Skip to main content

மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால்; கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்!

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில், கணவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடி, பின்னர் அவரின் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்ற இரண்டாவது நாளிலேயே செக்ஸ் டால் உட்பட பலவற்றை வாங்கிய உண்மை வெளியில் தெரியவந்திருக்கிறது.

முன்னதாக, கடந்த 2019-ல் கணவன் கோல்பி ட்ரிக்கிள் (Colby Trickle), ஹேஸ் (Hays) நகரிலுள்ள தன்னுடைய வீட்டிலிருந்து 911 என்ற நம்பருக்கு அழைத்து தன்னுடைய மனைவி கிறிஸ்டன் ட்ரிக்கிள் (Kristen Trickle) தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த போலீஸ் அதிகாரியொருவர் அவருடன் பேசிய பிறகு இது கொலையாக இருக்கும் என சந்தேகித்தார்.கோல்பி ட்ரிக்கிள்

இருப்பினும், கிறிஸ்டன் மரணமடைந்து மூன்று நாள்களுக்குப் பிறகு இது கொலையல்ல தற்கொலைதான் என உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் லைல் நூர்தோக் (Lyle Noordhoek) தெரிவித்தார். ஆனாலும், விசாரணை அதிகாரிகள் இந்த சம்பவத்தை விசாரித்துவந்தனர். பின்னர், கிறிஸ்டன் இறந்து 21 மாதங்களுக்குப் பிறகு 2021 ஜுலை மாதம் முதல்நிலை கொலை மற்றும் சட்ட அமலாக்கத்தில் தலையிட்டதாக அவர் கணவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.கிறிஸ்டன் ட்ரிக்கிள் - கோல்பி ட்ரிக்கிள்

அதிகாரிகளின் விசாரணையில், கிறிஸ்டனின் பெயரிலிருந்த 1,20,000 டாலர் மதிப்பிலான அதாவது சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை (life insurance policies) கோல்பி பணமாக்கியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, இன்சூரன்ஸ் பணம் பெற்ற இரண்டு நாள்களுக்குப் பிறகு ஆள் உயர செக்ஸ் டால் (sex doll) ஒன்றை அவர் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து, அவரின் அத்தை டெலின் ரைஸ் (Delynn Rice), ``கிறிஸ்டனின் இன்சூரன்ஸ் பணத்தை அவர் செக்ஸ் டால் வாங்குவதற்குப் பயன்படுத்தியதைக் கண்டு நான் திகைத்துப்போனேன். இது கிறிஸ்டனுக்கு மாற்றாக அவர் வாங்கியது போல் தெரிகிறது" என்றார். கோல்பி இந்த செக்ஸ் டால் மட்டுமல்லாது கடனை அடைப்பது, இசைக்கருவிகளை வாங்குவது என ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழித்திருக்கிறார்.நீதிமன்றம் உத்தரவு

இன்சூரன்ஸ் பணம் பெற்ற எட்டு மாதங்களிலேயே மொத்தத்தையும் அவர் செலவழித்துவிட்டதாக எல்லிஸ் கவுண்டி அட்டர்னி ஆரோன் கன்னிகாம் (Aaron Cunnigham) வெளிப்படுத்தினார். 2023 செப்டம்பரில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், கோல்பி செக்ஸ் டால் வாங்கியதை நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் தெரியப்படுத்தினர்.ஆயுள் தண்டனை - சிறை

அதேசமயம், கோல்பிக்காக ஆஜரான அவரின் தாயார் டினா க்ரூட்ஸர் (Tina Kreutzer), கிறிஸ்டனின் மரணத்துக்குப் பிறகு தன் மகன் தூக்கமின்மைக்கு ஆளானதாகவும், ஒரு ஆறுதலுக்காக செக்ஸ் டால் வாங்கியதாகவும் தெரிவித்தார். இறுதியாக, கிறிஸ்டன் மரணமடைந்து நான்காவது ஆண்டான 2023-ல் நவம்பர் மாதம், கோல்பியை குற்றவாளி என உறுதிப்படுத்திய நடுவர் நீதிமன்றம், 50 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வர முடியாத அளவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.`உடனே கொல்வது எப்படி?' - முன்னாள் காதலியை கத்தியால் குத்துவதற்கு முன் ஆன்லைனில் தேடிய இளைஞர்


http://dlvr.it/T68x59

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...