Skip to main content

Doctor Vikatan: மஞ்சள் காமாலை (jaundice) அறிகுறிகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாதா?

Doctor Vikatan: வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம், வாந்தி என இருந்த என் 10 வயது மகனுக்கு மஞ்சள் காமாலை (jaundice) வந்ததைக் கண்டுபிடிக்காமல் மாத்திரை மேல் மாத்திரைகளாகக் கொடுத்து நோய் அதிகமாகி சீரியஸ் ஆகிவிட்டது. மஞ்சள் காமாலை பாதிப்பை ஓரிரு நாள்களிலேயே தெரிந்துகொள்ள முடியாதா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நீங்கள் உங்கள் மகனுக்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம் போன்ற பிரச்னைகள் தனித்தனியே இருந்தால் அது சாதாரண பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை குறிகுணங்களும் வாந்தியோடு சேர்ந்து இருக்கும்பட்சத்தில், அது கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்றே சந்தேகிக்க வேண்டும். சாமானியருக்கு அதை அப்படிப் பொருத்திப் பார்க்கத் தோன்றாதுதான். 

இத்தகைய அறிகுறிகள் சேர்ந்துவரும்போது தாமதிக்காமல் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுப்பதுதான் நல்லது. 10 வயதுச் சிறுவனுக்கு வயிற்று உப்புசம் வருவது தவறான விஷயம். அது எப்போதாவது வரலாமே தவிர, அடிக்கடி ஏற்பட்டால் நிச்சயம் வேறு ஏதோ பாதிப்பு இருப்பதாகவே அர்த்தம்.  கண்களில் நிற மாற்றம், சருமத்தில் நிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதன் மூலம் மஞ்சள் காமாலையாக இருக்குமோ என சந்தேகிக்கலாம்.

கல்லீரல்

எந்த அறிகுறியாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனையும் அவரது பரிந்துரையின் பேரில் சிகிச்சையும் எடுப்பதுதான் சரி. குழந்தைகள் விஷயத்தில் இதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நீங்களாக மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது தவறு. எந்தப் பிரச்னையானாலும் மருந்துக் கடையில் கேட்டு மாத்திரைகள் சாப்பிடும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதுவேகூட கல்லீரலை பாதிக்கக்கூடியது.

இப்போதும் ஒன்றும் பிரச்னையில்லை. உங்கள் மகனை முறையான மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். சரியான சிகிச்சையின் மூலம் கல்லீரல் நோய்களை சரிசெய்ய முடியும். மற்ற நோய்களைப் போல கல்லீரல் நோய்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. நிறைய பேருக்கு புற்றுநோய் பாதித்த பிறகுதான் கல்லீரல் பாதிப்பே தெரியவரும்.

தண்ணீர்

இப்போதைய தலைமுறையில், கல்லீரலில் கொழுப்பு படியும் 'ஃபேட்டி லிவர்' பிரச்னை அதிகம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த விஷயத்திலும் கவனம் தேவை. குழந்தைகளுக்கு சுகாதாரத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டியது மிக முக்கியம். சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பது, சுகாதாரமற்ற நீரைக் குடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்லித் தர வேண்டும். தண்ணீர் மூலமும் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம் என்பதால் அதிலும் கவனம் வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...