Skip to main content

நாள் ஒன்றுக்கு ஒரு பேரீச்சம்பழம்தான் உணவு; பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த சகோதரர்கள்! - பின்னணி என்ன?

கோவாவில் பூட்டிய வீட்டில் இரண்டு பட்டதாரி சகோதரர்கள் இறந்துகிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்திருக்கும் தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில், உயிரிழந்த சகோதரர்களின் பெயர்கள் முகமது ஜுபர் கான் (29) மற்றும் ஆஃபான் கான் (27). இவர்களின் தாய் ருக்ஸானா கான் மற்றும் தந்தை நசீர் கான். தந்தை கர்நாடகாவில் துணிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இதில், மூத்த சகோதரர் இன்ஜினியர். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இளைய சகோதரர் பி.காம் பட்டதாரி. இருவரும் சமீபத்தில் தங்களின் பெற்றோருடன் மார்கோ நகரத்துக்கு குடியேறினார்.

உயிரிழப்பு

மூத்த சகோதரரின் மனைவி தன் குழந்தைகளுடன், இவர்களுடன் மார்கோவுக்கு குடியேறவில்லை. மேலும், சகோதரர்கள் இருவரும் மார்கோவுக்கு குடியேறிய பிறகு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தனர். இதற்கிடையில், தன்னுடைய மனைவி மற்றும் மகன்களின் வித்தியாசமான உணவுமுறை காரணமாக நசீர் கான், அதே மார்கோ நகரத்தில் வேறொரு பகுதிக்கு தனியாகக் குடிபெயர்ந்தார். அதாவது, தாய் மற்றும் மகன்கள் என மூவரும் ஒரு நாளைக்கு ஒரேயொரு பேரீச்சம்பழத்தை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் தனியாகச் சென்ற நசீர் கான் தன் மனைவி, மகன்களை அவ்வப்போது காண வந்துகொண்டிருந்தார். இருப்பினும், வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த புதனன்று வீட்டினுள் சகோதரர்கள் இறந்து கிடப்பதாகத் தகவலறிந்த போலீஸார், உடனடியாக வீட்டுக்கு வந்து கதவை உடைத்து இறந்தவர்களின் உடலை மீட்டனர். அதோடு, மயக்க நிலையில் கிடந்த தாயை மீட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாய், மன நலத்தைப் பரிசோதிக்க கோவா மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

காவல்துறை

பின்னர், சகோதரர்களின் இறப்புக்கான காரணம் குறித்து பேசிய தெற்கு கோவா காவல்துறை கண்காணிப்பாளர் சுனிதா சாவந்த், `பிரேத பரிசோதனையில் ஊட்டச்சத்துக் குறைபாடுதான் கரணம் என்று தெரியவந்திருக்கிறது' என்று கூறினார். இருப்பினும், தாயார் சிகிச்சையில் இருப்பதால் அவரின் வாக்குமூலத்துக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...