Skip to main content

Doctor Vikatan: அடிக்கடி தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் Vaginal Odor... நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 29. சமீபத்தில்தான் திருமணமானது. எனக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும், பீரியட்ஸ் நாள்களிலும் வெஜைனா பகுதியில் ஒருவித மோசமான வாடை வருகிறது. இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இப்படி வாடை வீச என்ன காரணம்... இதிலிருந்து மீள சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

நித்யா ராமச்சந்திரன்

நம்முடைய வாய்ப்பகுதியில் உமிழ்நீர் சுரக்கும். அதனால் வாய்ப்பகுதி எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதைப் போலவே, பெண்களுக்கு வெஜைனா பகுதியும் ஈரத்தன்மையுடன் இருக்கும். அந்தப் பகுதியில் உள்ள சுரப்பிகள் மற்றும் நிணநீர் கணுக்கள் காரணமாக, அங்கே அத்தகைய ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்.

இப்படிச் சுரக்கும் எல்லா கசிவுகளுமே அசாதாரணமானவையல்ல. உடலின் கீழ்ப்புறத்தில் இருப்பதாலும், வெளிச்சம் படாமல் இருப்பதாலும் அங்கே பாக்டீரியாக்களும் இருக்கும். வெஜைனாவுக்கென்று இப்படித்தான் பிரத்யேக வாடை  இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. பெரும்பாலான நேரங்களில் வெஜைனாவின் வாடையை நாம் உணர்வதில்லை. காலையில் எழுந்து பல் துலக்காதபோதுதான் வாய் துர்நாற்றம் என்பதை நாம் உணர்வோம். அதேபோல, வெஜைனா பகுதியில் ஏதேனும் தொற்றோ, அசாதாரணமான கசிவோ ஏற்படும்போதுதான் அந்த வாடையை உங்களால் உணர முடியும்.

அப்படி வித்தியாசமான வாடையை உணரும்போது, அதை நீக்க சென்ட், வெஜைனல் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு இதுபோன்ற தயாரிப்புகளை உபயோகிக்கச் சொல்லியிருந்தால் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். வெஜைனா பகுதியில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கும். இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்துவதால், நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, வெஜைனா பகுதியில் ஈஸ்ட் அல்லது பூஞ்சைத் தொற்று எளிதில் பரவ ஏதுவாகும்.

Vaginal Infection

மீன் போன்ற வாடை, அழுகிய இறைச்சி வாடை போன்று வந்தால் அது 'பாக்டீரியல் வெஜைனோசிஸ்' (Bacterial vaginosis) என்ற  இன்ஃபெக்ஷனின் அறிகுறிதான்.  இந்தத் தொற்றுடன் ஒருவித வெள்ளைநிற கசிவும் இருக்கும். அடுத்தநிலையில் அது மஞ்சள் அல்லது பச்சை நிறக் கசிவாகவோ, நுரையுடனோ மாறும். இது அசாதாரணமானது. இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். அடுத்து டாம்பூன் உபயோகிக்கும் பெண்கள், அதை அகற்ற மறந்துவிட்ட நிலையிலும் வெஜைனாவிலிருந்து மோசமான வாடை வரலாம். சாதாரண நாப்கினையை பல மணி நேரம் மாற்றாத நிலையில்  வாடையை எழுப்பும்.

எனவே, அந்தரங்க உறுப்பு சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். பீரியட்ஸ் நாள்களில் ஒருவித மெட்டல் வாடை வீசக் காரணம், ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து. அதேபோல தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வாடை வரலாம். இவை குறித்து  பயப்பட வேண்டியதில்லை. வெஜைனாவை வெதுவெதுப்பான நீரால் கழுவினாலே போதுமானது. வாசனை திரவங்கள், வாசனையான சோப் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...