Skip to main content

காஸா போர்நிறுத்தம்: ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்காவை சாடும் இஸ்ரேல் பிரதமர்!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உடனடியாகப் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது. பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை, 32,226-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதோடு, 74,518-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.பைடன் - நெதன்யாகு

இந்தப் போரில் இஸ்ரேலை உலக நாடுகள் பல எதிர்த்தபோதும், தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்த அமெரிக்கா ஒரு கட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக எதுவும் கூறாமல், வெறுமனே போர்நிறுத்தம் வேண்டும் எனக் கூவியது. தற்போது அதன் நீட்சியாகவே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட காஸா போர்நிறுத்த தீர்மானத்தின்மீது வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் விலகியதால், காஸா போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது.

நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில், அமெரிக்காவைத் தவிர ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இதற்கு முன்னரும் இது போன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் `இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நுட்பமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போர்நிறுத்த நடவடிக்கை தவறானது' என்று கூறி, அந்தத் தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தோல்வியடைய வைத்தது. இப்படியிருக்க, அமெரிக்காவின் இந்த விலகல் இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இதனால் விரக்தியடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ``ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சில நாள்களுக்கு முன்பு, பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையிலான போர்நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்தது. ஆனால், அப்போது ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோல்வியடைய வைத்தது.

இப்போது, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து எதுவும் இடம்பெறாத தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் அல்ஜீரியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் சேர்ந்து ஆதரித்திருக்கின்றன. ஆனால், இந்தப் புதிய தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வீழ்த்தவில்லை. இது, போரின் தொடக்கத்திலிருந்த தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து அமெரிக்கா தெளிவாக விலகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தத்தை ஏற்கும்படி இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டு கட்டாயப்படுத்துவது, ஹமாஸுக்கு நம்பிக்கையளிக்கும். இதனால், பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்படும்'' என்று தெரிவித்திருக்கிறார். அதோடு, தெற்கு காஸா நகரமான ரஃபாவில் திட்டமிட்ட இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய தூதுக்குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பும் திட்டங்களை நிறுத்திவைப்பதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இன்னொருபக்கம், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தத் தீர்மானத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.கொல்லப்பட்ட 30,000 பாலஸ்தீனர்கள்... உடலுறுப்பு திருட்டில் இஸ்ரேல்!


http://dlvr.it/T4dMp4

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...