Skip to main content

ஆண்டுக்கு ரூ.692 கோடி மதிப்பில் உற்பத்தி; மகனிடம் 20 ஆண்டுகளாக ஏழை நாடகமாடிய தந்தை; காரணம் என்ன?

சீனாவின் ஹுனான் மாகாணத்தின், பிரபல சிற்றுண்டி நிறுவனத்தின் நிறுவனர் கோடீஸ்வரர் ஜாங் யுடொங் (Zhang Yudong). இவரது நிறுவனம் வருடத்துக்கு 600 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,92,66,54,358 மதிப்பிலான பொருள்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், இவருக்கு ஜான்ங் ஜிலோங் (Zhang Zilong) என்ற மகன் இருக்கிறார். அவர் சமீபத்தில் சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி, தற்போது சீனாவில் வைரலாகிவருகிறது.சீன யுவான்

அந்தப் பேட்டியில் பேசிய ஜான்ங் ஜிலோங், ``நான் சிறுவயது முதல் அதாவது எனக்கு 20 வயது ஆகும் வரை நாங்கள் கோடீஸ்வரர்கள் என்பதே எனக்குத் தெரியாது. சாதாரண குடியிருப்பில் வசித்து வந்தோம். சாதாரண பள்ளியில்தான் படித்தேன். எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது என்பது மட்டும் தெரியும். ஆனால், அந்த நிறுவனமும் கடனில் இயங்குவதாக அப்பா தெரிவித்திருந்தார். அதனால், அந்தக் கடன்களையெல்லாம் அடைக்க வேண்டும் எனக் கடுமையாகப் படித்தேன்.

படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தேன். அப்போது மாதம் 6,000 யுவான் சம்பளம் கிடைக்கும். அதை அப்பாவிடம் கொடுத்து கடனை அடைத்துவிடும்படி கூறுவேன். நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அப்பா எங்களின் பொருளாதார நிலை குறித்துத் தெரிவித்தார். அப்பா என்னிடம் எங்கள் சொத்து விவரத்தை மறைத்து பொய் கூறியதால்தான், உழைப்பின் அருமையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகே பெரிய வில்லாவுக்குக் குடிபெயர்ந்தோம்.ஜான்ங் ஜிலோங்

இப்போது நாங்கள் வசிக்கும் வில்லாவின் மதிப்பு மட்டுமே 1.4 மில்லியன் அமெரிக்க டாலர். என் செயல்பாட்டுக்கான நியாயத்தை, உழைப்பைக் கடுமையாக செலுத்தும்போதுதான் என்னிடம் நிறுவனத்தை ஒப்படைப்பேன் என அப்பா கூறிவிட்டார். அதனால், எங்கள் நிறுவனத்தைச் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முயன்றுவருகிறேன்" எனத் தெரிவித்தார். தற்போது இந்தப் பேட்டி சீனாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.சீனா டு பாகிஸ்தான்... அணுஆயுதம், ஏவுகணை தயாரிக்க உதவும் பொருள்கள் - மும்பையில் தடுத்து நிறுத்தம்!


http://dlvr.it/T4fD3J

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...