Skip to main content

Happy Teeth: வாய் துர்நாற்றம் நீங்க இந்த 3 விஷயம் பண்ணினா போதும்! I Bad Breath

Bad Breath பிரச்னைக்கான தீர்வுகள்

வாய் துர்நாற்றத்துக்கான காரணங்களை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதற்கான தீர்வுகள் பற்றி இந்த அத்தியாயத்தில் பேசியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி

வாய் துர்நாற்றம் I Bad Breath

வாய் துர்நாற்றம் இருப்பதைக் கண்டறிவதற்கென்று பிரத்யேக அறிகுறிகள் எதுவும் இருக்காது. நாம் சுயமாகவே உணர்ந்துகொண்டால்தான் தெரிய வரும். சில நேரங்களில் குடும்பத்தினர், நண்பர்கள் சொல்லக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு மவுத் ஃபிரெஷ்னர், மவுத்வாஷ் போன்ற எதுவும் தீர்வாகாது.

Tooth Pick வேண்டாமே!

மவுத் வாஷ் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதே துர்நாற்றத்துக்கு வழிவகுக்கலாம். அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆல்கஹால் வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது தொடரும்போது துர்நாற்றம் (Bad Breath) ஏற்படும்.

Tooth Pick வேண்டாமே!

அதேபோல சிலருக்கு உணவு உட்கொண்டதும் 'டூத் பிக்' (Tooth Pick) பயன்படுத்தி பற்களைச் சுத்தப்படுத்தும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறானது. 'டூத் பிக்' பயன்பாட்டை பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கமாட்டார்கள்.

'டூத் பிக்' பயன்படுத்தும்போது இரண்டு பற்களுக்கு நடுவில் கூடுதல் இடைவெளி ஏற்படும். அடுத்த முறை சாப்பிடும்போது அந்த இடைவெளியில் உணவுத்துணுக்குகள் சிக்கலாம். உணவுத் துணுக்குகள் தொடர்ந்து சிக்கும்போது வாயில் துர்நாற்றம் ஏற்படும். உணவு உட்கொண்டதும் வாய்க்கொப்பளித்தாலே போதுமானது. வாயில் சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளை வெளியேற்ற ஃபிளாசிங் (Flossing) செய்வது பயனளிக்கும். ஆனால் நமது நாட்டில் அது அவ்வளவு பிரபலமடையவில்லை.

Flossing

காரணம் கண்டறிக!

வாய் துர்நாற்றத்துக்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். சர்க்கரை நோய், சொத்தைப் பல், குறட்டை, அஜீரணப் பிரச்னை உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தால் அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாலே வாய் துர்நாற்றம் சரியாகிவிடும்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம், கார்பனேட்டடு குளிர்பானங்கள் அடிக்கடி குடிப்பது போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தைக் கைவிட்டால்தான் பிரச்னை சரியாகும்.

3 எளிய விஷயங்கள்

பொதுவாக 80 சதவிகிதம் பேருக்கு வாய் சுகாதாரத்தைப் பேணாததால்தான் இந்தப் பிரச்னை ஏற்படும். வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்கான எளிதான வழி என்னவென்றால் வாய் உலர்ந்து போகாமல் தடுக்க வேண்டும்.

Dr. Suresh Veeramani

அதற்கு அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏதாவது சாப்பிட்டால் உடனே வாய்க் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரஷ் செய்ய வேண்டும். இந்த மூன்று பழக்கங்களைப் பின்பற்றினாலே பல் சுகாதாரத்தினால் ஏற்பட்ட வாய் துர்நாற்றத்துக்கு தீர்வு கண்டுவிடலாம்.

இருக்கு.. ஆனா இல்ல!

சிலருக்கு வாய் துர்நாற்றம் இல்லாவிட்டாலும் தனக்கு பிரச்னை இருப்பதாகத் தோன்றலாம். அப்படிப்பட்டவர்களும் மருத்துவரை அணுகி சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம். வாய் சுகாதாரம் நன்றாகப் பேணினாலும் வாய் துர்நாற்றம் இருந்தால் மருத்துவரை அணுகி பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். வாய் துர்நாற்றம் இருந்தால் முதலில் பல் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவக் காரணங்களை ஆராய்ந்துவிட்டு தேவைப்பட்டால் அவர் வேறு மருத்துவருக்குப் பரிந்துரைப்பார்" என்றார் அவர்.

Brushing

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...