Skip to main content

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது அதிகம் சாப்பிடுகிறேன். எடை கூடுவதிலிருந்து மீள முடியுமா?

Doctor Vikatan: எனக்கு ஸ்ட்ரெஸ் (Stress) அதிகமாகும்போதெல்லாம் எதையாவது சாப்பிடுகிறேன். இதனாலேயே கடந்த சில மாதங்களாக என் உடல் எடை அதிகரித்துவிட்டது.  ஸ்ட்ரெஸ்ஸாகும்போது சாப்பிடக்கூடாது என நினைத்தாலும் தவிர்க்க முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

சுபா சார்லஸ்

நம்மில் பலரும் பசித்துச் சாப்பிடுவதில்லை. பசியைத் தவிர பல்வேறு காரணங்களுக்காகச் சாப்பிடுகிறோம். அந்த வகையில் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது பசியே இல்லாவிட்டாலும் சாப்பிடுவது ஒருவகை.  அது மனதை ஆசுவாசப்படுத்துவதாக உணர்கிறோம்.

ஸ்ட்ரெஸ் என்பது மனது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உடலும் சம்பந்தப்பட்டது. ஸ்ட்ரெஸ் ஆகும்போது அதீதமாக கற்பனை செய்துகொள்வோம். அது  ஒரு கட்டத்தில் நெகட்டிவிட்டியை நோக்கி நகரும். எதிர்காலத்தை பற்றிய பயத்தைக் கிளப்பும். கடந்தகாலத்தை பற்றிய கவலையைத் தரும். ஓவர் கற்பனையால் இதயம் படபடவென  துடிக்கும்.  ஓடுவது, டிரெட் மில்லில் நடப்பது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது என உடற்பயிற்சிகள் செய்யும்போது இதயம் வேகமாகத் துடிக்கும். பிறகு நார்மலாகும். இது ஆரோக்கியமானது.

உடல் பருமன்...

அதுவே, எதுவுமே செய்யாமல் உட்கார்ந்திருப்போம்... ஆனாலும்  எதற்கோ பயந்து  ஓடுகிற மாதிரி இதயம் வேகமாகத் துடிக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகரிக்கும். மூச்சுவிடுவதில் மாற்றம் உண்டாகும். உங்கள் செயல்திறன் குறையும். அப்படிப்பட்ட நேரத்தில் ஓர் உணவைப் பார்க்கும்போது உடனே சாப்பிடத் தோன்றும். அப்படிச் சாப்பிடும்போது தற்காலிகமாக நம்மை நாமே ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுவித்துக்கொள்கிற மாதிரி உணர்வோம். உணவுக்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்படி ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது எதையாவது சாப்பிடுவது, அதிக சர்க்கரை சேர்த்து காபி, டீ குடிப்பது போன்ற பழக்கமுள்ளவர்களுக்கு எளிதில் எடை கூடும். அடுத்த முறை இப்படிச் செய்யக்கூடாது என நினைத்தாலும் அவர்களையும் அறியாமல் அடுத்த முறை ஸ்ட்ரெஸ்ஸாகும்போதும் அப்படித்தான் சாப்பிடுவார்கள்.

இதைத் தடுக்க, வீட்டில் நொறுக்குத்தீனிகள், ரெடிமேடு உணவுகளை வாங்கி வைப்பதைத் தவிருங்கள். உணவைக் குறைப்பதால் உடல்நலம் கூடும் என்பதை உணருங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக உணர்ந்து, எதையாவது சாப்பிடத் தோன்றினால், முதல் வேலையாக குளிர்ந்த நீர் குடியுங்கள். சளி பிடிக்குமே, தொண்டைக் கரகரப்பு வருமே என்றெல்லாம் யோசிக்காமல் குடியுங்கள். இரண்டாவது மூளை எனச் சொல்லக்கூடிய வயிற்றை இந்தக் குளிர்ந்த நீர் இதமாக்கும். அது பசியல்ல, ஸ்ட்ரெஸ்ஸால் ஏற்படுகிற வயிற்றுச் சுருக்கம் என்பதை உணர்த்தும். 

தண்ணீர் | drinking water

எனவே, அடுத்தமுறை ஸ்ட்ரெஸ் ஆகும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது சாப்பிடுவது என்பது உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்கிற செயல் என்பதை மனதில் பதிய வையுங்கள். ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது சாப்பிடுகிற இந்தப் பழக்கம் எந்த வகையிலும் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை போக்கப் போவதில்லை, மாறாக, உங்கள் உடல்நலத்தையே பாதிக்கப்போகிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள். குளிர்ந்த நீர் அல்லது சாதாரண தண்ணீர் குடியுங்கள். சிறிது அவல் மெல்லலாம்.  இனிப்புள்ள உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அந்த உணவுகளுக்கு அடிக் ஷனை ஏற்படுத்தும் தன்மை உண்டு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...