Skip to main content

Quit Smoking: பெண்கள் புகைப் பழக்கத்துக்கு அடிமையானால் மீள்வது கடினம்... ஏன் தெரியுமா?

`புண்பட்ட மனதைப் புகவிட்டு ஆற்று’ எனக் கேள்விப்பட்டிருப்போம். இங்கு புக என்பதைப் பலரும் புகையிலை எனத் தவறாக எடுத்துக் கொள்கின்றனர். உண்மையில் மனம் புண்பட்டிருக்கையில், நமக்குப் பிடித்த வேறொரு செயலில் மனதினை புகவிட்டு ஆற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம். 

புகையிலை புற்றுநோயை ஏற்படுத்தும், உயிரைக் கொல்லும் என விளம்பரப்படுத்தும் சிகரெட் அட்டை படங்கள் பிரயோஜனம் இல்லாமலே போய்விடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்களும் புகை பிடிக்கின்றனர். 

quit smoking

ஆனால், புகைப்பழக்கத்தைக் கைவிடுகையில் ஆண்களை விட பெண்கள் சிரமப்படுவதாகவும், கடினமாக உணர்வதாகவும் கென்டக்கி பல்கலைக்கழகம் (University of Kentucky) நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

சாலி பாஸ் என்பவரின் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் பெண்களின் பாலின ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், நிகோடினுக்கு அடிமையாவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு கூறுகிறது. 

அதாவது, ஆண்களை விட பெண்கள் புகையிலையிலுள்ள நிகோட்டினுக்கு  (Nicotine) வேகமாக அடிமையாகிவிடுகின்றனர். மூளையிலுள்ள ஆல்ஃபாக்டோமெடின் என்ற புரதத்தின் உற்பத்தியை நிகோடின் குறைக்கிறது. ஈஸ்ட்ரோஜென் ஆல்ஃபாக்டோமெடின் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஆல்ஃபாக்டோமெடின், ஈஸ்ட்ரோஜென், நிகோடின் இந்த மூன்று கூறுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பெண்கள் நிகோட்டினுக்கு அடிமையாகின்றனர். அதனால் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது அவர்களுக்குக் கடினமாகவுள்ளது. 

smoke

இது குறித்து சாலி பாஸ் கூறுகையில், ``ஆல்ஃபாக்டோமெடின்கள் மூலம் ஈஸ்ட்ரோஜென், நிகோடின் நுகர்வை இயக்குகிறது என்பதை நாம் உறுதிப்படுத்த முடிந்தால், அந்த விளைவைத் தடுக்கக்கூடிய மருந்துகளை நாம் வடிவமைக்க முடியும். இந்த மருந்துகள் பெண்கள் நிகோட்டின் பழக்கத்திலிருந்து வெளிவருவதை எளிதாக்கும்.  ஆண்களை விட பெண்களுக்கு நிகோடினுக்கு அடிமையாவதில் அதிக நாட்டம் இருப்பதாகவும், அதை விட்டுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிகிறது. எங்களது வேலை நிகோட்டின் பயன்பாடு பெண்களை எவ்வாறு பாதிக்கிறது, அடிமையாக்குகிறது என்பதை அறிந்து, நிகோட்டின் அடிக்ஷனுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்றார்.  


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...