Skip to main content

Tinder: ஒரு நாளைக்கு 500 புரொஃபைல்களை ஸ்வைப் செய்த நபர்... கடைசியில் என்ன ஆனார் தெரியுமா..?

ஆன்லைன் டேட்டிங் தளமான `Tinder’-க்கு அடிமையாகி, சிகிச்சை பெருமளவுக்கு ஒருவர் சென்ற சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

கவனத்தையும் உடல்நலத்தையும் சிதறடிக்கக்கூடிய ஆயுதம் நம் கைகளிலேயே மொபைல் போன் வடிவத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா என மொபைலை திறந்தாலே மணிக்கணக்கில் நேரம் விழுங்கப்படுகிறது. இப்படி டேட்டிங் ஆப்பில் தனது மனநலத்தை ஒருவர் தொலைத்திருக்கிறார்.

டேட்டிங்

இன்றைய சூழலில் பிரபலமாக அறியப்படும் ஒரு டேட்டிங் ஆப் `Tinder’. இந்த ஆப் மூலமாக தெரியாத நபர்களைத் தொடர்பு கொண்டு பேசி, சந்தித்து, அவர்களுடன் பழகி உறவை வளர்த்துக் கொள்ள முடியும். தங்களுக்குப் பொருத்தமான நபர்களை அவர்களின் புரொஃபைல் பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.

இதற்காக இடது அல்லது வலது புறமாக ஸ்வைப் செய்தால் போதும், பலரின் புரொஃபைல் வந்தவண்ணம் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மில்லியன் கணக்கானோர் இந்த ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

பிரிட்டிஷை சேர்ந்த ஒருவர், இந்த ஆப்பை பயன்படுத்தி தனது புரொஃபைலை எத்தனை பெண்கள் லைக் செய்கிறார்கள் என்பதை அறிய முயன்றுள்ளார். அவருக்கு பெரும்பாலும் பெண்களைச் சந்திப்பதிலோ, தனக்கான பொருத்தமான பெண்ணை காண்பதிலோ விருப்பம் இல்லை. 

தன்னுடைய புரொஃபைலுக்கு எத்தனை லைக்ஸ் வருகிறது என்பதில் மட்டும் மனம் குதூகலித்து இருக்கிறது. இதற்காக அதிக புரொஃபைல்களை ஸ்வைப் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். ஒரே நேரத்தில் 10 பெண்களோடு பேசுவார், அவர்கள் அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தார். 

யாரையாவது வெளியே அழைத்து அவர்களுடன் இணக்கமாகி உறவில் இருந்தாலும் அது அவருக்கு பிடிக்கவில்லை. மீண்டும் ஆப்பிற்கு சென்று புரொஃபைல்களை ஸ்வைப் செய்ய ஆரம்பித்துள்ளார். ஒருநாளைக்கு 500 புரொஃபைல்களை ஸ்வைப் செய்யும் அளவிற்கு அடிமையாகி உள்ளார்.

stress

அதனை தொடர்ந்து டிப்ரெஷன் மற்றும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் (Depression and Borderline personality disorder) என்ற மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டவர், டேட்டிங் ஆப்பை பயன்படுத்துவதை தற்போது முற்றிலும் நிறுத்தியுள்ளார். 

இது குறித்து அந்த நபர் கூறுகையில், ``நான் எல்லோருடைய புரொஃபைலையும் வலதுபுறமாக ஸ்வைப் செய்து, விளையாட்டில் முழுமையாக மூழ்கியதால், என் சுய உணர்வை இழந்தேன். ஒரு பெண் எனது மெசேஜுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அது என்னை மிகவும் பாதித்தது. இது போன்ற ஆப்கள் எனது முழு மனநிலையையும் பர்சனாலிட்டியையும் பாதித்தது’’ என்று கூறியுள்ளார்.  

உங்கள் நேரத்தை அதிகம் திருடும் ஆப் எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...