Skip to main content

காஸா போர்நிறுத்தம்: ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்காவை சாடும் இஸ்ரேல் பிரதமர்!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உடனடியாகப் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது. பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை, 32,226-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதோடு, 74,518-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.பைடன் - நெதன்யாகு

இந்தப் போரில் இஸ்ரேலை உலக நாடுகள் பல எதிர்த்தபோதும், தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்த அமெரிக்கா ஒரு கட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக எதுவும் கூறாமல், வெறுமனே போர்நிறுத்தம் வேண்டும் எனக் கூவியது. தற்போது அதன் நீட்சியாகவே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட காஸா போர்நிறுத்த தீர்மானத்தின்மீது வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் விலகியதால், காஸா போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது.

நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில், அமெரிக்காவைத் தவிர ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இதற்கு முன்னரும் இது போன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் `இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நுட்பமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போர்நிறுத்த நடவடிக்கை தவறானது' என்று கூறி, அந்தத் தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தோல்வியடைய வைத்தது. இப்படியிருக்க, அமெரிக்காவின் இந்த விலகல் இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இதனால் விரக்தியடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ``ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சில நாள்களுக்கு முன்பு, பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையிலான போர்நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்தது. ஆனால், அப்போது ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோல்வியடைய வைத்தது.

இப்போது, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து எதுவும் இடம்பெறாத தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் அல்ஜீரியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் சேர்ந்து ஆதரித்திருக்கின்றன. ஆனால், இந்தப் புதிய தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வீழ்த்தவில்லை. இது, போரின் தொடக்கத்திலிருந்த தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து அமெரிக்கா தெளிவாக விலகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தத்தை ஏற்கும்படி இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டு கட்டாயப்படுத்துவது, ஹமாஸுக்கு நம்பிக்கையளிக்கும். இதனால், பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்படும்'' என்று தெரிவித்திருக்கிறார். அதோடு, தெற்கு காஸா நகரமான ரஃபாவில் திட்டமிட்ட இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய தூதுக்குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பும் திட்டங்களை நிறுத்திவைப்பதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இன்னொருபக்கம், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தத் தீர்மானத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.கொல்லப்பட்ட 30,000 பாலஸ்தீனர்கள்... உடலுறுப்பு திருட்டில் இஸ்ரேல்!


http://dlvr.it/T4dMp4

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...