Skip to main content

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது அதிகம் சாப்பிடுகிறேன். எடை கூடுவதிலிருந்து மீள முடியுமா?

Doctor Vikatan: எனக்கு ஸ்ட்ரெஸ் (Stress) அதிகமாகும்போதெல்லாம் எதையாவது சாப்பிடுகிறேன். இதனாலேயே கடந்த சில மாதங்களாக என் உடல் எடை அதிகரித்துவிட்டது.  ஸ்ட்ரெஸ்ஸாகும்போது சாப்பிடக்கூடாது என நினைத்தாலும் தவிர்க்க முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

சுபா சார்லஸ்

நம்மில் பலரும் பசித்துச் சாப்பிடுவதில்லை. பசியைத் தவிர பல்வேறு காரணங்களுக்காகச் சாப்பிடுகிறோம். அந்த வகையில் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது பசியே இல்லாவிட்டாலும் சாப்பிடுவது ஒருவகை.  அது மனதை ஆசுவாசப்படுத்துவதாக உணர்கிறோம்.

ஸ்ட்ரெஸ் என்பது மனது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உடலும் சம்பந்தப்பட்டது. ஸ்ட்ரெஸ் ஆகும்போது அதீதமாக கற்பனை செய்துகொள்வோம். அது  ஒரு கட்டத்தில் நெகட்டிவிட்டியை நோக்கி நகரும். எதிர்காலத்தை பற்றிய பயத்தைக் கிளப்பும். கடந்தகாலத்தை பற்றிய கவலையைத் தரும். ஓவர் கற்பனையால் இதயம் படபடவென  துடிக்கும்.  ஓடுவது, டிரெட் மில்லில் நடப்பது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது என உடற்பயிற்சிகள் செய்யும்போது இதயம் வேகமாகத் துடிக்கும். பிறகு நார்மலாகும். இது ஆரோக்கியமானது.

உடல் பருமன்...

அதுவே, எதுவுமே செய்யாமல் உட்கார்ந்திருப்போம்... ஆனாலும்  எதற்கோ பயந்து  ஓடுகிற மாதிரி இதயம் வேகமாகத் துடிக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகரிக்கும். மூச்சுவிடுவதில் மாற்றம் உண்டாகும். உங்கள் செயல்திறன் குறையும். அப்படிப்பட்ட நேரத்தில் ஓர் உணவைப் பார்க்கும்போது உடனே சாப்பிடத் தோன்றும். அப்படிச் சாப்பிடும்போது தற்காலிகமாக நம்மை நாமே ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுவித்துக்கொள்கிற மாதிரி உணர்வோம். உணவுக்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்படி ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது எதையாவது சாப்பிடுவது, அதிக சர்க்கரை சேர்த்து காபி, டீ குடிப்பது போன்ற பழக்கமுள்ளவர்களுக்கு எளிதில் எடை கூடும். அடுத்த முறை இப்படிச் செய்யக்கூடாது என நினைத்தாலும் அவர்களையும் அறியாமல் அடுத்த முறை ஸ்ட்ரெஸ்ஸாகும்போதும் அப்படித்தான் சாப்பிடுவார்கள்.

இதைத் தடுக்க, வீட்டில் நொறுக்குத்தீனிகள், ரெடிமேடு உணவுகளை வாங்கி வைப்பதைத் தவிருங்கள். உணவைக் குறைப்பதால் உடல்நலம் கூடும் என்பதை உணருங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக உணர்ந்து, எதையாவது சாப்பிடத் தோன்றினால், முதல் வேலையாக குளிர்ந்த நீர் குடியுங்கள். சளி பிடிக்குமே, தொண்டைக் கரகரப்பு வருமே என்றெல்லாம் யோசிக்காமல் குடியுங்கள். இரண்டாவது மூளை எனச் சொல்லக்கூடிய வயிற்றை இந்தக் குளிர்ந்த நீர் இதமாக்கும். அது பசியல்ல, ஸ்ட்ரெஸ்ஸால் ஏற்படுகிற வயிற்றுச் சுருக்கம் என்பதை உணர்த்தும். 

தண்ணீர் | drinking water

எனவே, அடுத்தமுறை ஸ்ட்ரெஸ் ஆகும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது சாப்பிடுவது என்பது உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்கிற செயல் என்பதை மனதில் பதிய வையுங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது சாப்பிடுகிற இந்தப் பழக்கம் எந்த வகையிலும் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை போக்கப் போவதில்லை, மாறாக, உங்கள் உடல்நலத்தையே பாதிக்கப்போகிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள். குளிர்ந்த நீர் அல்லது சாதாரண தண்ணீர் குடியுங்கள். சிறிது அவல் மெல்லலாம்.  இனிப்புள்ள உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அந்த உணவுகளுக்கு அடிக் ஷனை ஏற்படுத்தும் தன்மை உண்டு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...