Skip to main content

Doctor Vikatan: எடைக்குறைப்புக்கு உதவுமா சைனா கிராஸ் எனப்படும் கடல்பாசி?

Doctor Vikatan: இஸ்லாமியர்களின் உணவுகளில் பிரதானமாக இடம்பெறும் கடல்பாசியை எல்லோரும் சாப்பிடலாமா....  அது உடல் எடையைக் குறைக்குமா... நோன்பிருக்கும்போது அதைச் சாப்பிடுவதால் என்ன பலன்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

சைனா கிராஸ் எனப்படும் சீனப்புல் வகையைச் சேர்ந்ததுதான் கடல்பாசி. இதை எல்லோருமே சாப்பிடலாம்.  வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.  ரமலான் நோன்பிருப்பவர்களின் உணவுப் பட்டியலில் கடல்பாசி கட்டாயம் இடம்பெறும். கடல்பாசி இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு அவர்கள் தினமுமே இதைச் சேர்த்துக் கொள்வார்கள்.

நாள் முழுவதும் நோன்பிருந்துவிட்டு, உணவு சாப்பிடும்போது, வயிறு புண்ணாகாமல் தடுக்க, கடல்பாசி சேர்த்துக்கொள்வார்கள்.  இதில் கலோரி பெரியதாக இல்லை என்பதால் இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என எந்த வரையறையும் இல்லை. 

கடல்பாசி என்பது நம் குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். சிறுகுடலைத் தூண்டிவிட்டு, செரிமான இயக்கத்தை எளிதாக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராமலிருக்கவும் கடல்பாசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்துகள், மலமிளக்கிகள் எடுத்துக்கொள்வோர், அவற்றுக்கு பதில் கடல்பாசி எடுத்துக் கொள்ளலாம். எந்தவிதப் பக்கவிளைவும் இல்லாமல், மலத்தை இளக்கி வெளியேறச் செய்வதில் கடல்பாசி பெரிய அளவில் உதவும்.

கடல்பாசி

சீன மக்கள் பசி உணர்வைக் கட்டுப்படுத்த கடல்பாசி பயன்படுத்துவார்கள். கடல்பாசியில் கலோரி மிகக் குறைவு என்பது இதன் இன்னொரு ப்ளஸ். இளநீர் சேர்த்து புட்டிங் போன்று செய்து சாப்பிடலாம். ஆரோக்கியத்துக்கும் நல்லது, கலோரியும் கூடாது.

கடல்பாசி என்பது எடைக்குறைப்புக்கு உதவுமா என்பது குறித்து இன்னும் முழுமையான ஆய்வு முடிவுகள் வரவில்லை.  கடல்பாசியை நாம் எப்படிச் சமைத்துச் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது அது. பால், சர்க்கரை  போன்றவை சேர்த்துச் செய்து சாப்பிடும்போது எடையை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...