Skip to main content

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் (Dates) சாப்பிடலாமா?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா... உலர் திராட்சை, அத்திப்பழம் சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

எந்த உணவையும் சாப்பிட்ட பிறகு  ரத்தச் சர்க்கரை அளவு  எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பது 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index ). இந்த கிளைசெமிக் இண்டெக்ஸானது, டிரை ஃப்ரூட்ஸில் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.

உலர் பழங்களில், குறிப்பாக பேரீச்சம் பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்துகள் இருப்பதால் இவை ஆரோக்கியமானவைதான். பேரீச்சம் பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவுதான். ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எத்தனை எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக மிக முக்கியம்.

Dry Fruits

பழ ஜூஸ் அல்லது பிரெட் சாப்பிடுவதைவிட, உலர் பழங்கள் சாப்பிடுவது சிறந்தது என பல ஆய்வுகள் சொல்கின்றன். அந்த வகையில் 2 பேரீச்சம்பழம் சாப்பிடலாம். 100 கிராம் ஃப்ரெஷ் பேரீச்சம்பழத்தில் 75 கிராம்  அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது. ஆனாலும், அதைச் சாப்பிடுவதால் கிளெசெமிக் இண்டெக்ஸ் அளவு அதிகம் கூடுவதில்லை.

2 பேரீச்சம் பழம் என்பதும் நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  மூன்றுமாத ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறி இருப்பவர்கள் எடுக்கக்கூடாது. உலர் திராட்சையைப் பொறுத்தவரை  அதில் 60 சதவிகிதம் சர்க்கரைச்சத்து இருக்கிறது. அதனால், அதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.

அதை தயிரில், ஓட்ஸ் கஞ்சியில், சாலட் தயாரிப்பில் என எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம். அதுவும் உங்கள் மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும்.

HbA1c

அத்திப்பழத்தைப் பொறுத்தவரை ஃப்ரெஷ்ஷான பழத்தில் கிளெசெமிக் இண்டெக்ஸ் ரொம்பவே குறைவு. அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் என்பதால் எடுத்துக்கொள்ளலாம். உலர் அத்திப்பழத்தோடு ஒப்பிடுகையில், ஃப்ரெஷ்ஷான பழம் சிறந்தது. உலர் அத்திப்பழத்தை ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...