Skip to main content

Doctor Vikatan: ஹெர்னியா பாதிப்புக்கு ஆபரேஷன் செய்வதுதான் தீர்வா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு ஹெர்னியா பாதித்திருப்பதாக மருத்துவர் சொல்கிறார். ஹெர்னியா என்றால் என்ன....அதற்கு ஆபரேஷன் செய்வதுதான் தீர்வா?

-Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி  

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

ஏதேனும் ஓர் உறுப்பு, ஒரு தசை அல்லது திசுவில் உள்ள திறந்த பகுதி வழியே, பலவீனம் காரணமாக வெளியே தள்ளப்பட்டு வருவதையே 'ஹெர்னியா' (Hernia) என்கிறோம். உதாரணத்துக்கு, குடல் பகுதியானது நம் வயிற்றுப்பகுதியின் சுவர்களின் பலவீனம் காரணமாக வெளியே தள்ளப்பட்டு வரலாம். அதை  'ஹெர்னியா' என்று சொல்வோம்.

ஹெர்னியா பாதிப்பானது நம் வயிற்றுக்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடையில் வரும். சில நேரங்களில் இடுப்பும் தொடையும் சேருமிடத்திலும் வரலாம்.  பெரும்பாலும் இந்த பாதிப்பானது ஆரம்பநிலையிலேயே எந்தப் பிரச்னையையும் தரப்போவதில்லை. போகப்போக சில பிரச்னைகள் வரலாம். அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். 

ஹெர்னியா பாதிப்பில் பல வகைகள் உள்ளன. நீங்கள் எந்த வகை குறித்துக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஹெர்னியா என்றாலே ஒரு வீக்கம் இருக்கும். உதாரணத்துக்கு, இன்குயினல் ஹெர்னியா (Inguinal hernia) என்ற வகையில் இடுப்பெலும்பும் தொடைப்பகுதியும் இணையும் இடத்தில் வீக்கம் வரலாம்.  இந்த வீக்கமானது படுக்கும்போது காணாமல் போய்விடும்.  எழுந்திருக்கும்போது, உடலை வளைக்கும்போது, இருமும்போது அந்த இடத்தில் வலி மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம். 

வயிறு

'ஹயட்டல் ஹெர்னியா' ( Hiatal hernia ) என்ற வகையில் மார்புக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் எனப்படும் பகுதி வழியே வயிறானது நுழைந்து, மார்புப்பகுதியை ஊடுருவும். உதரவிதான தசையானது நம் சுவாசத்திற்கு மிகவும் முக்கியமானது. வயிறு மற்றும் மார்புப்பகுதியைப் பிரிப்பதும் இந்த உதரவிதானம்தான். இந்த வகை ஹெர்னியா குழந்தைகளை பிறவியிலேயே பாதிக்கலாம். மற்றபடி 50 வயதுக்கு மேலானவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது. 

மிகவும் பரவலாக பாதிக்கும் ஹெர்னியா வகை 'அம்பிலிகல் ஹெர்னியா' ( Umbilical hernia). இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும்.  தொப்புளுக்கு அருகில் உள்ள வயிற்றுச்சுவரின் தசைகள் பலவீனமாக இருந்து, அதன் விளைவாக சிறுகுடல் வெளித்தள்ளப்படுவதைக் குறிப்பது இது. வயிற்றுச்சுவர் தசைகள் வலிமையடையும்போது இந்தப் பிரச்னை தானாகவே சரியாக வாய்ப்புகள் உண்டு.  சில நேரங்களில் பெரியவர்களையும் இது பாதிக்கலாம்.  உடல்பருமன், கர்ப்பகாலம், வயிற்றில் நீர்கோப்பது போன்றவற்றால் வயிற்றுச்சுவர் தசைகள் பலவீனமடைந்து இந்தப் பிரச்னை பாதிக்கலாம். 

இன்னொரு வகை, 'இன்சிஷனல் ஹெர்னியா' (Incisional hernia). சிசேரியன் மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அந்த இடத்தின் தழும்பு மற்றும் பலவீனம் காரணமாக வரும் பாதிப்பு இது.  தீவிரமான உடற்பயிற்சி அல்லது அளவுக்கதிகமாக எடை தூக்குவது போன்றவற்றாலும் ஹெர்னியா பாதிக்கலாம்.  சிலருக்கு எப்போதும் இருமல் இருப்பதாலும் வரலாம். ஒன்றுக்கு மேலான கர்ப்பத்தைச் சுமப்பதாலும் வரலாம்.

ஹெர்னியா அறுவை சிகிச்சை

ஹெர்னியா பாதிப்புக்கு  அறுவை சிகிச்சைதான் தீர்வு. ஆனால், அதன் அளவு, அதனால் ஏற்படும் வலி உள்ளிட்ட அசௌகர்யங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அறுவை சிகிச்சை தேவையா என முடிவு செய்யப்படும். சில நேரங்களில் இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ளலாம், பிரச்னை தீவிரமானால் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடலாம்.

அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். ஸ்கேன் மூலம் இதை உறுதிசெய்யலாம்.  கவனிக்காமல் விட்டாலும் இது சில நேரங்களில் பிரச்னையை ஏற்படுத்தலாம். அது உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்பதால் இதை அணுகுவதில் அலட்சியமும் வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...