Skip to main content

Doctor Vikatan: சர்க்கரைநோய் கிடையாது; தினமும் இனிப்பு சாப்பிடலாமா..? உடலுக்கு நல்லதா?

Doctor Vikatan: எனக்கு தினமும் ஏதேனும் ஸ்வீட் சாப்பிடும் வழக்கம் உண்டு. சர்க்கரைநோய்  இல்லை. தினமும் ஏதேனும் ஒரு வேளை உணவுடன் இனிப்பு சாப்பிட்டால்தான் உணவு உண்ட முழுமையான உணர்வே கிடைக்கிறது. இதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது?

பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் 

டயட்டீஷியன் கற்பகம்

ஒருவருக்கு அடிக்கடி இனிப்பு சாப்பிட வேண்டும் எனத் தோன்ற பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில உடல்ரீதியான காரணங்களாகவும், சில மனரீதியான காரணங்களாகவும் இருக்கலாம்.

பெரும்பாலும் இனிப்புத்தேடல் என்பது ரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையின்மையின் அறிகுறியாகவே வெளிப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, ஏதேனும் இனிப்பாகச் சாப்பிட வேண்டும் போலத் தோன்றும். அடுத்து இந்த விஷயத்தில் உங்கள் தூக்கமும் கவனிக்கப்பட வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

தூக்கம்

ஒரு மனிதருக்கு தினமும் 8 மணி நேரத் தூக்கம் முக்கியம். அந்தத் தூக்கம் கிடைக்காதபோது, காலையில் எழுந்ததும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த உணவுத்தேடல், சிலருக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் போலவும், சிலருக்கு உப்பான உணவுகள் சாப்பிட வேண்டும் போலவும், வேறு சிலருக்கு கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிட வேண்டும் போலவும் தோன்றலாம்.

பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இனிப்புத் தேடல் இருப்பது இயல்பு. தினமும் மதிய உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது, இரவு உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது என பலகாலமாக நீங்கள் பின்பற்றும் பழக்கம், உங்கள் நினைவில் பதிந்து, அதை  தினமும் செய்யவைத்துவிடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

மாதவிடாய்

இனிப்பு உணவுகளின் மீதான அடிக்ஷன் காரணமாகவும் இப்படி தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் தொடரலாம். அதேபோல, மக்னீசியம் குறைபாடு காரணமாகவும்  இனிப்புத் தேடல் ஏற்படலாம்.  உடலுக்கு ஏதோ சத்து தேவைப்படுகிறது, ஆனால் அது குறைவாக இருக்கிறது என்ற நிலையில், அது இப்படி இனிப்புத் தேடலாக வெளிப்படும்.

இந்தப் பழக்கத்தை எளிதாகச் சமாளிக்கலாம். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் இருக்க வேண்டும். புரோட்டீன் என்பது பால், முட்டை, நட்ஸ், சீட்ஸ், பருப்பு வகைகள், முளைகட்டிய பயறுகள், அசைவ உணவுகள் என பல வழிகளில் நமக்குக் கிடைக்கும். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது நமக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். அதனால் உணவுத் தேடல் இருக்காது.

புரோட்டீன்

தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதும் முக்கியம். உடலில் நீர்ச்சத்து குறையும்போதும்  இனிப்பான உணவுகளைச் சாப்பிடும் உணர்வோ, உப்பான உணவுகளின் மீது ஈர்ப்போ ஏற்படலாம். நட்ஸ், சீட்ஸ், வாழைப்பழம் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளதால், அதுவும் இந்த வகை இனிப்புத் தேடலைத் தடுக்கும். தினமும் இனிப்பு சாப்பிடுவது என்பது உங்கள் கலோரி அளவுகளை அதிகரித்து, உடல் பருமனுக்கு வழி வகுக்கும். பல் சொத்தைக்கும் காரணமாகும். உடல் பருமன் அதிகரித்தால் நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளும் வரும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் சரியானது. அதையும் மீறி கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...