Skip to main content

Doctor Vikatan: சீரற்ற பல்வரிசை... வெளியே தெரியாமல் க்ளிப் போடுவது சாத்தியமா?

Doctor Vikatan: பற்கள் துருத்திக் கொண்டிருந்தால் அவற்றைச் சரியாக்க க்ளிப் போடும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறதா.... க்ளிப் போட்டது தெரியாதபடி  லேட்டஸ்ட் சிகிச்சைகள் ஏதும் உள்ளனவா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் 

பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னை

துருத்திக்கொண்டிருக்கும் பற்களை சரிசெய்வது பல் மருத்துவப் பிரிவில் ஆர்த்தோடாண்டிக்ஸ் (Orthodontics) என்ற பிரிவின் கீழ் வரும். இது குறித்த விழிப்புணர்வு இன்று இளைஞர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, பெண்களைவிடவும், ஆண்கள் இந்தச் சிகிச்சைக்கு முன்வருவது அதிகம் என்பது தெரிய வந்திருக்கிறது. பெரியவர்கள் செய்து கொள்ளும் 'அடல்ட் ஆர்த்தோடாண்டிக்ஸ்' சிகிச்சைகள் சமீபகாலத்தில் ரொம்பவே பிரபலமாகி வருகின்றன. 50 ப்ளஸ் வயதில் உள்ளோர்கூட, பற்களின் இடையில் இடைவெளி இருப்பதாகவும், பற்கள் முன்னே துருத்திக் கொண்டிருப்பதாகவும் அதைச் சரிசெய்யக் கோரி மருத்துவர்களை நாடி வருவது அதிகரித்திருக்கிறது. 

ஆரத்தோடாண்டிக்ஸ் சிகிச்சை பொதுவாக பல லெவல்களில் செய்யப்படும். பற்களை நேராக்குவது அல்லது சரியான வரிசைக்குக் கொண்டு வருவது. அடுத்து புன்னகையை சரிசெய்வதோடு, கடிக்கும்போது பற்கள் சரியாகச் சேரும்படியான சிகிச்சை,  மூன்றாவதாக, தாடை அளவில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்வது, கடைசியாக, ஹேபிட் பிரேக்கிங் தெரபி....  அதாவது சில குழந்தைகள் விரல் சப்புவார்கள்.  ஒரு வயதுக்குள் நிறுத்த வேண்டிய அந்தப் பழக்கம் சில குழந்தைகளுக்கு ஏழெட்டு வயதாகியும் தொடரும். அதனால் தாடையின் அமைப்பே மாறிப்போகும். விரல் சப்பும் பழக்கத்தை நிறுத்தவும் ஆர்த்தோடாண்டிக்ஸில் சிகிச்சைகள் உள்ளன.

அதேபோல பேசும்போது நாக்கை மேல் பல்லுடன் இடித்துப்பேசுவது, உதடுகளைக் கடித்துக்கொண்டே இருப்பது, இரவு நேரங்களில் பற்களை நறநறவென கடிப்பது போன்ற பல பிரச்னைகள் பலருக்கும் உண்டு. இவை பற்களை மட்டுமன்றி, தாடை, முகத்தசைகள் என பலதையும் பாதிக்கும்.  இதுபோன்ற பழக்கங்களை நிறுத்தச் செய்ய பிரத்யேக கருவிகள் பொருத்தி சரிசெய்யும் நவீன சிகிச்சைகள், இன்று பல் மருத்துவத்தில் உள்ளன. 

கழற்றி மாட்டும் க்ளிப்

பற்களுக்கான சிகிச்சைகளில் லேட்டஸ்ட்டாக நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. பற்களுக்குப் போடும் க்ளிப் தொடங்கி, அதை ஒட்டவைக்கும் பாண்டிங் ஏஜென்ட் (bonding agent ) வரை நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. 3டி இமேஜிங் டெக்னிக்குகள் வந்துள்ளன. அதைவைத்து தாடை எலும்புகளில் பிரச்னை உள்ளதா என்றுகூட தெரிந்துகொள்ள இன்று மருத்துவ வசதிகள் உள்ளன. வெறும் எக்ஸ்ரே வை மட்டும் நம்பியிருக்க வேண்டாம். அதேபோல டிஜிட்டல் இம்ப்ரெஷன் முறையில்  டூத் பிரஷ் போன்ற ஒன்றில் கேமராவை பொருத்தி, சம்பந்தப்பட்ட நபரின் வாயில் வைத்து உடனடியாக ஸ்கேன் செய்ய முடியும்.  இதில் பேஷன்ட்டுக்கு எந்த அசௌகர்யமும் இருக்காது.

பற்களுக்குப் பொருத்தும் க்ளிப்பில் மெட்டல், செராமிக், லிங்குவல் பிரேசஸ் (Lingual braces ) எனப்படும் பற்களுக்குப் பின்புறம் பொருத்துவது என பல வகை உண்டு.  க்ளிப் போட்டது வெளியே தெரியவேகூடாது என நினைப்பவர்களுக்கு பற்களுக்குப் பின்னால் பொருத்தும் இன்விசிபிள் பிரேசஸ் பொருத்தமாக இருக்கும். ஆனால், இந்த வகையில் சில குறைகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நாக்கில் குத்துவது, சரியாகச் சுத்தம் செய்ய முடியாதது போன்ற சில பிரச்னைகள்  இதில் இருக்கும்.  லேட்டஸ்ட்டாக க்ளியர் அலைனர்ஸ் (clear aligners) என்பவை ரொம்பவே பிரபலம். டிரான்ஸ்பரன்ட்டாக, பற்களின் வடிவத்திலேயே பொருத்திக்கொள்ளக்கூடியது இது. இதையும் தாண்டி, 'செல்ஃப் லைகேட்டிங் பிரேசஸ்' ( Self-Ligating Braces )  என ஒன்றும் வந்துள்ளது.

பற்களில் க்ளிப்  பொருத்திய பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் பல் மருத்துவர் எலாஸ்டிக் பேண்டு போன்ற ஒன்றை மாட்டிவிடுவார். அதுவே செல்ஃப்  லைகேட்டிங்கில், ஸ்லைடிங் மெக்கானிசத்தில் அதிலுள்ள ஒயரானது க்ளிப்புடன் தானாகவே போய் இணைந்துகொள்ளும். இதைப் பொருத்திக்கொள்ளும் நிலையில், மாதந்தோறும் மருத்துவரைத் தேடிப்போக வேண்டிய அவசியமிருக்காது.

பற்கள்

சிகிச்சையைத் தொடங்கும் முன்பே ஒரு நபருக்கு எந்தப் பல்லை எந்தக் கோணத்தில், எத்தனை மில்லிமீட்டர் நகர்த்தினால் அவர்களது சிரிப்பும் தோற்றமும் எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சாஃப்ட்வேர்கள் வந்துள்ளன. அக்ஸ்லரேட்டடு ஆர்த்தோடாண்டிக்ஸ் (Accelerated Orthodontics)  என்ற நவீன சிகிச்சையும் இன்று பிரபலம். அதாவது ஒரு வருடத்துக்கெல்லாம் என்னால் க்ளிப் போட முடியாது, ஐந்தாறு மாதங்கள்தான் முடியும் என்பவர்களுக்கு பற்களை சீக்கிரமே நகரவைக்க, மைக்ரோ ஆஸ்டியோ பெர்ஃபரேஷன் ( Micro-osteoperforations ) அல்லது ஹைஃப்ரீக்வன்சி வைப்ரேஷன் (High frequency vibration)  மாதிரியான நவீன சிகிச்சைகள் உள்ளன. எனவே, உங்களுடைய பிரச்னை என்ன, அதற்கான சரியான சிகிச்சை என்ன என்பதை பல் மருத்துவரை நேரில் அணுகித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் பல் அமைப்பு, அதை சரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்த்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...