Skip to main content

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் (Dates) சாப்பிடலாமா?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா... உலர் திராட்சை, அத்திப்பழம் சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

எந்த உணவையும் சாப்பிட்ட பிறகு  ரத்தச் சர்க்கரை அளவு  எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பது 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index ). இந்த கிளைசெமிக் இண்டெக்ஸானது, டிரை ஃப்ரூட்ஸில் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.

உலர் பழங்களில், குறிப்பாக பேரீச்சம் பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்துகள் இருப்பதால் இவை ஆரோக்கியமானவைதான். பேரீச்சம் பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவுதான். ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எத்தனை எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக மிக முக்கியம்.

Dry Fruits

பழ ஜூஸ் அல்லது பிரெட் சாப்பிடுவதைவிட, உலர் பழங்கள் சாப்பிடுவது சிறந்தது என பல ஆய்வுகள் சொல்கின்றன். அந்த வகையில் 2 பேரீச்சம்பழம் சாப்பிடலாம். 100 கிராம் ஃப்ரெஷ் பேரீச்சம்பழத்தில் 75 கிராம்  அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது. ஆனாலும், அதைச் சாப்பிடுவதால் கிளெசெமிக் இண்டெக்ஸ் அளவு அதிகம் கூடுவதில்லை.

2 பேரீச்சம் பழம் என்பதும் நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  மூன்றுமாத ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறி இருப்பவர்கள் எடுக்கக்கூடாது. உலர் திராட்சையைப் பொறுத்தவரை  அதில் 60 சதவிகிதம் சர்க்கரைச்சத்து இருக்கிறது. அதனால், அதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.

அதை தயிரில், ஓட்ஸ் கஞ்சியில், சாலட் தயாரிப்பில் என எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம். அதுவும் உங்கள் மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும்.

HbA1c

அத்திப்பழத்தைப் பொறுத்தவரை ஃப்ரெஷ்ஷான பழத்தில் கிளெசெமிக் இண்டெக்ஸ் ரொம்பவே குறைவு. அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் என்பதால் எடுத்துக்கொள்ளலாம். உலர் அத்திப்பழத்தோடு ஒப்பிடுகையில், ஃப்ரெஷ்ஷான பழம் சிறந்தது. உலர் அத்திப்பழத்தை ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...