Skip to main content

பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி; மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்..!

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளுக்குள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் மசோதா இயற்றப்பட்டுள்ளது. டென்னிசி, ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மாநிலங்களில் ஒன்று. இங்கு குடியரசுக் கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சட்டம் இயற்றும் மன்றத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நிபந்தனைகளைப் பின்பற்றி துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. Schoolமுதலையிடம் தப்பித்து... சிறுத்தையிடம் போராடி உயிர்பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

அந்த மசோதாவில், `துப்பாக்கியை எடுத்துச் செல்பவர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த நபர் பள்ளிகளில் இயங்கும் காவல் அமைப்புகளில் ஆண்டுக்கு ஒருமுறை 40 மணி நேரம் துப்பாக்கியை பாதுகாப்பாகப் பயன்படுத்தும் பயிற்சி பெறுவது கட்டாயம். பயிற்சிக்கான செலவுகளை அந்த நபரே ஏற்க வேண்டும்.

அரசு அனுமதியளித்துள்ள சுகாதார வல்லுநர்களிடம் உளவியல் பரிசோதனையை மேற்கொண்டு, பிரச்னைகள் எதுவும் இல்லை எனச் சான்றிதழ் பெற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்போது குடியரசுக் கட்சி கவர்னர் பில் லீயின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.gunஉடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை, உயிரிழந்த புதுச்சேரி இளைஞர்; பெற்றோர் சொல்வது என்ன?

அமெரிக்காவில் பல்வேறு பள்ளிகள், பொது இடங்களில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 18 வயது நிரம்பாத 436 குழந்தைகள் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகி உள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பள்ளிகளுக்குத் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் மசோதா இயற்றப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. `குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிவைப் போதிப்பதற்குப் பதிலாக ஆயுதத்தை ஏந்துவதா? ஆயுதம் ஏந்திய ஆசிரியர்களின் வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்? schoolMessi: மெஸ்ஸி பெயரைச் சொல்லி உயிர்தப்பிய மூதாட்டி... துப்பாக்கி கொடுத்து செல்ஃபி எடுத்த ஹமாஸ் குழு!

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் பயத்துடன் வீட்டில் இருப்பதா?’ என அந்நாட்டு மக்கள் கண்டனங்களைத் தெரிவித்து சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

`கவர்னர் இந்தச் சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், ரத்தக் கறையை ஏற்படுத்தும் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிடும்’ என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள்.


http://dlvr.it/T62pNv

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...