அப்படியே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் இந்த மருந்துகளுக்குக் கடுமையான பற்றாக்குறை இருப்பதாலும், பொது சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தாலும் லோகோவை மறைக்கும் படி கூறியுள்ளோம். எச்சரிக்கையோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...