Skip to main content

Doctor Vikatan: கொளுத்தும் கோடையிலும் அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது ஏன்?

Doctor Vikatan: சீசன் மாறும்போது, அதாவது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் சளி பிடித்துக்கொள்வது இயல்பானது. ஆனால், எனக்கு கொளுத்தும் கோடையில்கூட அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதற்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க வழி உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள்தான். அதிலும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுதான் ஜலதோஷத்தை ஏற்படுத்தும். இந்த இரண்டு தொற்றுகள் தவிர்த்து, அரிதாக சிலருக்கு பூஞ்சைத் தொற்று (Fungal infection) காரணமாகவும் சளி பிடிக்கலாம். 

வைரஸ்களில் லட்சக்கணக்கான வகைகள் உண்டு. அவற்றில் கோடைக்காலத்தில் சில வைரஸ்களும், குளிர்காலத்தில் சில வைரஸ்களும் ஆக்டிவ்வாக இருக்கும்.  திடீரென சளி பிடித்துக்கொள்வது, சைனஸ் பிரச்னை, காதுகளில் ஒருவித அசௌகர்யம், தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சல், இருமல்... இவையெல்லாம் வைரஸ் தொற்றுகளின் பொதுவான மற்றும் முக்கியமான அறிகுறிகள். கோடையில் வெயில்தான் கொளுத்தி எடுக்கிறதே... பிறகு ஏன் ஜலதோஷம் பிடிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் உண்டு.  

கோடைக்காலத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் வைரஸ்கள்தான் கோடையிலும் சளி, இருமலை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, என்டெரோ வைரஸ்கள் ( Enterovirus) கோடையில் ஆக்டிவ்வாக இருப்பதால், அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவே, குளிர் காலத்தில் ரைனோ வைரஸ்கள் (Rhinovirus) ஆக்டிவ்வாக இருப்பதால், அந்த சீசனில் அவை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி

என்டெரோ வைரஸானது சுவாசப்பாதையை பாதித்து சளி, இருமல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். வயிற்றுப்பகுதியை பாதித்து வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.  கோடையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, போதுமான அளவு தூங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  கோடையில் ஏற்படும் இத்தகைய வைரஸ் தொற்றானது அதிகபட்சமாக மூன்று- நான்கு நாள்கள் இருந்துவிட்டு, தானாகவே சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக வைத்துக்கொள்வதுதான் இதிலிருந்து விடுபடும் ஒரே வழி. சளி, இருமல் வந்தாலே உடனே ஆன்டிபயாடிக் மருந்துகளை நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஆன்டிபயாடிக்ஸ் என்பவை பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்த வேண்டியவை. தேவையில்லாமல் அவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...