Skip to main content

Quit Smoking: பெண்கள் புகைப் பழக்கத்துக்கு அடிமையானால் மீள்வது கடினம்... ஏன் தெரியுமா?

`புண்பட்ட மனதைப் புகவிட்டு ஆற்று’ எனக் கேள்விப்பட்டிருப்போம். இங்கு புக என்பதைப் பலரும் புகையிலை எனத் தவறாக எடுத்துக் கொள்கின்றனர். உண்மையில் மனம் புண்பட்டிருக்கையில், நமக்குப் பிடித்த வேறொரு செயலில் மனதினை புகவிட்டு ஆற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம். 

புகையிலை புற்றுநோயை ஏற்படுத்தும், உயிரைக் கொல்லும் என விளம்பரப்படுத்தும் சிகரெட் அட்டை படங்கள் பிரயோஜனம் இல்லாமலே போய்விடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்களும் புகை பிடிக்கின்றனர். 

quit smoking

ஆனால், புகைப்பழக்கத்தைக் கைவிடுகையில் ஆண்களை விட பெண்கள் சிரமப்படுவதாகவும், கடினமாக உணர்வதாகவும் கென்டக்கி பல்கலைக்கழகம் (University of Kentucky) நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

சாலி பாஸ் என்பவரின் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் பெண்களின் பாலின ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், நிகோடினுக்கு அடிமையாவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு கூறுகிறது. 

அதாவது, ஆண்களை விட பெண்கள் புகையிலையிலுள்ள நிகோட்டினுக்கு  (Nicotine) வேகமாக அடிமையாகிவிடுகின்றனர். மூளையிலுள்ள ஆல்ஃபாக்டோமெடின் என்ற புரதத்தின் உற்பத்தியை நிகோடின் குறைக்கிறது. ஈஸ்ட்ரோஜென் ஆல்ஃபாக்டோமெடின் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஆல்ஃபாக்டோமெடின், ஈஸ்ட்ரோஜென், நிகோடின் இந்த மூன்று கூறுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பெண்கள் நிகோட்டினுக்கு அடிமையாகின்றனர். அதனால் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது அவர்களுக்குக் கடினமாகவுள்ளது. 

smoke

இது குறித்து சாலி பாஸ் கூறுகையில், ``ஆல்ஃபாக்டோமெடின்கள் மூலம் ஈஸ்ட்ரோஜென், நிகோடின் நுகர்வை இயக்குகிறது என்பதை நாம் உறுதிப்படுத்த முடிந்தால், அந்த விளைவைத் தடுக்கக்கூடிய மருந்துகளை நாம் வடிவமைக்க முடியும். இந்த மருந்துகள் பெண்கள் நிகோட்டின் பழக்கத்திலிருந்து வெளிவருவதை எளிதாக்கும்.  ஆண்களை விட பெண்களுக்கு நிகோடினுக்கு அடிமையாவதில் அதிக நாட்டம் இருப்பதாகவும், அதை விட்டுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிகிறது. எங்களது வேலை நிகோட்டின் பயன்பாடு பெண்களை எவ்வாறு பாதிக்கிறது, அடிமையாக்குகிறது என்பதை அறிந்து, நிகோட்டின் அடிக்ஷனுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்றார்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...