Skip to main content

காஸா போர்நிறுத்தம்: ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்காவை சாடும் இஸ்ரேல் பிரதமர்!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உடனடியாகப் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது. பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை, 32,226-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதோடு, 74,518-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.பைடன் - நெதன்யாகு

இந்தப் போரில் இஸ்ரேலை உலக நாடுகள் பல எதிர்த்தபோதும், தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்த அமெரிக்கா ஒரு கட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக எதுவும் கூறாமல், வெறுமனே போர்நிறுத்தம் வேண்டும் எனக் கூவியது. தற்போது அதன் நீட்சியாகவே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட காஸா போர்நிறுத்த தீர்மானத்தின்மீது வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் விலகியதால், காஸா போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது.

நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில், அமெரிக்காவைத் தவிர ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இதற்கு முன்னரும் இது போன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் `இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நுட்பமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் போர்நிறுத்த நடவடிக்கை தவறானது' என்று கூறி, அந்தத் தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தோல்வியடைய வைத்தது. இப்படியிருக்க, அமெரிக்காவின் இந்த விலகல் இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இதனால் விரக்தியடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ``ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சில நாள்களுக்கு முன்பு, பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையிலான போர்நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்தது. ஆனால், அப்போது ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோல்வியடைய வைத்தது.

இப்போது, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து எதுவும் இடம்பெறாத தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் அல்ஜீரியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் சேர்ந்து ஆதரித்திருக்கின்றன. ஆனால், இந்தப் புதிய தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வீழ்த்தவில்லை. இது, போரின் தொடக்கத்திலிருந்த தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து அமெரிக்கா தெளிவாக விலகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தத்தை ஏற்கும்படி இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டு கட்டாயப்படுத்துவது, ஹமாஸுக்கு நம்பிக்கையளிக்கும். இதனால், பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்படும்'' என்று தெரிவித்திருக்கிறார். அதோடு, தெற்கு காஸா நகரமான ரஃபாவில் திட்டமிட்ட இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய தூதுக்குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பும் திட்டங்களை நிறுத்திவைப்பதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இன்னொருபக்கம், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தத் தீர்மானத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.கொல்லப்பட்ட 30,000 பாலஸ்தீனர்கள்... உடலுறுப்பு திருட்டில் இஸ்ரேல்!


http://dlvr.it/T4dMp4

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...