Skip to main content

Tinder: ஒரு நாளைக்கு 500 புரொஃபைல்களை ஸ்வைப் செய்த நபர்... கடைசியில் என்ன ஆனார் தெரியுமா..?

ஆன்லைன் டேட்டிங் தளமான `Tinder’-க்கு அடிமையாகி, சிகிச்சை பெருமளவுக்கு ஒருவர் சென்ற சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

கவனத்தையும் உடல்நலத்தையும் சிதறடிக்கக்கூடிய ஆயுதம் நம் கைகளிலேயே மொபைல் போன் வடிவத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா என மொபைலை திறந்தாலே மணிக்கணக்கில் நேரம் விழுங்கப்படுகிறது. இப்படி டேட்டிங் ஆப்பில் தனது மனநலத்தை ஒருவர் தொலைத்திருக்கிறார்.

டேட்டிங்

இன்றைய சூழலில் பிரபலமாக அறியப்படும் ஒரு டேட்டிங் ஆப் `Tinder’. இந்த ஆப் மூலமாக தெரியாத நபர்களைத் தொடர்பு கொண்டு பேசி, சந்தித்து, அவர்களுடன் பழகி உறவை வளர்த்துக் கொள்ள முடியும். தங்களுக்குப் பொருத்தமான நபர்களை அவர்களின் புரொஃபைல் பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.

இதற்காக இடது அல்லது வலது புறமாக ஸ்வைப் செய்தால் போதும், பலரின் புரொஃபைல் வந்தவண்ணம் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மில்லியன் கணக்கானோர் இந்த ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

பிரிட்டிஷை சேர்ந்த ஒருவர், இந்த ஆப்பை பயன்படுத்தி தனது புரொஃபைலை எத்தனை பெண்கள் லைக் செய்கிறார்கள் என்பதை அறிய முயன்றுள்ளார். அவருக்கு பெரும்பாலும் பெண்களைச் சந்திப்பதிலோ, தனக்கான பொருத்தமான பெண்ணை காண்பதிலோ விருப்பம் இல்லை. 

தன்னுடைய புரொஃபைலுக்கு எத்தனை லைக்ஸ் வருகிறது என்பதில் மட்டும் மனம் குதூகலித்து இருக்கிறது. இதற்காக அதிக புரொஃபைல்களை ஸ்வைப் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். ஒரே நேரத்தில் 10 பெண்களோடு பேசுவார், அவர்கள் அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தார். 

யாரையாவது வெளியே அழைத்து அவர்களுடன் இணக்கமாகி உறவில் இருந்தாலும் அது அவருக்கு பிடிக்கவில்லை. மீண்டும் ஆப்பிற்கு சென்று புரொஃபைல்களை ஸ்வைப் செய்ய ஆரம்பித்துள்ளார். ஒருநாளைக்கு 500 புரொஃபைல்களை ஸ்வைப் செய்யும் அளவிற்கு அடிமையாகி உள்ளார்.

stress

அதனை தொடர்ந்து டிப்ரெஷன் மற்றும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் (Depression and Borderline personality disorder) என்ற மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டவர், டேட்டிங் ஆப்பை பயன்படுத்துவதை தற்போது முற்றிலும் நிறுத்தியுள்ளார். 

இது குறித்து அந்த நபர் கூறுகையில், ``நான் எல்லோருடைய புரொஃபைலையும் வலதுபுறமாக ஸ்வைப் செய்து, விளையாட்டில் முழுமையாக மூழ்கியதால், என் சுய உணர்வை இழந்தேன். ஒரு பெண் எனது மெசேஜுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அது என்னை மிகவும் பாதித்தது. இது போன்ற ஆப்கள் எனது முழு மனநிலையையும் பர்சனாலிட்டியையும் பாதித்தது’’ என்று கூறியுள்ளார்.  

உங்கள் நேரத்தை அதிகம் திருடும் ஆப் எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...