Skip to main content

மனிதர்களுக்கான மருந்தில் `விலங்கு லோகோ' அச்சடிக்கப்பட்டது ஏன்? - மருந்து நிறுவனத்தின் விளக்கம்!

கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கர்நாடக மாநில மருத்துவப் பொருள்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் (KSMSCL) சில மருந்துகளை அனுப்பியுள்ளது. இந்த மருந்துகளை வாங்கிய நோயாளிகள் அதிர்ந்து போயுள்ளனர். அந்த மருந்துகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் லோகோ இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா என மக்கள் குழம்பியுள்ளனர்.

medicines

எங்கு தவறு நடந்தது?!

மருந்துகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமான புஷ்கர் பார்மா லிமிடெட் நிறுவனத்திடம் (Pushkar Pharma) இருந்து, மூக்கினுள் செலுத்தப்படுகிற மருந்துகள் (Nasal Solutions) மற்றும் கண் சொட்டு மருந்து உட்பட 62.9 லட்சம் மதிப்பிலான ஏழு வெவ்வேறு மருந்துகளை இந்தாண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி  கார்ப்பரேஷன் வாங்கி இருந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிடங்குகளுக்கும் இம்மருந்து தயாரிப்புகள் வழங்கப்பட்டன. 

மருந்துகளின் லேபிலில் சுகாதாரத் துறையின் லோகோவிற்கு பதிலாகத் தவறாக கால்நடை பராமரிப்புத் துறையின் லோகோ இருந்ததை அதிகாரிகள் பின்னர் கவனித்துள்ளனர். 

இதனை விசாரித்தபோது, `இது வெறும் அச்சுப்பிழை தான். மருந்துகள் மனித பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானவை' என்று நிறுவனம் கூறியது. 

மருந்துகளைப் பரிசோதித்த அதிகாரிகளும் `லோகோ மட்டுமே தவறாக அச்சிடப்பட்டிருக்கிறது; மருந்துகள் அனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கின்றன' என்று உறுதியளித்தனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட 70% க்கும் மேற்பட்ட தவறாக லோகோ அச்சிடப்பட்ட மருந்துகளை கேஎஸ்எம்எஸ்சிஎல் திரும்பப் பெற்றுள்ளது.

Medicine

என்ன தண்டனை?1…

தங்களது பிழையை நிறுவனம் ஒப்புக்கொண்ட போதும், முழு ஏற்றுமதியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மீதமுள்ள ஸ்டாக்கில் லோகோவை மறைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். நிறுவனத்திற்கு வெறும் 1% அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தவறுக்கு இந்தத் தண்டனையா என மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து கேஎஸ்எம்எஸ்சிஎல் நிர்வாக இயக்குநர் சித்தானந்த எஸ் வதரே கூறுகையில், `` லேபிளின் துறையை குறிப்பிடும் லோகோவின் சிறிய பகுதியில் பிழை நடந்துள்ளது. மருந்து தயாரிப்பு குறித்த தகவல்கள் அப்படியே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் இந்த மருந்துகளுக்குக் கடுமையான பற்றாக்குறை இருப்பதாலும், பொது சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தாலும் லோகோவை மறைக்கும் படி கூறியுள்ளோம். எச்சரிக்கையோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...