Skip to main content

USA: போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி: ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட அதிகாரி - எழும் கண்டனங்கள்

அமெரிக்காவில் முதுகலை படித்துவந்த இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா (23). ஆந்திராவைச் சேர்ந்தவரான இவர், Northeastern பல்கலைக்கழக்தில் முதுகலை படிப்பு படித்துவந்தார். இந்த நிலையில், 2023 ஜனவரி 5 அன்று, கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி போதையில் 120 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்ற போலீஸ் வாகனம், ஜாஹ்னவி கந்துலா மீது மோதியது. இதில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடந்த பிறகு போலீஸாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவை கடந்த திங்களன்று, சியாட்டில் (Seattle) காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் குழுவின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர், குழுத் தலைவரிடம், ``அவர் இறந்துவிட்டார். அவருக்கு 26 வயது இருக்கும். 11,000 டாலர் செக் ஒன்றை இவருக்கு எழுதுங்கள். அவருக்கு அவ்வளவுதான் மதிப்பு'' எனக் கேலிசெய்து சிரித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோவிலுள்ள (San Francisco) இந்தியத் துணைத் தூதரகம் மாணவியின் இறப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியது. இந்த நிலையில், தற்போது, விபத்து ஏற்படுத்திய கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரிக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க அரசு அவரை விடுவித்திருக்கிறது.கே.டி.ராமா ராவ்

இது குறித்துப் பேசிய ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினர், ``விபத்து ஏற்படுத்தியவர் விடுவிக்கப்பட்ட செய்தி எங்களுக்கு பேரதிர்ச்சி. எங்கள் மகளின் கொலை வழக்கைப் பற்றி நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோசமான செய்திகளையே பெறுகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.டி.ராமா ராவ்,``அமெரிக்காவின் இந்த முடிவு அவமானமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்திய தூதரகம் அமெரிக்க அதிகாரிகளுடன் இந்த விஷயம் குறித்து விவாதித்து, மகளை இழந்த குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். வெளி விவகார அமைச்சர் இந்த விவகாரத்தைத் தனது சக வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி சுதந்திரமான விசாரணையைக் கோரவும் நான் கேட்டுக்கொள்கிறேன். உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது சோகமானது. ஆனால் அதைவிடச் சோகம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு நீதியை அலட்சியம் செய்வது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அமெரிக்கா: `Please Help Me' - தாக்குதல், ரத்தம் சொட்ட வீடியோ வெளியிட்ட இந்திய மாணவர் - என்ன நடந்தது?

இது குறித்து சியாட்டில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பதிவில்,``ஜாஹ்னவி கந்துலாவின் வழக்கு தொடர்பாக அவரின் குடும்பப் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்வதில் தொடர்ந்து அனைத்து ஆதரவையும் வழங்கிவருகிறோம். சரியான தீர்வுக்காக சியாட்டில் காவல்துறை உட்பட உள்ளூர் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை வலுவாக பேசிவருகிறோம். இந்த வழக்கு இப்போது சியாட்டில் சிட்டி அட்டர்னி அலுவலகத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சியாட்டில் காவல்துறையின் நிர்வாக விசாரணை முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம், மேலும் வழக்கின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்போம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T3B5WT

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...