Skip to main content

Doctor Vikatan: கொளுத்தும் கோடையிலும் அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது ஏன்?

Doctor Vikatan: சீசன் மாறும்போது, அதாவது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் சளி பிடித்துக்கொள்வது இயல்பானது. ஆனால், எனக்கு கொளுத்தும் கோடையில்கூட அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதற்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க வழி உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள்தான். அதிலும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுதான் ஜலதோஷத்தை ஏற்படுத்தும். இந்த இரண்டு தொற்றுகள் தவிர்த்து, அரிதாக சிலருக்கு பூஞ்சைத் தொற்று (Fungal infection) காரணமாகவும் சளி பிடிக்கலாம். 

வைரஸ்களில் லட்சக்கணக்கான வகைகள் உண்டு. அவற்றில் கோடைக்காலத்தில் சில வைரஸ்களும், குளிர்காலத்தில் சில வைரஸ்களும் ஆக்டிவ்வாக இருக்கும்.  திடீரென சளி பிடித்துக்கொள்வது, சைனஸ் பிரச்னை, காதுகளில் ஒருவித அசௌகர்யம், தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சல், இருமல்... இவையெல்லாம் வைரஸ் தொற்றுகளின் பொதுவான மற்றும் முக்கியமான அறிகுறிகள். கோடையில் வெயில்தான் கொளுத்தி எடுக்கிறதே... பிறகு ஏன் ஜலதோஷம் பிடிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் உண்டு.  

கோடைக்காலத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் வைரஸ்கள்தான் கோடையிலும் சளி, இருமலை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, என்டெரோ வைரஸ்கள் ( Enterovirus) கோடையில் ஆக்டிவ்வாக இருப்பதால், அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவே, குளிர் காலத்தில் ரைனோ வைரஸ்கள் (Rhinovirus) ஆக்டிவ்வாக இருப்பதால், அந்த சீசனில் அவை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி

என்டெரோ வைரஸானது சுவாசப்பாதையை பாதித்து சளி, இருமல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். வயிற்றுப்பகுதியை பாதித்து வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.  கோடையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, போதுமான அளவு தூங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  கோடையில் ஏற்படும் இத்தகைய வைரஸ் தொற்றானது அதிகபட்சமாக மூன்று- நான்கு நாள்கள் இருந்துவிட்டு, தானாகவே சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக வைத்துக்கொள்வதுதான் இதிலிருந்து விடுபடும் ஒரே வழி. சளி, இருமல் வந்தாலே உடனே ஆன்டிபயாடிக் மருந்துகளை நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஆன்டிபயாடிக்ஸ் என்பவை பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்த வேண்டியவை. தேவையில்லாமல் அவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...