Skip to main content

Doctor Vikatan: தினமும் இரவு உணவுக்கு சிறுதானிய கஞ்சி குடிக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 40 வயதாகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்னையும் இல்லை. இந்நிலையில் நான் தினமும் இரவு உணவுக்கு சிறுதானியங்களில் தயாரித்த கஞ்சியை எடுத்துக்கொள்ளலாமா?

-suresh, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும்  நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.

நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா

சிறுதானியங்களைப் பொறுத்தவரை காலையில் சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெற முடியும். அது முடியாத பட்சத்தில் மதியமும் சாப்பிடலாம். வெள்ளை சாதத்துக்கு மாற்றாக சிறுதானியங்களைச் சாப்பிடப் பழகலாம். இரவில் சாப்பிட விரும்பும் பட்சத்தில், அதிகபட்சம் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. சிறுதானிய உணவுகளை எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒரு வரைமுறை உள்ளது. அந்த வகையில் முக்கால் கப் அளவுக்கு எடுத்துக் கொள்வதுதான் சரியானது. சிறுதானியங்களைச் சமைக்க நிறைய தண்ணீர் தேவைப்படும். முழுமையாக வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்.  சிறுதானிய உணவுகளைச் சாப்பிடும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

வாரத்தில் 3 முதல் 4 நாள்களுக்கு சிறுதானிய உணவுகள் சாப்பிட்டால் போதுமானது. தினமும் மூன்று வேளைகளுக்கும் சிறுதானிய உணவுகள் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசிமில்லை. ஒருநாள்விட்டு ஒருநாள் சாப்பிடலாம். இடைப்பட்ட நாள்களில் அரிசி, கோதுமை உணவுகள் சாப்பிடலாம்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையின்றி சிறுதானிய உணவுகளைச் சாப்பிட வேண்டாம். சிலருக்கு தைராய்டு பாதிப்பை இந்த உணவுகள் தீவிரப்படுத்தக்கூடும் என்பதே காரணம். 

ராகி கஞ்சி

சிலவகை சிறுதானியங்கள் 'காய்ட்ரோஜென்' (goitrogens) என்ற ஹார்மோனை விடுவிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதன் விளைவாக  உடலில் உப்புச்சத்து தேங்கிவிடும். உடலில் சோடியம் அளவு அதிகரிப்பது நல்லதல்ல. எனவே, ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சீசனுக்கேற்ப சிறுதானியங்களைத் தேர்வு செய்து சாப்பிடுவதும் அவசியம்.

உதாரணத்துக்கு, இப்போதைய கோடைக்காலத்துக்கு குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை சிறந்தவை. இவை உடலைக் குளிர்ச்சியாக வைக்கும். குளிர்காலத்தில் கம்பு போன்று உடல் வெப்பத்தை வெளிப்புற சீதோஷ்ண நிலைக்கேற்ப  சமநிலைப்படுத்தும் சிறுதானியங்களைத் தேர்வுசெய்து சாப்பிடலாம். எனவே, உங்களுக்கு உடல்நல தொந்தரவுகள் இல்லாத பட்சத்தில், வாரத்தில் 3-4 நாள்களுக்கு சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை காலை மற்றும் பகல் வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...