Skip to main content

Everest: ``மசாலா தயாரிப்பில் அதிக அளவு பூச்சிக்கொல்லி..?" எவரெஸ்ட் நிறுவனத்தின் விளக்கம்..!

எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலா தயாரிப்புகள் சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை செய்யப்படவில்லை என எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

சோதனையும் அதிர்ச்சியும்...

சமீபத்தில் எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்களின் மசாலா தயாரிப்புகளை ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையம் சோதனை செய்தது. ஹாங்காங்கின் சிம் ஷா சூயிலுள்ள மூன்று கடைகளில் இருந்த இந்நிறுவனங்களின் மசாலா மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியது. 

சோதனையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் எம்.டி.ஹெச் நிறுவனத்தின் தயாரிப்புகளான மெட்ராஸ் கறித்தூள், சாம்பார் மசாலா, குழம்புப் பொடி மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்புப் பொடி ஆகியவற்றில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இந்தத் தயாரிப்புகளை சமையலில் சேர்த்து உண்ணும் போது உடல் நல பிரச்னைகள் உண்டாவதோடு, புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகளும் உள்ளன. 

அதிரடி நடவடிக்கை…

இதனையடுத்து சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, விற்பனைக்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அகற்ற வலியுறுத்தப்பட்டது. அதோடு இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் மசாலா பொருள்களை வாங்க வேண்டாம் எனத் தனது நாட்டு மக்களை ஹாங்காங் எச்சரித்தது. 

ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையத்தின் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்ட சிங்கப்பூர் அரசும் அந்நாட்டில் ஏற்றுமதி செய்த மசாலா பொருள்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவிலும் இம்மசாலா பொருள்களை சோதனை செய்யும்படி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எவரெஸ்ட் நிறுவனத்தின் பதிலென்ன?!... 

இந்தக் களேபரங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் தன் அனைத்து தயாரிப்புகளும் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை என்று வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து எவரெஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எவரெஸ்ட்டின் தயாரிப்புகள் எந்த நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. 60 எவரெஸ்ட் தயாரிப்புகளில் ஒன்று மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு நடைமுறையேயன்றி, தடை அல்ல. 

spices (Representational Image)

எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை என்பதை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறோம்.

எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான தரக் கட்டுப்பாடு சோதனைகளுக்கு உட்படுகின்றன. இந்திய ஸ்பைஸ் போர்டு ஆய்வகங்களில் (Spice Board of India)  இருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகின்றன'' என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

குழந்தைகளுக்கான இருமல் மருந்து, செரிலாக், தற்போது மசாலாக்கள் என தொடர்ந்து இந்திய தயாரிப்புகள் மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது.

உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவில் விஷத்தை கலப்பதை என்னவென்று சொல்வது?!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...