Skip to main content

Doctor Vikatan: தினமும் இரவு உணவுக்கு சிறுதானிய கஞ்சி குடிக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 40 வயதாகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்னையும் இல்லை. இந்நிலையில் நான் தினமும் இரவு உணவுக்கு சிறுதானியங்களில் தயாரித்த கஞ்சியை எடுத்துக்கொள்ளலாமா?

-suresh, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும்  நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.

நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா

சிறுதானியங்களைப் பொறுத்தவரை காலையில் சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெற முடியும். அது முடியாத பட்சத்தில் மதியமும் சாப்பிடலாம். வெள்ளை சாதத்துக்கு மாற்றாக சிறுதானியங்களைச் சாப்பிடப் பழகலாம். இரவில் சாப்பிட விரும்பும் பட்சத்தில், அதிகபட்சம் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. சிறுதானிய உணவுகளை எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒரு வரைமுறை உள்ளது. அந்த வகையில் முக்கால் கப் அளவுக்கு எடுத்துக் கொள்வதுதான் சரியானது. சிறுதானியங்களைச் சமைக்க நிறைய தண்ணீர் தேவைப்படும். முழுமையாக வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்.  சிறுதானிய உணவுகளைச் சாப்பிடும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

வாரத்தில் 3 முதல் 4 நாள்களுக்கு சிறுதானிய உணவுகள் சாப்பிட்டால் போதுமானது. தினமும் மூன்று வேளைகளுக்கும் சிறுதானிய உணவுகள் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசிமில்லை. ஒருநாள்விட்டு ஒருநாள் சாப்பிடலாம். இடைப்பட்ட நாள்களில் அரிசி, கோதுமை உணவுகள் சாப்பிடலாம்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையின்றி சிறுதானிய உணவுகளைச் சாப்பிட வேண்டாம். சிலருக்கு தைராய்டு பாதிப்பை இந்த உணவுகள் தீவிரப்படுத்தக்கூடும் என்பதே காரணம். 

ராகி கஞ்சி

சிலவகை சிறுதானியங்கள் 'காய்ட்ரோஜென்' (goitrogens) என்ற ஹார்மோனை விடுவிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதன் விளைவாக  உடலில் உப்புச்சத்து தேங்கிவிடும். உடலில் சோடியம் அளவு அதிகரிப்பது நல்லதல்ல. எனவே, ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சீசனுக்கேற்ப சிறுதானியங்களைத் தேர்வு செய்து சாப்பிடுவதும் அவசியம்.

உதாரணத்துக்கு, இப்போதைய கோடைக்காலத்துக்கு குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை சிறந்தவை. இவை உடலைக் குளிர்ச்சியாக வைக்கும். குளிர்காலத்தில் கம்பு போன்று உடல் வெப்பத்தை வெளிப்புற சீதோஷ்ண நிலைக்கேற்ப  சமநிலைப்படுத்தும் சிறுதானியங்களைத் தேர்வுசெய்து சாப்பிடலாம். எனவே, உங்களுக்கு உடல்நல தொந்தரவுகள் இல்லாத பட்சத்தில், வாரத்தில் 3-4 நாள்களுக்கு சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை காலை மற்றும் பகல் வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...