Skip to main content

Doctor Vikatan: ஹெர்னியா பாதிப்புக்கு ஆபரேஷன் செய்வதுதான் தீர்வா?

Doctor Vikatan: என் வயது 58. எனக்கு ஹெர்னியா பாதித்திருப்பதாக மருத்துவர் சொல்கிறார். ஹெர்னியா என்றால் என்ன....அதற்கு ஆபரேஷன் செய்வதுதான் தீர்வா?

-Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி  

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

ஏதேனும் ஓர் உறுப்பு, ஒரு தசை அல்லது திசுவில் உள்ள திறந்த பகுதி வழியே, பலவீனம் காரணமாக வெளியே தள்ளப்பட்டு வருவதையே 'ஹெர்னியா' (Hernia) என்கிறோம். உதாரணத்துக்கு, குடல் பகுதியானது நம் வயிற்றுப்பகுதியின் சுவர்களின் பலவீனம் காரணமாக வெளியே தள்ளப்பட்டு வரலாம். அதை  'ஹெர்னியா' என்று சொல்வோம்.

ஹெர்னியா பாதிப்பானது நம் வயிற்றுக்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடையில் வரும். சில நேரங்களில் இடுப்பும் தொடையும் சேருமிடத்திலும் வரலாம்.  பெரும்பாலும் இந்த பாதிப்பானது ஆரம்பநிலையிலேயே எந்தப் பிரச்னையையும் தரப்போவதில்லை. போகப்போக சில பிரச்னைகள் வரலாம். அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். 

ஹெர்னியா பாதிப்பில் பல வகைகள் உள்ளன. நீங்கள் எந்த வகை குறித்துக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஹெர்னியா என்றாலே ஒரு வீக்கம் இருக்கும். உதாரணத்துக்கு, இன்குயினல் ஹெர்னியா (Inguinal hernia) என்ற வகையில் இடுப்பெலும்பும் தொடைப்பகுதியும் இணையும் இடத்தில் வீக்கம் வரலாம்.  இந்த வீக்கமானது படுக்கும்போது காணாமல் போய்விடும்.  எழுந்திருக்கும்போது, உடலை வளைக்கும்போது, இருமும்போது அந்த இடத்தில் வலி மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம். 

வயிறு

'ஹயட்டல் ஹெர்னியா' ( Hiatal hernia ) என்ற வகையில் மார்புக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் எனப்படும் பகுதி வழியே வயிறானது நுழைந்து, மார்புப்பகுதியை ஊடுருவும். உதரவிதான தசையானது நம் சுவாசத்திற்கு மிகவும் முக்கியமானது. வயிறு மற்றும் மார்புப்பகுதியைப் பிரிப்பதும் இந்த உதரவிதானம்தான். இந்த வகை ஹெர்னியா குழந்தைகளை பிறவியிலேயே பாதிக்கலாம். மற்றபடி 50 வயதுக்கு மேலானவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது. 

மிகவும் பரவலாக பாதிக்கும் ஹெர்னியா வகை 'அம்பிலிகல் ஹெர்னியா' ( Umbilical hernia). இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும்.  தொப்புளுக்கு அருகில் உள்ள வயிற்றுச்சுவரின் தசைகள் பலவீனமாக இருந்து, அதன் விளைவாக சிறுகுடல் வெளித்தள்ளப்படுவதைக் குறிப்பது இது. வயிற்றுச்சுவர் தசைகள் வலிமையடையும்போது இந்தப் பிரச்னை தானாகவே சரியாக வாய்ப்புகள் உண்டு.  சில நேரங்களில் பெரியவர்களையும் இது பாதிக்கலாம்.  உடல்பருமன், கர்ப்பகாலம், வயிற்றில் நீர்கோப்பது போன்றவற்றால் வயிற்றுச்சுவர் தசைகள் பலவீனமடைந்து இந்தப் பிரச்னை பாதிக்கலாம். 

இன்னொரு வகை, 'இன்சிஷனல் ஹெர்னியா' (Incisional hernia). சிசேரியன் மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அந்த இடத்தின் தழும்பு மற்றும் பலவீனம் காரணமாக வரும் பாதிப்பு இது.  தீவிரமான உடற்பயிற்சி அல்லது அளவுக்கதிகமாக எடை தூக்குவது போன்றவற்றாலும் ஹெர்னியா பாதிக்கலாம்.  சிலருக்கு எப்போதும் இருமல் இருப்பதாலும் வரலாம். ஒன்றுக்கு மேலான கர்ப்பத்தைச் சுமப்பதாலும் வரலாம்.

ஹெர்னியா அறுவை சிகிச்சை

ஹெர்னியா பாதிப்புக்கு  அறுவை சிகிச்சைதான் தீர்வு. ஆனால், அதன் அளவு, அதனால் ஏற்படும் வலி உள்ளிட்ட அசௌகர்யங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அறுவை சிகிச்சை தேவையா என முடிவு செய்யப்படும். சில நேரங்களில் இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ளலாம், பிரச்னை தீவிரமானால் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடலாம்.

அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். ஸ்கேன் மூலம் இதை உறுதிசெய்யலாம்.  கவனிக்காமல் விட்டாலும் இது சில நேரங்களில் பிரச்னையை ஏற்படுத்தலாம். அது உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்பதால் இதை அணுகுவதில் அலட்சியமும் வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...