Skip to main content

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்... ட்ரோல் செய்த நெட்டிசன்கள்; மாணவி சொன்ன சூப்பர் மெசேஜ்!

உத்தர பிரதேச மாநிலத்தின் 10-ம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த பிராச்சி நிகத்தை (Prachi Nigam) யாராலும் மறக்க முடியாது. தனது கடின உழைப்பால் அம்மாணவி 98.5 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவரது முகத்தில் அதிகப்படியான முடி வளர்ந்திருப்பதற்காக கிண்டல் செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சில வாரங்கள் கழித்து நிகம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மெசேஜ் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சரான அனிஷ் பகத் சீதாபூர் மஹ்முதாபாத்தில் உள்ள பிராச்சி நிகத்தின் வீட்டிற்குச் செல்கிறார். பூக்கள் கொடுத்து நிகத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர், `பெரும்பாலான மக்கள் அவள் எப்படி இருக்கிறாள் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். அவள் பாராட்டப்படுவதற்கு பதிலாக, அவள் முழு தேசத்தாலும் கொடுமைப்படுத்தப்பட்டாள்.

Prachi Nigam - Anish bhagatt

ஏன்! பெரும்பாலான பெண்கள் தங்களது வாழ்வில் இதனை அனுபவிக்கிறார்கள். அதனால் முழு தேசமும் பார்க்கத் தகுதியான ஒரு பிரகாசத்தை (glow-up) அவளுக்கு வழங்க முடிவு செய்தேன்’ என்று பேசியுள்ளார். அதன்பின் பிராச்சி நிகத்திற்கு மஸ்காரா, நெயில் பாலிஷ், ஹேர் ஸ்டைல் செய்து மேக் அப் போட்டு விட்டார்.

அந்த வீடியோவின் முடிவில் பிராச்சி நிகம் சொன்ன வார்த்தைகள் தான் அனைவருக்குமான பாடம். `அன்புள்ள பெண்களே, ஒரு போதும் உடைக்கப்படாத ஒன்றை சரிசெய்ய முயற்சி செய்யாதீர்கள்’ என்று அதே புன்னகை முகத்தோடு கூறினார். இந்த வீடியோவை பகிர்ந்த பகத், `இது ட்ரோல்களை நிறுத்தும் என்று நம்புகிறேன்' என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ஆம்! உங்களை உடைக்காத ஒன்றை சரிசெய்ய முயற்சி செய்யாதீர்கள், உறுதியோடு இருங்கள்!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...