Skip to main content

Baby loss Certificate: கருவில் இறக்கும் குழந்தையை அங்கீகரிக்க சான்றிதழ்... வரவேற்கும் பெண்கள்!

கருவுறும் பெண்கள் அனைவரும் குழந்தையைப் பெற்றெடுப்பதில்லை. எதிர்பாராத விதமாக சில குழந்தைகள் கருவிலேயே இறந்துவிடுகின்றன. காலங்கள் போகப் போக இறந்த குழந்தையின் நினைவுகள் பெற்றோரைத் தாண்டி யாருக்கும் தெரிவதில்லை. 

தோன்றாமலே மறைந்து போன உயிரின் நினைவுகள் யாரும் அறியாமலேயே மறைந்து போகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அரசு`Baby loss Certificate’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

Miscarriage

24 வாரங்களுக்கு முன்பு வரை கர்ப்பமாக இருந்து, குழந்தையை இழந்த பெற்றோருக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நேரிடும் குழந்தையின் இழப்பை முறையாக அங்கீகரிக்க இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

`Baby loss Certificate’ பெறத் தகுதியானவர்கள் யார்?!

கர்ப்பமாகி 24 வாரங்களுக்கு முன்பு குழந்தையை இழந்த இங்கிலாந்து பெண்கள் தங்கள் குழந்தையை நினைவுகூர்வதற்கான சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம். இச்சான்றிதழைப் பெற 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.

அதோடு சான்றிதழுக்காக விண்ணப்பிப்பவர்கள் செப்டம்பர் 1, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு குழந்தையை இழந்திருக்க வேண்டும்.  இதற்காக எந்தவித மருத்துவ ஆதாரத்தையும் வழங்கத் தேவையில்லை. குழந்தையின் இழப்பானது மருத்துவக் குழு  அல்லது மருத்துவரால் பதிவு செய்யப்படாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி பெண்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

என் நினைவுபெட்டியில் சிறு உயிரை சேமிக்கிறேன்...

இது குறித்து கர்ப்பமாக இருந்தபோது குழந்தையை இழந்த லாரா என்ற பெண் கூறுகையில், ``2020-ல் எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. இது என்னையும் என் கணவரையும் பாதித்தது, இது நாங்கள் அடிக்கடி பேசும் விஷயமல்ல. ஆனால், இறந்த என் குழந்தையை என்னால் மறக்கவே முடியாது. அந்த இழப்பு என்னில் ஒரு பகுதி.

கர்ப்பத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து என் குழந்தைகளுடன் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச விரும்புகிறேன். என்னை மகனுக்கு தற்போது 6 வயதாகிறது. எனது வயிற்றில் ஒரு சிறிய குழந்தை, அவனது சகோதரன் அல்லது சகோதரி இருந்தது அவனுக்குத் தெரியும்.

நம் குழந்தை இருந்ததை நிரூபிக்கும் அதிகாரபூர்வ ஆவணத்தை வைத்திருப்பது, வரவிருக்கும் ஆண்டுகளில் பேசுவதற்கும், நம் நினைவகப் பெட்டியில் வைத்திருப்பதற்கும் முக்கியமானது’’ என்றார். 

வெல்ஷ் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்கள் குழந்தை இழப்பு சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது...

Baby loss Certificate குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...