Skip to main content

Happy Teeth: வாய் துர்நாற்றம் நீங்க இந்த 3 விஷயம் பண்ணினா போதும்! I Bad Breath

Bad Breath பிரச்னைக்கான தீர்வுகள்

வாய் துர்நாற்றத்துக்கான காரணங்களை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதற்கான தீர்வுகள் பற்றி இந்த அத்தியாயத்தில் பேசியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி

வாய் துர்நாற்றம் I Bad Breath

வாய் துர்நாற்றம் இருப்பதைக் கண்டறிவதற்கென்று பிரத்யேக அறிகுறிகள் எதுவும் இருக்காது. நாம் சுயமாகவே உணர்ந்துகொண்டால்தான் தெரிய வரும். சில நேரங்களில் குடும்பத்தினர், நண்பர்கள் சொல்லக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு மவுத் ஃபிரெஷ்னர், மவுத்வாஷ் போன்ற எதுவும் தீர்வாகாது.

Tooth Pick வேண்டாமே!

மவுத் வாஷ் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதே துர்நாற்றத்துக்கு வழிவகுக்கலாம். அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆல்கஹால் வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது தொடரும்போது துர்நாற்றம் (Bad Breath) ஏற்படும்.

Tooth Pick வேண்டாமே!

அதேபோல சிலருக்கு உணவு உட்கொண்டதும் 'டூத் பிக்' (Tooth Pick) பயன்படுத்தி பற்களைச் சுத்தப்படுத்தும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறானது. 'டூத் பிக்' பயன்பாட்டை பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கமாட்டார்கள்.

'டூத் பிக்' பயன்படுத்தும்போது இரண்டு பற்களுக்கு நடுவில் கூடுதல் இடைவெளி ஏற்படும். அடுத்த முறை சாப்பிடும்போது அந்த இடைவெளியில் உணவுத்துணுக்குகள் சிக்கலாம். உணவுத் துணுக்குகள் தொடர்ந்து சிக்கும்போது வாயில் துர்நாற்றம் ஏற்படும். உணவு உட்கொண்டதும் வாய்க்கொப்பளித்தாலே போதுமானது. வாயில் சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளை வெளியேற்ற ஃபிளாசிங் (Flossing) செய்வது பயனளிக்கும். ஆனால் நமது நாட்டில் அது அவ்வளவு பிரபலமடையவில்லை.

Flossing

காரணம் கண்டறிக!

வாய் துர்நாற்றத்துக்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். சர்க்கரை நோய், சொத்தைப் பல், குறட்டை, அஜீரணப் பிரச்னை உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தால் அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாலே வாய் துர்நாற்றம் சரியாகிவிடும்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம், கார்பனேட்டடு குளிர்பானங்கள் அடிக்கடி குடிப்பது போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தைக் கைவிட்டால்தான் பிரச்னை சரியாகும்.

3 எளிய விஷயங்கள்

பொதுவாக 80 சதவிகிதம் பேருக்கு வாய் சுகாதாரத்தைப் பேணாததால்தான் இந்தப் பிரச்னை ஏற்படும். வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்கான எளிதான வழி என்னவென்றால் வாய் உலர்ந்து போகாமல் தடுக்க வேண்டும்.

Dr. Suresh Veeramani

அதற்கு அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏதாவது சாப்பிட்டால் உடனே வாய்க் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரஷ் செய்ய வேண்டும். இந்த மூன்று பழக்கங்களைப் பின்பற்றினாலே பல் சுகாதாரத்தினால் ஏற்பட்ட வாய் துர்நாற்றத்துக்கு தீர்வு கண்டுவிடலாம்.

இருக்கு.. ஆனா இல்ல!

சிலருக்கு வாய் துர்நாற்றம் இல்லாவிட்டாலும் தனக்கு பிரச்னை இருப்பதாகத் தோன்றலாம். அப்படிப்பட்டவர்களும் மருத்துவரை அணுகி சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம். வாய் சுகாதாரம் நன்றாகப் பேணினாலும் வாய் துர்நாற்றம் இருந்தால் மருத்துவரை அணுகி பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். வாய் துர்நாற்றம் இருந்தால் முதலில் பல் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவக் காரணங்களை ஆராய்ந்துவிட்டு தேவைப்பட்டால் அவர் வேறு மருத்துவருக்குப் பரிந்துரைப்பார்" என்றார் அவர்.

Brushing

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...