Skip to main content

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா?

Doctor Vikatan: வருடத்தில் பெரும்பாலான நாள்களில் சன் ஸ்கிரீன், ஃபேஸ்வாஷ், மாய்ஸ்ச்சரைசர் எல்லாம் உபயோகிக்கிறோம். சம்மர் சீசனில் அவற்றையே தொடர்ந்து உபயோகிக்கலாமா.... வெயிலுக்கேற்றபடி வேறு மாற்ற வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

கோடையின் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, வெறும் சன் ஸ்கிரீனை மட்டும் மாற்றினால் போதாது. கிளென்சரில் இருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும். பருக்கள் வரும் சருமம் என்றால் சாலிசிலிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்கள், லாக்டிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்தலாம்.

அடுத்து மாய்ச்ச்சரைஸர்... இது ஜெல் வடிவிலோ, நீர் வடிவிலோ, லோஷன் வடிவிலோ இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். முன்பெல்லாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தும்போது உடனடியாக ஒருவித சூடான உணர்வு ஏற்படும். அதைத் தடவியதும் வியர்த்துக் கொட்டும். அப்படியில்லாமல் இப்போது கூலிங் தன்மையைக் கொடுக்கும் சன் ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்கள் சருமத்துக்குப் பொருத்தமானதை மருத்துவரிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.

அதற்கு மேல் பவுடர் போடலாம்.  டால்கம் பவுடர் என்பது கூடுதல் சன் ஸ்கிரீன் போல செயல்படும். எண்ணெய் வழியாமலும் தடுக்கும்.  

இரவில் முகத்தை நன்கு கழுவிவிட்டு, வாரத்தில் ஒரு நாள் எக்ஸ்ஃபோலியேட் (exfoliate) செய்யலாம். நிறைய பேருக்கு வெயில் காலத்தில் நெற்றி, மூக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பொரிப்பொரியாக வரும். அளவுக்கதிக சீபம் உற்பத்திதான் இதற்கு காரணம்.  முதுகிலும் மார்புப்பகுதியிலும் பொடுகு காணப்படும். எனவே, ஒருநாள்விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்க வேண்டும்.  ஜிம் போகிறவர்கள் தினமுமே தலைக்குக் குளிக்க வேண்டும்.

Sunscreen

முகத்துக்கு மட்டும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பது போதாது. உடல், கை, கால்கள் என வெயில்படும் எல்லா இடங்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியம். அதற்காக முகத்துக்கு உபயோகிக்கும் அதே சன் ஸ்கிரீனை உடலுக்கும் பயன்படுத்துவது கட்டுப்படியாகாது.  உடலுக்கான சன் ஸ்கிரீன் அதிலும் வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக பார்த்து வாங்குங்கள். குடை, ஸ்கார்ஃப் உபயோகிக்கத் தயங்காதீர்கள். தரமான, காட்டன் உடைகளை மட்டும் அணியுங்கள். சிந்தெடிக் உடைகளை அணிவதால், அக்குள் பகுதிகளில் கட்டிகள்கூட வரலாம். 

புறப்பூச்சுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கும் கொடுங்கள். மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள். அவற்றிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தைப் பாதுகாக்கும்.   கோடையில் மஞ்சள் தடவுவது, மஞ்சள் கலந்த அழகு சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மஞ்சள் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதில் சந்தேகமில்லை.

குடிக்கும் பாலில் தொடங்கி, சமைக்கும் உணவுகள் வரை மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், வெளியே சருமத்தில் பூசுவதில் கவனம் தேவை. மஞ்சள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதைத் தடவுவதால், வேண்டாம் என நினைத்த சூரியஒளியை நாமே தேடிப் போவதுபோலாகி விடும்.

எனவே, மற்ற நாள்களில் உபயோகிக்கும் அழகு சாதனங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, சம்மர் சீசனுக்கேற்ற பிரத்யேக ஃபேஸ்வாஷ், சன்ஸ்கிரீன் என எல்லாவற்றையும் மாற்றி உபயோகிப்பது சருமத்தைக் காக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...